கேரள மாநிலத்தை பின்பற்றி சேவை பெறும் உரிமை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: கேரள மாநிலத்​தைப் பின்​பற்​றி, சட்​டப்​பேர​வைக் கூட்​டத்​தொடரில் சேவை பெறும் உரிமை சட்​டத்தை நிறைவேற்ற வேண்​டும் என்று பாமக தலை​வர் அன்​புமணி தெரி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: பொது​மக்​கள் கோரும் பொது சேவை​களை 30 நாட்​களில் வழங்​கா​விட்​டால், அந்த சேவை வழங்​கப்​பட்​ட​தாக கருதப்​படு​வதுடன், சேவையை வழங்​கத் தவறிய அதி​காரி​களுக்கு அபராதம் விதிக்க வகை செய்​யும் திருத்​தப்​பட்ட சேவை பெறும் உரிமைச் சட்​டம் கேரள சட்​டப்​பேர​வை​யில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்​டத்​தின்​படி, பொது​மக்​கள் கோரும் அனைத்து சேவை​களும் அதி​க பட்​சம் 30 நாட்​களில் வழங்​கப்பட வேண்​டும். ஒரு​வேளை மக்​கள் கோரும் சேவையை வழங்க முடி​யாது என்​றால், அதற்​கான காரணங்​களு​டன் கோரிக்கை நிராகரிக்​கப்பட வேண்​டும். கூடு​தல் ஆவணங்​கள் ஏதேனும் தேவை என்​றால், அதை சம்​பந்​தப்​பட்ட அலு​வல​கத்​தில் இருந்து அதி​காரி​களே பெற்று கொள்ள வேண்​டும்.

விண்​ணப்​பம் பெறு​வது முதல் சேவை வழங்​கு​வது வரையி​லான அனைத்​துக் கட்​டங்​களும் டிஜிட்​டல் வடி​வில் சேகரித்து வைக்​கப்பட வேண்​டும் என்று கேரள சட்​டத்​தில் தெளி​வாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. மக்​களின் உரிமை​களை உறுதி செய்​யும் வகை​யில் கேரள அரசு மேற்​கொண்​டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்​கத்​தக்​கது. அதே​நேரத்​தில், இது தொடர்​பாக திமுக அரசு நடவடிக்கை எடுக்​காதது கண்​டிக்​கத்​தக்​கது.

கேரள முதல்​வர் பின​ராயி விஜயனுடன் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நல்​லுறவை வைத்​திருக்​கிறார். ஆனால், கேரளத்​தில் செயல்​படுத்​தப்​படும் அனைத்து பொருள்​களுக்​கும் கொள்​முதல் விலை, சேவை பெறும் உரிமைச் சட்​டம் போன்ற நல்ல திட்​டங்​களை செயல்​படுத்த மு.க.ஸ்​டா​லினுக்கு மனம் வரவில்​லை.

தமிழக மக்​கள் நலனில் அவருக்கு அக்​கறை இல்லை என்​ப​தையே இது காட்​டு​கிறது. எனவே, வரும் சட்​டப்​பேர​வைக் கூட்​டத்​தொடரில் சேவை பெறும் உரிமை சட்​டத்தை நிறைவேற்ற முதல்​வர் ஸ்டா​லின் முன்வர வேண்​டும். இவ்​வாறு அன்​புமணி வலி​யுறுத்​தி​யுள்​ளார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.