சென்னை: ராமாபுரம் அருகே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்றபோது ஏற்பட்ட விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில், கவனக்குறைவாக பணி செய்த L&T நிறுவனத்திற்கு மெட்ரோ ரயில்நிர்வாகம் ரூ. 1 கோடி அபராதம் விதித்துள்ளது. மேலும், கவனக்குறைவாக பணியாற்றிய 4 பொறியாளர்கள் மெட்ரோ திட்ட பணியில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஜூன் 12-ஆம் தேதி அன்று இரவு 9:45 மணியளவில், ராமாபுரம் பகுதியில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது மவுண்ட்-பூனமல்லி சாலையில் உள்ள […]
