ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு

அல்​பாட்டா: கனடா​வில் நடை​பெற்ற ஜி7 உச்சி மாநாட்​டில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​றார். பிரதமர் நரேந்​திர மோடி, 3 நாடு​களுக்​கான 5 நாள்​கள் அரசு​முறைப் பயணத்​தின் முதல் கட்​ட​மாக, மத்​தி​ய தரைக் கடல் பகுதியில் அமைந்​துள்ள தீவு நாடான சைப்​ரஸுக்கு கடந்த 15-ம் தேதி சென்​றார். இதைத் தொடர்ந்து அங்​கிருந்து திங்​கள்​கிழமை மாலை புறப்​பட்​டார். இந்​நிலை​யில், நேற்று காலை கனடாவுக்கு பிரதமர் மோடி சென்​றடைந்​தார்.

கனடா​வின் அல்​பாட்டா நகரிலுள்ள கால்​கரி விமான​ நிலை​யத்​தில் அந்​நாட்டு அரசுத் தரப்​பில் சிறப்​பான வரவேற்பு அளிக்​கப்​பட்​டது. இதில் கனடா நாட்​டின் உயர் அதி​காரி​கள் கலந்​து​கொண்​டனர். இதைத் தொடர்ந்து அங்கு வசிக்​கும் இந்​திய வம்​சாவளி​யினர் பிரதமர் மோடியைச் சந்​தித்​தனர்.

கனடா​விலுள்ள பத்​திரி​கை​யாளர் ஹலீமா சாடியா கூறும்​போது, “கன​டா​வில் 15 லட்​சம் இந்​திய வம்​சாவளி​யினர் வசிக்​கின்​றனர். கடந்த 2 வருடங்​களாக இந்​தி​யா, கனடா உறவு மோச​மாக இருப்​பது இந்​திய வம்​சாவளி​யினரிடையே மன உளைச்​சலை ஏற்படுத்தியிருந்​தது” என்​றார்.

கனடா​விலுள்ள இந்து அமைப்​பின் தலை​வர் விஷால் சைனி கூறும்​போது, “பிரதமர் மோடியை வரவேற்​கிறோம். இந்​தி​யா, கனடா​வின் பொருளா​தார வளர்ச்​சிக்​காக 15 லட்​சம் இந்​திய வம்​சாவளி​யினர் முக்​கிய பங்​களிக்​கின்​றனர்” என்​றார். மாலை​யில் கனனாஸ்​கிஸ் பகு​தி​யில் ‘ஜி7’ உச்சி மாநாடு தொடங்​கியது. இதில் பிரதமர் மோடி கலந்​து​கொண்​டார். மாநாட்​டில் அமெரிக்​கா, பிரான்​ஸ், பிரிட்​டன், ஜெர்​மனி, ஜப்​பான், இத்​தாலி, கனடா உள்​ளிட்ட நாடு​களின் தலை​வர்​கள் பங்​கேற்​றனர்.

மாநாட்​டையொட்டி பல்​வேறு நாடு​களின் தலை​வர்​களு​டன் இருதரப்பு பேச்​சு​வார்த்​தையை பிரதமர் மோடி நடத்​து​வார் எனத் தெரிய​வந்​துள்​ளது. மாநாட்​டில் பங்​கேற்று முடித்த பின்​னர் இன்​று(ஜூன் 18) குரேஷி​யா​வுக்கு பிரதமர் மோடி செல்​ல​வுள்​ளார். அங்கு அந்​நாட்​டின் அதிபர் ஸோரன் மிலனோ​விச், பிரதமர் ஆன்ட்​ரேஜ் பிலென்​கோ​விச்​ ஆகியோரை அவர்​ சந்​தித்​துப்​ பேசவுள்​ளார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.