அண்ணாச்சி தயவில் அடுத்த முயற்சி! – வாசுதேவநல்லூருக்கு அடிபோடும் தனுஷ் எம்.குமார்

தென்காசி மக்களவை தொகுதியில் 2019-ல் தனது விசுவாசியான தனுஷ் எம்.குமாரை நிறுத்தி எம்பி-யாக்கினார் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் அண்ணாச்சி. தென்காசி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான அண்ணாச்சி, அங்கே தனக்கென ஒரு ஆதரவு வட்டத்தை உண்டாக்குவதற்காக தனுஷ் எம்.குமாரை அடுத்த கட்டமாக தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு முன்னிறுத்தினார்.

ஆனால், உட்கட்சிக்குள் எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக அந்த முயற்சி பலிக்காமல் போனது. இதையடுத்து தனுஷ் எம்.குமாருக்கு 2024-ல் மீண்டும் எம்பி சீட்டும் கிடைக்காமல் போனது. இருப்பினும் மனம் தளராத மனிதர், அடுத்ததாக அண்ணாச்சியின் அரவணைப்பில் வாசுதேவநல்லூர் தொகுதியில் போட்டியிட இப்போது சத்தமில்லாமல் காய்நகர்த்தி வருகிறார்.

இதுகுறித்து நம்​மிடம் பேசிய விருதுநகர் மாவட்ட திமுக-​வினர் சிலர், “தனுஷ் எம்​.கு​மாரின் தந்​தை​யான தனுஷ்கோடி எம்​ஜிஆர் காலத்​தில் ராஜ​பாளை​யம் தொகுதி அதி​முக எம்​எல்​ஏ-​வாக இருந்​தவர். அப்​போ​திருந்தே கே.கே.எஸ்​.எஸ்​.ஆர் அண்​ணாச்​சிக்கு நெருக்​க​மாக இருந்த தனுஷ்கோடி, அண்​ணாச்சி திமுக-வுக்கு புலம்​பெயர்ந்த பிறகு தானும் திமுக-வுக்கு வந்​தவர். விருதுநகர் மாவட்ட திமுக-​வில் அதி​காரப் புள்​ளி​யாக அண்​ணாச்சி அவதா​ரமெடுத்த பிறகு பரம்​பரை திமுக-​காரர்​களான வி.பி.​ராஜன் உள்​ளிட்​ட​வர்​களை ஒதுக்​கித் தள்​ளி​விட்டு அதி​முக நண்​பர்​களை​யும் அவர்​களது வாரிசுகளை​யும் முன்​னுக்​குக் கொண்டு வந்​தார். அப்​படிக் கொண்டு வரப்​பட்​ட​வர் தான் தனுஷ் எம்​.கு​மார்.

தனுஷ் எம்​.கு​மார் கடந்த 15 ஆண்​டு​களாக விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்​பாள​ராக இருக்​கி​றார். 2024-ல் அவருக்கு மீண்​டும் எம்பி சீட் கிடைக்​காத நிலை​யில், விளை​யாட்டு மேம்​பாட்டு பிரிவு மாநில துணைச் செய​லா​ளர் பொறுப்பை வாங்​கித் தந்​தார் அண்​ணாச்​சி. தென்​காசி வடக்கு மாவட்ட செய​லா​ளர் பதவிக்கு அண்​ணாச்சி ஆதர​வில் தனுஷ் எம்​.கு​மார் காய்​நகர்த்​திய போது அந்த மாவட்​டத்​தில் எதிர்ப்​புக் கிளம்​பியது. உட்​கட்​சித் தேர்​தலை எதிர்த்து சிலர் நீதி​மன்​றம் வரைக்​கும் போனார்​கள்.

இதனால் அப்​போது குமா​ரால் மாவட்​டச் செய​லா​ளர் ஆகமுடிய​வில்​லை. இந்த நிலை​யில் அண்​மை​யில், வாசுதேவநல்​லூர் தொகு​தி​யின் மேலிடப் பார்​வைளா​ராக தனுஷ் எம்​.கு​மாரை நியமித்​திருக்​கிறது திமுக தலை​மை. அதை வைத்​துக் கொண்டு அந்​தத் தொகு​தி​யில் போட்​டி​யிடு​வதற்​காக வழக்​கம் போல அண்​ணாச்சி தயவுடன் தீவிர களப்​பணி ஆற்றி வரு​கி​றார்” என்​றார்​கள்.

வாசுதேவநல்​லூர் தொகு​தி​யில் போட்​டி​யிடும் முடி​வில் இருக்​கிறீர்​களா என தனுஷ் எம்​.கு​மாரிடம் கேட்​டதற்​கு, “தென்​காசி தொகுதி எம்​பி-​யாக பணி​யாற்​றும் வாய்ப்பை முதல்​வர் எனக்கு அளித்​தார். தற்​போது விருதுநகர் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்​பாளர், விளை​யாட்டு மேம்​பாட்டு பிரிவு மாநில துணைச் செய​லா​ளர், வாசுதேவநல்​லூர் தொகுதி மேலிடப் பார்​வை​யாளர் பொறுப்​பு​களு​டன் அமைச்​சர் கே.கே.எஸ்​.எஸ்​.ஆரின் வழி​காட்​டு​தலில் கட்​சிப் பணி​யாற்றி வரு​கிறேன்.

கடந்த 4 மாதங்​களாக வாசுதேவநல்​லூர் தொகுதி முழு​வதும் சுற்​றுப்​பயணம் செய்து பூத் கமிட்​டிகளை முழு​மை​யாக அமைக்க நடவடிக்கை எடுத்​துள்​ளேன். வாசுதேவநல்​லூரில் திமுக வெற்​றி​பெற்று 50 ஆண்​டு​களுக்கு மேலாகி​விட்​டது. மீண்​டும் அங்கு திமுக-வை ஜெயிக்க வைப்​பதே எனது முதல் வேலை. மற்​றபடி, அங்கே நான் போட்​டி​யிடு​வேனா என்​பதை தலைமை தான் முடிவு செய்ய வேண்​டும்” என்​றார்.

மதி​முக தங்​களின் சிட்​டிங் தொகு​தி​யான வாசுதேவநல்​லூரை திமுக-வுக்கு விட்​டுக் கொடுக்​கு​மா… அப்​படியே விட்​டுக் கொடுத்​தா​லும், மாவட்​டச் செய​லா​ளர் பதவிக்கு வரு​வதற்கே தனுஷ் எம்​.கு​மாருக்கு எதிர்ப்​புத் தெரி​வித்த தென்​காசி திமுக-​வினர் வாசுதேவநல்​லூரில் அவரை ஜெயிக்க வைப்​பார்​களா என்​பதை எல்​லாம் பொறுத்​திருந்​து​தான் பார்க்க வேண்​டும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.