இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஜூன் 20ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டி இங்கிலாந்தின் லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டி தொடங்க நாளில் இருந்து வானிலை கணிக்க முடியாததாக இருந்து வருகிறது. நேற்று முன்தினம் கூட மழை குறிக்கிட்டதால், போட்டி சிறிது நேரம் தடைபட்டு இருந்தது.
போட்டியின் டாஸின் போது பென் ஸ்டோக்ஸ் வானிலை காரணமாக பந்தில் ஸ்விங் இருக்கும் என நினைத்து பந்து வீச்சை தேர்வு செய்தார். ஆனால், எதிர்பாராத விதமாக வெயில் அதிகமாக அடித்ததால், பவுன்ஸ் இல்லை. ஸ்விங்கும் பெரிதாக இல்லை. இதனால் இரு அணி பேட்டர்களும் ரன்களை குவித்தனர். ஆனால் மூன்றாவது நாளின் இரண்டாவது செஷனில், வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. குளிர்ச்சியான சூழலும் நிலவியது. இதனால் பந்தில் பவுன்ஸ் அதிகமாக காணப்பட்டது. இப்படி லீட்ஸ் மைதானத்தில் வானிலை மாறி மாறி நிலவி வருகிறது.
என்ன நடக்கும்?
இந்த நிலையில், தற்போது லீட்ஸ் மைதானத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. குளிர்ச்சியான வானிலையால், பிட்சில் ஈரப்பதம் இருக்க அதிக வாய்ப்புள்ளது. இதனால், பந்தில் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் இருக்க வாய்ப்புள்ளது. எக்ஸ்ட்ரா பவுன்ஸ் சீராஜ், பிரஷித் கிருஷ்ணா போன்ற பந்து வீச்சாளர்களுக்கு அட்வாண்டேஜாக இருக்கும் என்பதால், அவர்கள் விக்கெட்கள் வீழ்த்த வாய்ப்புள்ளது. ஒருவேளை இங்கிலாந்து பொருமையாகவும் அதிரடியாக விளையாடாமல், அதிரடியை மட்டுமே கையில் எடுத்தால், தொடர்ச்சியாக விக்கெட்களைவிட அதிக வாய்ப்புள்ளது. இது இந்திய அணிக்கு சாதகமாக பார்க்கபடுகிறது.
371 ரன்கள் இலக்கு
இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு 371 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. 4வது நாள் முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட்கள இழப்பின்றி 21 ரன்களை எடுத்துள்ளது. கடைசி நாளான இன்று இங்கிலாந்து அணி 90 ஓவர்களில் மீதமுள்ள 350 ரன்களை அடிக்க வேண்டும். இங்கிலாந்து அதிரடியாக விக்கெட்களை இழக்காமல் விளையாடினால், கண்டிப்பாக வெற்றி பெறும். எனவே இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்களை வீழ்த்த வேண்டும். அதுவே இந்திய அணிக்கு இருக்கும் ஒரே வழி. வானிலை சாதகமாக இருக்கும் பட்சத்தில் அதனை இந்திய அணி பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அப்படி பயன்படுத்தி கொண்டால், இந்திய அணிக்கு வெற்றி நிச்சயம்.
மேலும் படிங்க: Ind vs Eng: இந்திய வரலாற்றில் மோசமான சாதனை.. அடுத்த போட்டியில் இந்த பவுலருக்கு இடமில்லை?
மேலும் படிங்க: இந்திய அணியின் பயிற்சியாளராக விரும்புகிறேன் – முன்னாள் கேப்டன் அதிரடி அறிவிப்பு!