ஜடேஜாவிற்கு பிளேயிங் 11ல் இடமில்லை? அஸ்வினை போல ஓய்வை அறிவிக்க வாய்ப்பு?

India’s Playing XI vs England: இந்திய டெஸ்ட் அணியின் புதிய அத்தியாயம் நாளை இங்கிலாந்தில் தொடங்குகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற இந்திய அணி தவறியது. இந்நிலையில் அடுத்த சுழற்சிக்கான முதல் டெஸ்ட் போட்டி நாளை வெள்ளிக்கிழமை இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருடன் தொடங்குகிறது. இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் இந்திய அணி நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இல்லாமல் விளையாட உள்ளது. காரணம் இவர்கள் இருவரும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளனர். இதன் காரணமாக சுப்மான் கில் தலைமையில் இந்திய அணி விளையாட உள்ளது. கடந்த 18 ஆண்டுகளாக இந்திய அணி இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகளை வென்றது இல்லை. 

மேலும் படிங்க: 2026 டி20 மகளிர் உலக கோப்பை அட்டவணை வெளியீடு.. எப்போது, எங்கே நடக்கிறது?

இங்கிலாந்தின் கண்டிஷன்கள் பொருத்து அணியில் யார் யாரை எடுக்கலாம் என்ற குழப்பமும் கேள்வியும் ரசிகர்களை தாண்டி அணி நிர்வாகத்திற்கும் இருந்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஆல்ரவுண்டராக யாரை எடுக்கலாம் என்ற குழப்பம் நிலவி வருகிறது. ஸ்பின்னர் ஆல்ரவுண்டராக ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் உள்ளனர். பவுலிங் ஆல்ரவுண்டராக நிதிஷ் குமார் ரெட்டி, ஷர்துல் தாகூர் உள்ளனர். இந்த 4 பேரில் ஒருவரை தான் அணியில் எடுக்க முடியும். இருப்பினும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் வேகப்பந்துவீச்சுக்கு மைதானம் சாதகமாக இருக்கும், இதன் காரணமாக ஸ்பின்னர் ஆல் ரவுண்டரை கழட்டிவிட்டு பவுலிங் ஆல்ரவுண்டரை எடுக்கலாம் என்று முடிவு எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 

ரவீந்திர ஜடேஜாவிற்கு இடமில்லை? 

தற்போது இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த ஒரே வீரர் ஜடேஜா மட்டுமே. டெஸ்ட் போட்டிகளில் நம்பர் ஒன் ஆல்ரவுண்டராக ஜடேஜா இருந்து வருகிறார். அணிக்கு தேவையான நேரங்களில் விக்கெட்களை எடுத்தும், தேவையான இடங்களில் ரன்கள் அடித்தும் பல போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிக்க தவறிய போது ஜடேஜா சிறப்பாக பேட்டிங் செய்துள்ளார். 

நிதீஷ் குமார் ரெட்டிக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? 

கடந்த ஆண்டு நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரில் நிதிஷ் குமார் ரெட்டி 5 போட்டிகளிலும் விளையாடியிருந்தார். ஆனால் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரண்டு நாடுகளிலும் பிட்ச் சற்று வித்தியாசமாக இருக்கும். அனுபவம் இல்லாத நிதீஷ் குமார் ரெட்டிக்கு பிளேயிங் லெவலில் வாய்ப்பு கிடைக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டிங்கில் நிதிஷ்குமார் ரெட்டி கை கொடுத்தாலும், அவரது பவுலிங் அவ்வளவு சிறப்பாக இல்லை. இருப்பினும் பிட்ச் கண்டிஷனுக்காக அனுபவம் வாய்ந்த ஜடேஜாவிற்கு பதில் நிதிஷ் குமார் ரெட்டியை தேர்வு செய்வது மிகப் பெரிய தவறாக இருக்கும் என்றும் கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிங்க: முகமது அசாருதீன் முதல் மனைவி யார்? விவாகரத்துக்குப் பிறகு அவரது வாழ்க்கை எப்படி இருக்கிறது?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.