சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த்கை காமராஜர் குறித்த விவாதக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம், ”ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு மற்றும் சட்டமன்ற உறுப்பினரான நானும் முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்தோம். ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலைகள் மிகுந்த பகுதி. இங்கு அடிக்கடி சாலைகள் பழுதாகின்றன. வரி செலுத்துவதில் முதன்மையான தொகுதியாக ஸ்ரீபெரும்புதூர் உள்ளது. அங்குள்ள சாலைகள் பழுது மற்றும் பொதுமக்களின் பிரச்சினைகளையும் ஊராட்சி மன்றத் தலைவர்களிடம் இருந்து […]
