“தமிழ்நாட்டில் பாஜக ஒருக்​காலும் காலூன்ற முடியாது…” அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா நேர்க்காணல்

வலுவான கூட்டணியை அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி சொல்லிக் கொண்டே இருந்தாலும் பாஜக – அதிமுக கூட்டணியை பொருந்தாத கூட்டணியாகவே பலரும் விமர்சிக்கிறார்கள். இதுகுறித்து அதிமுக-வுக்குள்ளும் இருவேறு கருத்துகள் இருக்கவே செய்கின்றன. கூடவே, பாஜக-வின் ‘கூட்டணி ஆட்சி’ கோஷமும் அதிமுக-வினரை சீண்டிக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில், அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அன்வர் ராஜாவிடம் ‘இந்து தமிழ் திசை’க்காக பேசினோம்.

பாஜக-வுடன் எந்தக் காலத்திலும் இனி கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டு மீண்டும் அதனுடன் இணைந்துள்ளீர்களே..?

கூட்​டணி என்​பது தேர்​தல் காலத்​தில் செய்​யப்​படு​கின்ற ஒரு தற்​காலிக ஏற்​பாடு. பெரும்​பாலும் வெற்​றியை அடிப்​படை​யாகக் கொண்​டு​தான் கூட்​ட​ணி​கள் உரு​வாகும். கொள்​கை​யின் அடிப்​படை​யில் இல்​லை. இந்​தி​யா​வில் பெரும்​பாலான கட்​சிகள் பாஜக-வுடன் கூட்​டணி வைத்​திருக்​கின்​றன. அது​போல பாஜக உடன் நாங்​கள் கூட்​டணி அமைத்​ததும் இயல்​பான ஒன்​று​தான்.

இது அதிமுக-வுக்கு சாதகமான கூட்டணி என நம்புகிறீர்களா?

ஆம். கடந்த மக்​கள​வைத் தேர்​தல் முடி​வின் கணக்​கு​களை வைத்து ஆய்வு செய்​த​போது 2026 சட்​டமன்​றத் தேர்​தலில் பாஜக உடனான கூட்​டணி பலன் தரும் என்று நம்​பு​கிறேன்.

பாஜக கூட்டணி சேர்ந்ததால் சிறுபான்மையினர் வாக்குகள் அதிமுக-வுக்கு கிடைக்குமா?

பெரும்​பாலும் கிடைக்​காது. ஆனால், சிறு​பான்மை சமு​தா​யத்​தைச் சேர்ந்த அதி​முக கட்சி ஓட்​டு​கள் கண்​டிப்​பாக எங்​களுக்​குக் கிடைக்​கும்.

இபிஎஸ் தனது சுயநலத்திற்காக அதிமுக-வை பாஜக-விடம் அடமானம் வைத்துவிட்டதாக வரும் விமர்சனங்களை கவனிக்கிறீர்களா?

இந்த விமர்​சனத்​தில் உண்மை இல்​லை. அதி​முக-வை யாரும் யாரிடத்​தி​லும் அடமானம் வைக்க முடி​யாது. இன்​று​வரை அதி​முக-​வின் காப்​பாள​ராகவே இபிஎஸ் விளங்கி வரு​கி​றார்.

என்டிஏ கூட்டணி ஆட்சி என்று அமித் ஷா சொன்னபோது அமைதியாக இருந்துவிட்டு இப்போது, “தனித்தே ஆட்சி அமைப்போம்” என இபிஎஸ் சொல்வது சரியா?

கூட்​டணி ஆட்​சியை தமிழ்​நாட்டு மக்​கள் என்​றைக்​கும் விரும்​பியது இல்​லை. பெரும்​பான்மை இடங்​களை அதி​முக பிடிக்​கப்​போகிறது. எனவே, கூட்​டணி ஆட்சி என்ற பேச்​சுக்கே இடமில்​லை.

முதலமைச்சராக அதிமுக-வைச் சேர்ந்த ஒருவர் வருவார் என அமித் ஷா சொல்லி இருப்பதை பார்த்தால் பாஜக-வுக்கு வேறு திட்டம் இருக்கும் போல் தெரிகிறதே?

முதலமைச்​சர் தேர்​வைப் பொறுத்​தவரை பாஜக-​வின் திட்​டம் ஒன்​றும் பலிக்​காது. இபிஎஸ்ஸை முதல்​வர் வேட்​பாள​ராக முன்​னிறுத்​தித்​தான் தேர்​தலில் போட்​டி​யிடு​கி​றோம். எனவே, இபிஎஸ் தான் முதலமைச்​ச​ராக வரு​வார்.

ஒருவேளை, கூட்டணி ஆட்சிக்கு இபிஎஸ் முரண்டு பிடித்தால் செங்கோட்டையன், வேலுமணி போன்றவர்களை வைத்து பாஜக புதிய திட்டம் போடலாம் என்கிறார்களே?

இது கற்​பனை​யான கேள்​வி. இது​போன்ற திட்​டங்​கள் பாஜக-​விடம் இருந்​தால், அவற்றை அதி​முக தவிடு​பொடி​யாக்​கும்.

இந்தத் தேர்தலிலும் அதிமுக சரிவு கண்டால் கட்சியின் எதிர்காலமும், இபிஎஸ்ஸின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி விடும் என்கிறார்களே?

இந்​தத் தேர்​தலில் அதி​முக-வுக்கு எந்​தச் சரி​வும் ஏற்​ப​டாது. எனவே, இபிஎஸ் தலை​மை​யில் அதி​முக-​வின் எதிர்​காலம் பிர​காச​மாகவே இருக்​கும்.

கோவையில் இருந்து இபிஎஸ் தொடங்கும் எழுச்சிப் பயணம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கிறீர்கள்?

எழுச்​சிப் பயணம் மக்​களை கவர்ந்து இழுக்​கும். தனது பயணத்​தில், அதி​முக செயல்​படுத்​திய மக்​கள் நலத் திட்​டங்​களை இபிஎஸ் எடுத்​துரைப்​பார். எனவே, இந்​தப் பயணம் அதி​முக-வை ஆட்​சி​யில் அமர்த்​தும் புரட்​சிப் பயண​மாக உரு​வெடுப்​பது உறு​தி.

இத்தனை ரிஸ்க் எடுத்து பாஜக-வுடன் கூட்டணி சேர்வதற்கு பதிலாக விஜய்யுடன் கூட்டணி வைத்திருக்கலாமே?

கூட்​டணி என்​பது இரண்டு கட்​சிகளுக்​கும் அதன் தலை​வர்​களுக்​கும் இடையே நடக்​கின்ற ஓர் உடன்​பாடு. எனவே, எங்களுடன் கூட்​டணி ஏற்​படு​வதற்கு விஜய்​யின் ஒத்​துழைப்​பும் அவசி​யம்.

முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணாவை சிறுமைப்படுத்தும் விதமாக வெளியிடப்பட்ட வீடியோவை எப்படி சகித்துக் கொண்டது அதிமுக?

சகித்​துக்​கொள்​ள​வில்​லை. அதி​முக அதற்கு எதிர்​வினை​யாற்​றியது. நட்பு ரீதி​யில் அங்கு சென்​றிருந்த முன்​னாள் அமைச்​சர்​களே தங்​களு​டைய கடுமை​யான ஆட்​சேபனை​களை தெரி​வித்​திருந்​தனர். ‘எங்​கள் உயிர் உள்​ளவரை அண்​ணாவை எந்​தக் காலத்​திலும் விட்​டுத்​தர​மாட்​டோம்’ என இபிஎஸ் ஓர் அறிக்​கை​யில் தெரி​வித்​திருந்​தார்.

ஆர்எஸ்எஸ் பேரணியை தொடங்கி வைத்ததால் தளவாய் சுந்தரத்தை பொறுப்பில் இருந்து நீக்கிய இபிஎஸ், மோகன் பாகவத்துடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வேலுமணியை கண்டு கொள்ளவில்லையே?

அப்​பொழுது எங்​களுக்கு பாஜக-வுடன் இணக்​கமில்​லை. எனவே, தளவாய் சுந்​தரத்​தின் மீது நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது. இப்​பொழுது இணக்​க​மான​தால், வேலுமணி மீது நடவடிக்கை எடுக்​கப்​பட​வில்​லை. எனவே​தான், வெகு​விரை​வில் தளவாய் சுந்​தரம் கட்​சி​யில் மீண்​டும் சேர்த்​துக்​கொள்​ளப்​பட்​டர்.

இனியும் தனித்து ஆட்சி என்ற கோஷம் தமிழகத்தில் எடுபடும் என நினைக்கிறீர்களா?

தனித்து ஆட்சி என்ற கோஷம் தான் தமி​ழ​கத்​தில் எடு​படும். எந்​தக் காலத்​தி​லும் தமிழக மக்​கள் கூட்​டணி ஆட்​சியை விரும்​ப​மாட்​டார்​கள்.

தேமுதிக-வுக்கு ராஜ்ய சபா சீட் தருவதாக உறுதியளித்துவிட்டு பிறகு மறுத்தது அரசியல் நாகரிகமா?

தேமு​தி​க-வுக்கு ராஜ்ய சபா சீட் தரு​வ​தாக எந்​த​வித ஒப்​பந்​த​மும் அதி​முக-வுடன் ஏற்​பட​வில்​லை. ஆனால், இப்​பொழுது 2026-க்​குப் பிறகு ஒரு இடம் தரு​வ​தாக உறு​தி​யளிக்​கப்​பட்​டுள்​ளது. அதி​முக எப்​பொழுதுமே சொன்ன சொல்லை மீறு​வ​தில்​லை. அன்​புமணி ராம​தாஸ், ஜி.கே.​வாசன் ஆகி​யோர் அந்த அடிப்​படை​யில்​தான் எம்பி ஆக்​கப்​பட்​டனர்.

பாஜக-வுடன் கூட்டணி வைத்த கட்சிகள் காணாமல் போய்விடும் என்று சொல்லப்படும் கருத்தை ஏற்கிறீர்களா?

இதை நான் ஏற்​க​வில்​லை. நெருப்​பின் சாம்பலில் இருந்து எழும் பீனிக்ஸ் பறவை போன்ற அதி​முக-வுக்கு அது பொருந்​தாது. எத்​தனை முறை வீழ்ந்​தா​லும், அதை​விட வேக​மாக​வும் கம்​பீர​மாக​வும் எழுந்த நிற்​கும் கட்சி அதி​முக. எனவே, அதி​முக-வை எவராலும் வீழ்த்​தவோ, அபகரிக்​கவோ முடி​யாது.

திராவிட மண்ணில் பாஜக காலூன்ற துடிப்பதை எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியாக எப்படிப் பார்க்கிறீர்கள்?

தமிழ்​நாட்​டில் காலூன்ற துடிப்​பது பாஜக-​வின் எண்​ணம். அது ஒருக்காலும் நடக்​காது என்​பது என்​னுடைய தனிப்​பட்ட கருத்​து.

சுமார் எட்டாண்டு காலமாக திமுக தனது கூட்டணியை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறதே?

இன்​னும் தேர்​தலுக்கு 10 மாதங்​கள் உள்​ளன. தேர்​தல் கூட்​டணி என்​பது ஒரே இரவில்​கூட திடீர் என மாறக்​கூடியது. எனவே, திமுக கூட்​ட​ணி​யில் இப்​போது சலசலப்பு துவங்​கி​விட்​டது. அது நிலைத்து நீடிக்​குமா என்​பதை தேர்​தல் நெருக்​கத்​தில் தான் உணர முடி​யும்.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, கூட்டணி ஆட்சி தான் என பாஜக நிர்பந்தித்தால் என்ன செய்வீர்கள்?

தனிப்​பெரும்​பான்​மை​யுடன் அதி​முக ஆட்சி அமைக்​கும். இபிஎஸ்​தான் முதல்​வ​ராக வரு​வார். எந்த நிர்​பந்​தத்​திற்​கும் அதி​முக பணி​யாது.

உண்மையைச் சொல்லுங்கள்… திராவிட மாடல் ஆட்சியில் தமிழகம் தழைத்திருக்கிறதா இல்லையா?

தமி​ழ​கம் தழைக்​க​வில்​லை. மாறாக மிக​வும் பின்​தங்​கி​யிருக்​கிறது. சுமார் 8 லட்​சம் கோடி ரூபாய் கடனில் தமி​ழ​கம் பொருளா​தார ரீதி​யில் தள்​ளாடு​கிறது.

தமிழகத்துக்கான நிதியை மத்திய அரசு தர மறுப்பது சரியான அணுகுமுறையா?

இல்​லை. மத்​திய அரசின் இந்​தப் போக்கு கண்​டித்​தக்​கது. எங்​கள் பொதுச்​செய​லா​ளர் இபிஎஸ் அவர்​கள், “நி​யாய​மாக தமி​ழ​கத்​திற்கு தரவேண்​டிய நிதியை விடுவிக்க வேண்​டும்” என்று வேண்​டு​கோள் வைத்​திருக்​கி​றார்.

அதிமுக பிளவுபட்டுள்ள நிலையில் தற்போது அக்கட்சி பலவீனமாக இருப்பதாக ஒரு கருத்து நிலவுகிறதே?

இந்​தக் கேள்விக்கே இடமில்​லை. ஏனெனில், அதி​முக-​வில் எந்​தப் பிள​வும் இல்​லை. அதி​முக பலவீன​மாக​வும் இல்​லை. 2026 சட்​டமன்​றத் தேர்​தலை சந்​திப்​ப​தற்கு தயா​ரான நிலை​யில் அதி​முக உள்​ளது.

ஓபிஎஸ், சசிகலா, தினகரனை மீண்டும் கட்சிக்குள் சேர்க்காவிட்டால் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் அதிமுக-வுக்கு பின்னடைவு ஏற்படலாம் என்கிறார்களே?

இது சரி​யான கணிப்பு இல்​லை. தனிமனிதர்​களை விட அதி​முக தொண்​டன் கட்​சி​யின் வெற்​றியைத்​தான் பெரி​தாக மதிப்​பான். எனவே, 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் எந்த பின்​னடைவுமின்​றி, அதி​முக வெற்​றிக்​கொடி நாட்​டும்.

ஆளும் திமுக தனது கூட்டணியை உறுதியாக வைத்து தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டது. ஆனால், எதிர்க்கட்சியான அதிமுக இன்னும் கூட்டணியையே கட்டமைக்கவில்லையே?

அதி​முக தனித்து நின்றே வெற்றி பெரும் ஆற்​றல் உடைய கட்​சி. ஏற்​கென​வே, 2016 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் 234 தொகு​தி​களி​லும் அனை​வரை​யும் இரட்டை இலைச்​சின்​னத்​தில் போட்​டி​யிடச் செய்து வெற்றி பெற்று ஆட்​சி​யைப் பிடித்த கட்​சி. அதி​முக. மைக்ரோ லெவல் ஆபரேஷன் செய்து தமிழ்​நாடு முழு​வதும் பூத் கமிட்​டிகளை வெற்​றிகர​மாக அமைத்​துள்​ளது. ஆட்​சி​யைப் பிடிப்​ப​தற்கு இந்த பலமே போது​மானது. மேலும், கூட்​டணி அமைப்​ப​தற்​கும் அதை உறு​திப்​படுத்​து​வதற்​கும் இன்​னும் கால அவகாசம் இருக்​கிறது. உரிய காலத்​தில் அதி​முக அதை செய்து முடிக்​கும்.

ஆனால், திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என உறுதியாகச் சொல்கிறாரே ஸ்டாலின்?

இந்​தத் தேர்​தலில் திமுக வெற்றி பெறு​வது மிகக் கடினம். சட்​டம் – ஒழுங்கு நில​வரத்​தைப் பார்த்து நடுநிலை​யாளர்​களே அச்​சப்​படு​கின்​ற​னர். கடலை மிட்​டாய் விற்​பது போல் கஞ்சா விற்​கப்​படு​கிறது. ஸ்டா​லின் நல்​லது செய்ய நினைத்​தா​லும் கீழ் மட்​டத்​தில் இருப்​பவர்​கள் அவரைச் செய்​ய​வி​டா​மல் இழுத்​தடிக்​கின்​ற​னர். எதிர் காலத்​தில் துரை​முரு​கன், நேரு, பொன்​முடி, எ.வ.வேலு, வெள்​ளக்​கோ​யில் சாமி​நாதன் போன்​றவர்​களால் தனது மகனுக்கு ஆபத்து வரலாம் என நினைக்​கும் ஸ்டா​லின், இம்​முறை திமுக வென்றால் மகனை முதல்​வ​ராக்​கி​விடும் திட்​டத்​தில் இருக்​கி​றார். ஆனால், அது நடக்​காது.

பாஜக – அதிமுக கூட்டணியை அமித் ஷா அறிவித்து மூன்று மாதங்கள் ஆகியும் இரு கட்சிகளுக்கும் இன்னும் ஒருங்கிணைப்பு ஏற்பட்டதாகத் தெரியவில்லையே?

தமிழ்​நாட்டை பொறுத்​தவரை கூட்​ட​ணிக்கு தலைமை தாங்​கப் போவது அதி​முக தான். கூட்​ட​ணி​யின் தலை​வர் இபிஎஸ் தான். இதில் எந்த மாற்​றுக்​கருத்​துக்​கும் இடமில்​லை. இதை பாஜக ஏற்​க​வில்லை என்​றால் இரு​கட்​சிகளுக்​கு​மான ஒருங்​கிணைப்பு சாத்​தி​யமில்​லை.

அதிமுக ஆட்சியிலும் கட்சியிலும் சிறுபான்மை சமூகத்தினருக்கு உரிய முக்கியத்துவம் தருவதில்லை என்கிற குற்றச்சாட்டு இருக்கிறதே..?

அதி​முக-​வில் சிறு​பான்மை சமூகத்​தினருக்கு உரிய முக்​கி​யத்​து​வம் காலம் கால​மாக தரப்​பட்டு வருகிறது. எனவே, இந்தக் குற்​றச்​சாட்​டில் உண்மை இல்​லை.

– ஆர்.ஷபிமுன்னா / கி.தனபாலன்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.