கூத்தாநல்லூரில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை கவ்விச் சென்று கடித்து குதறிய நாய் 

திருவாரூர்: கூத்​தாநல்​லூர் அருகே வீட்​டில் தூங்​கிக்​கொண்​டிருந்த ஒன்​றரை வயது குழந்​தையை கவ்​விச் சென்று கடித்​துக் குதறிய தெரு நாய், காப்​பாற்​றச் சென்ற பாட்​டி யை​யும் கடித்தது. திரு​வாரூர் மாவட்​டம் கூத்​தாநல்​லூர் அரு​கே​யுள்ள மேல்​கொண்​டாழி கிராமத்​தைச் சேர்ந்​தவர் அபு​தாகிர். வெளி​நாட்​டில் பணிபுரிந்து வரு​கிறார். இவரது மனைவி சுல்​தான்​பீ​வி(26). இவர்​களுக்கு அஜ்மல் பாஷா என்ற ஒன்​றரை வயது ஆண் குழந்தை உள்​ளது.

சுல்​தான் பீவி, தனது தாய் மல்​லிகா பீவி(44) மற்​றும் குழந்தை அஜ்மல் பாஷாவுடன் மேல​கொண்​டாழி கிராமத்​தில் உள்ள வீட்​டில் வசித்து வரு​கிறார். இந்​நிலை​யில், நேற்று காலை சுல்​தான் பீவி, வீட்​டில் தனது குழந்தை அஜ்மல் பாஷாவை பக்​கத்​தில் படுக்​க​வைத்​துக்​கொண்​டு, தூங்​கிக் கொண்​டிருந்​தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.