ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் 7-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியா

நியூயார்க்,

உலகம் முழுவதும் மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்காகவும் மற்றும் பாதுகாப்பதற்காகவும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் தொடங்கப்பட்டது. இந்நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் உறுப்பு நாடுகளுக்கான தேர்தல் நேற்று நடந்தது. இதில், இந்தியா, பாகிஸ்தான் என 14 நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

இதுபற்றி ஐ.நா.வுக்கான நிரந்தர இந்திய பிரதிநிதியான தூதர் ஹரீஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், 2026-28 ஆண்டுகளுக்கான ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலுக்கு 7-வது முறையாக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது.

ஆதரவளித்த அனைத்து நாடுகளுக்கும் நன்றிகள். மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரம் ஆகியவற்றுக்கான இந்தியாவின் ஈடுஇணையற்ற ஈடுபாட்டை இது பிரதிபலிக்கிறது. எங்களுடைய பதவி காலத்தில் இந்த நோக்கத்திற்காக செயலாற்ற நாங்கள் ஆவலாக காத்திருக்கிறோம் என பதிவிட்டு உள்ளார்.

இதற்கான தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. இதன்படி, 2026 முதல் 2028 வரையிலான 3 ஆண்டு காலகட்டத்திற்கு மீண்டும் இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டு கவுன்சிலில் சேவையாற்றும். பருவகால மாற்றம், சுகாதாரம் மற்றும் வறுமை ஒழிப்பு விவகாரங்கள் உள்ளிட்ட விசயங்களை கவுன்சிலில் சேர்த்துள்ளதுடன், மனித உரிமைகளுக்காக விரிவான அணுகுமுறைகளை ஐ.நா. கவுன்சிலில் இந்தியா சமர்ப்பித்து வருகிறது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.