சென்னை,
தமிழ்நாடு ஆக்கி சங்கம் சார்பில் முதலாவது தேசிய மாஸ்டர்ஸ் ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 3-வது நாளான நேற்று நடந்த மகளிர் பிரிவு ஆட்டம் ஒன்றில் கர்நாடக அணி, மராட்டியத்தை எதிர்கொண்டது.
அபாரமாக ஆடி கோல் மழை பொழிந்த கர்நாடக அணி 12-0 என்ற கோல் கணக்கில் மராட்டியத்தை துவம்சம் செய்து 2-வது வெற்றியை பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் இமாசலபிரதேச அணி 4-1 என்ற கோல் கணக்கில் கேரளாவை தோற்கடித்தது.
ஆண்கள் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் ஆந்திரா 4-3 என்ற கோல் கணக்கில் கேரளாவை வீழ்த்தியது. ஒடிசா அணி 5-2 என்ற கோல் கணக்கில் பஞ்சாப்பை பதம் பார்த்தது.
Related Tags :