பாதிக்கப்பட்ட மாணவியை குறை சொல்வதா? – மம்தா பானர்ஜியின் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் துர்காபூரில் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், ‘பெண்கள் இரவில் கல்லூரியை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது’ என்று கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் துர்​காபூரில் உள்ள தனி​யார் மருத்​துவ கல்​லூரி​யில், ஒடி​சாவைச் சேர்ந்த மாணவி (23) ஒரு​வர் 2-ம் ஆண்டு எம்​பிபிஎஸ் படித்து வரு​கிறார். இவர் கடந்த வெள்​ளிக்​கிழமை தனது ஆண் நண்பருடன் மாலை வெளியே சென்று விட்டு இரவு 8.30-க்கு கல்​லூரி விடு​திக்கு திரும்​பி​னார். அப்​போது ஒரு கும்​பல் மருத்​துவ மாண​வியை பாலியல் வன்​கொடுமை செய்து தப்​பியது. ஆண் நண்​பரும் அங்​கிருந்து தப்பிச் சென்​று​விட்​டார்.

இதுகுறித்து பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “துர்காபூரில் மருத்​துவ மாணவிக்கு நடந்த பாலியல் வன்​கொடுமை மிக​வும் அதிர்ச்சி அளிக்​கிறது. இது தொடர்​பாக போலீ​ஸார் 3 பேரை கைது செய்துள்​ளனர். மற்​றவர்​களை தேடி வரு​கின்​றனர். அதே​ நேரத்தில் நள்​ளிரவு 12.30 மணிக்கு கல்​லூரி வளாகத்தை விட்டு 23 வயது பெண் எப்​படி வெளி​யில் வந்​தார். இதற்கு யார் பொறுப்​பு?.

குற்​ற​வாளி​கள் யாராக இருந்​தா​லும் கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும். அவர்​களுக்கு தண்​டனை பெற்று தரப்​படும். இந்த நேரத்​தில் தனி​யார் கல்​லூரி​கள், தங்​கள் வளாகத்​தில் பாது​காப்பை பலப்​படுத்த வேண்​டும். ‘இரவு நேர கலாச்​சா​ரத்​துக்​கு’ முற்​றுப்​புள்ளி வைக்க வேண்​டும் என்று கேட்​டுக் கொள்​கிறேன்” என்று கூறினார்.

இதற்கு கண்டனம் தெரிவித்த பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா, “ஒரு முதல்வராக இருந்தும் மம்தா பானர்ஜியின் இந்த கருத்து பெண்மையின் மீது ஒரு கறை. ஆர்.ஜி.கர் மற்றும் சந்தேஷ்காலி சம்பவத்துக்குப் பிறகு, இப்போது இந்த கொடூரமான பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு நீதிக்குப் பதிலாக, பாதிக்கப்பட்டவரை அவர் குறை கூறுகிறார்.” என்றார்.

மத்திய அமைச்சர் சுகந்தா மஜும்தார், “முன்னதாக, ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்தபோது, ​​தனியார் நிறுவனங்கள் பெண்களுக்கு குறைவான இரவு நேர வேலைகளை வழங்க வேண்டும் என்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்போது முதல்வர் பெண்கள் இரவில் வெளியே செல்லக்கூடாது என்று கூறுகிறார். அனைத்து பெண்களும் பர்தா அணிந்து வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறாரா?” என்று வினவினார்.

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் அர்ச்சனா மஜும்தார், “மாலைக்குப் பிறகு, அதாவது ஒரு நாளைக்கு 12 மணி நேரம், ஒரு பெண் ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட வேண்டும் என்று எப்படிச் சொல்ல முடியும்?. பெண்கள் மருத்துவமனைகள், ஐடி துறை மற்றும் எல்லா இடங்களிலும் ஆண்களைப் போலவே பெண்கள் வேலை செய்கிறார்கள். இன்றைய இந்தியப் பெண்கள் ஒலிம்பிக்கில் பளு தூக்குதலில் தங்கப் பதக்கங்களை வென்று வருகின்றனர். அவர்கள் விண்வெளிக்குச் செல்கிறார்கள், ஆனால் இரவு 9 அல்லது 8 மணிக்குப் பிறகு பெண்கள் வீட்டிற்குள் இருக்க வேண்டும் என்று நாம் கூறுகிறோம்.

பெண்களுக்கு பக்கபலமாக நின்று பெண்களை பாதுகாக்க சட்டங்களை உருவாக்குவது முதல்வரின் பொறுப்பு. ஆனால் இது போல முதல்வர் சொல்வது அபத்தமானது. பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்ற அவரது கூற்றை நான் ஆதரிக்க முடியாது… இது சரியல்ல” என்று அவர் மேலும் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.