Disel: "சிம்பு அண்ணா ட்ரைலர் பார்த்துட்டு சொன்ன விஷயம்" – ஹரிஷ் கல்யாண்

சண்முகம் முத்துசாமி இயக்கத்தில், நடிகர் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘டீசல்’.

இத்திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று ( அக்.14) நடைபெற்றிருக்கிறது.

டீசல் படத்தில்…

இதில் கலந்துகொண்டு பேசிய ஹரிஷ் கல்யாண், ” நேற்று முன்தினம் STR (சிம்பு) அண்ணா கால் பண்ணாரு.

ட்ரைலர் பார்த்தேன். அதுல நடிப்பெல்லாம் தாண்டி எனக்கு ஒரு விஷயம் பிடிச்சிருந்தது’னு சொன்னாரு.

உன்னுடைய பாடி லாங்குவேஜ் அதுமட்டுமல்லாமல் ஒரு ஆக்ஷன் மூவி பண்ணும்போது அதுல ஒரு மீட்டர் ரொம்ப முக்கியம்.

அந்த மீட்டரை ரொம்ப அளவா கரெக்ட்டா பண்ணிருக்க அப்படின்னு சொன்னாரு.

அவர் வாய்ல இருந்து இதெல்லாம் கேட்கும்போது படம் நல்லா வந்துருக்குன்னு ஒரு நம்பிக்கை வந்துச்சு.

நான் முன்னாடியே சொன்ன மாதிரி ஒரு பார்க்காத உலகத்தை இந்த படம் மூலமா எல்லோரும் பார்ப்பீங்க.

ட்ரைலர்ல டீசல், பெட்ரோல் மாஃபியா பத்திதான் மேக்ஸிமம் சொல்லிருப்போம்.

ஹரிஷ் கல்யாண்
ஹரிஷ் கல்யாண்

ஆனா இந்தப் படத்தில இன்னொரு விஷயமும் டிஸ்கஸ் பண்ணிருக்கோம். கண்டிப்பாக மக்களுக்கு அது கனெக்ட் ஆகும்.

இது மக்களுக்கான படமாக நிச்சயம் இருக்கும்” என்று பேசியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.