சென்னை: மாற்றுத் திறனாளிகளை உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்க ஜூலை 1-ம் தேதி முதல் மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்படும் என்று, மாற்றுத் திறனாளிகள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று நடத்திய பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மாற்றுத் திறனாளிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில், உள்ளாட்சி பொறுப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பங்கேற்புரிமை வழங்கி. சமூகநீதி நிலைநாட்டிய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி பாராட்டும் விழா, சென்னை வள்ளுவர் கோட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது: முன்னாள் முதல்வர் கருணாநிதி, திருவள்ளுவர் மீதும், திருக்குறள் மீதும் தீரா காதல் கொண்டவர். திருக்குறளைத் தூக்கிச்சுமந்து பரப்பினார்.
வள்ளுவருக்கு கருணாநிதி சூட்டிய புகழ் மாலையில் மிக முக்கியமானது. 1974-ல் அவர் அடிக்கல் நாட்டிய இந்த வள்ளுவர் கோட்டம். திருவள்ளுவர் சிலையும், திருவாரூர் தேரும் அமைந்துள்ள இந்தக் கோட்டம், கருணாநிதியின் கனவுப் படைப்பு. உங்களுக்கெல்லாம். மாற்றுத் திறனாளிகள் என பெயர் வைத்த தாய் கருணாநிதி. அவர் உருவாக்கிய வள்ளுவர் கோட்டத்தில் இவ்விழா நடைபெறுகிறது. அதனால் இன்று எனக்கு உணர்ச்சிப்பூர்வமான நாள்.
திமுக ஆட்சியில் செய்யப்பட்ட திட்டம் என்பதால், அதிமுக ஆட்சியில் பராமரிப்பின்றி கிடப்பில் போட்டு விட்டார்கள். இந்தக் கலைக் கருவூலத்தைதான் நாம் இப்போது புதுப்பொலிவுடன் ரூ.80 கோடியில் புதுப்பித்திருக்கிறோம். இது 1,400 பேர் அமரக் கூடிய கூட்ட அரங்கத்தோடு அமைந்திருக்கிறது. இந்த தமிழ்க் கோட்டத்தை எல்லோரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பாராட்டுக்காக நான் இந்த நிகழ்ச்சியில் பங்கெடுக்கவில்லை. உங்கள் அன்புக்காகதான் நான் பங்கெடுத் திருக்கிறேன்.
என் மேல் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை. நான் உழைப்பதற்கு ஊக்கமாக எடுத்துக் கொள்கிறேன். அதேபோல கோரிக்கைகளையும் வேண்டுகோளாகவும் சொல்லியிருக்கிறீர்கள். உங்களுக்கே தெரியும் – என்றும் நான் உங்களில் ஒருவன். உங்களுக்கான அனைத்தையும் நிச்சயம் படிப்படியாக நிறைவேற்றியே தீருவேன். இது ஏதோ அரசியலுக்காக, தேர்தலுக்காக செய்வது இல்லை. உள்ளார்ந்த அன்புடன் செய்வது.
1984-ம் ஆண்டு முதல் 42 ஆண்டுகளாக எனது பிறந்த நாளை, மாற்றுத்திறனாளி குழந்தைகள் பயிலும் சிறுமலர் பள்ளியில் கொண்டாடுகிறேன். அந்த குழந்தைகளுடன் இருந்து. அவர்களின் புன்னகையை வாழ்த்தாக பெறும்போது தான். அந்த நாளே எனக்கு முழுமை அடையும். சிறுமலரில்தான் என்னுடைய மகிழ்ச்சி முழுமை அடைகிறது.
உங்களுக்கான கோரிக்கையை நீங்களே ஒலிக்க வேண்டும் என்று உள்ளாட்சி அமைப்புகளில் ஒரு மாற்றுத் திறனாளி உறுப்பினர் இடம் பெறுவார் என்று மாபெரும் சமூகநீதி உரிமையை சட்டமாக்கியிருக்கிறோம். இதன் மூலம், 13 ஆயிரத்து 357 மாற்றுத் திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளில் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்படுவார்கள். தற்போது உடனடியாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், 650 மாற்றுத் திறனாளிகளும், ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 2 ஆயிரத்து 984 மாற்றுத்திறனாளிகளும் நியமிக்கப்படுவார்கள்.
மாவட்ட வாரியாக. ஜூலை 1 முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்படும். மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழுவில். மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குழுவில் இருக்கும் உறுப்பினர் ஒருவர் இடம் பெற்றிருப்பார். அவர்கள் மன்ற கூட்டங்களில் பங்கேற்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினருக்கு வழங்கப்படுவது போல மதிப்பூதியம் வழங்கப்படும். உறுப்பினர்களுக்கு உள்ள கடமைகள் மற்றும் அதிகாரங்களை மேற்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. உங்களுக்கு நான் இருக்கிறேன்; இந்த அரசு இருக்கும் என்கின்ற நம்பிக்கையுடன் செயல்படுங்கள். உங்களுக்கான அனைத்து வாய்ப்புகளையும் வழங்குவது என்னுடைய கடமை” என்று முதல்வர் பேசினார்.
இவ்விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆராசா, அமைச்சர்கள் மா.சுப்பிர மணியன், கே.என்.நேரு, பி.கே. சேகர்பாபு, கீதா ஜீவன், தென் சென்னை மாவட்ட மதுரவாயல் வடக்கு பகுதி செயலாளர் நொளம் பூர் வே.ராஜன், டிசம்பர் 3 இயக்கத்தின் நிறுவனர் தீபக் நாதன், பொதுச் செயலாளர் அண்ணாமலை, தேசிய மாற்றுத்திறனாளிகள் இணையத்தலைவர் அருமான அலி, தேசிய பார்வையற்றோர் இணையத் தலைவர் மனோகரன், உதவிக்கரம் மாற்றுத் திறனாளிகள் சங்கத் தலைவர் கோபிநாத், மாற்றுத்திறனாளிகள் சங்கங் களின் கூட்டமைப்பு தலைவர் சிம்மச்சந்திரன், அனைத்து வகை யான மாற்றுத்திறனாளிகள் பாது காப்பு சங்கத்தை சேர்ந்த ஜான்சி ராணி. மாற்றுத் திறனாளிகள் முன்னேற்ற சங்கத் தலைவர் தங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.