ஆப்கன் மீது பாகிஸ்தான் தாக்குதல்: கிரிக்கெட் வீரர்கள் மூவர் உட்பட 8 பேர் உயிரிழப்பு

காபூல்: ஆப்​கானிஸ்​தானில் பாகிஸ்​தான் ராணுவம் நேற்று முன்​தினம் நடத்​திய வான்​வழி தாக்​குதலில் ஆப்​கானிஸ்​தான் கிரிக்​கெட் வீரர்​கள் 3 பேர் உட்பட 8 பேர் உயி​ரிழந்​தனர்.

ஆப்​கானிஸ்​தானில் பாகிஸ்​தான் எல்​லையை ஒட்டி பாக்​டிகா மாகாணம் அமைந்​துள்​ளது. இந்த மாகாணத்​தின் உர்​குன் மற்​றும் பார்​மல் மாவட்​டங்​களில் பாகிஸ்​தான் ராணுவம் நேற்று முன்​தினம் மாலை​யில் வான்​வழி தாக்​குதல் நடத்​தி​யது. மக்​கள் குடி​யிருப்பு பகு​தி​கள் மீது இந்த தாக்​குதல் நடத்​தப்​பட்​ட​தாக ஆப்​கன் ஊடகங்​கள் தெரிவிக்​கின்​றன.

இந்​நிலை​யில் இந்த தாக்​குதலில் 3 கிரிக்​கெட் வீரர்​கள் உட்பட 8 பேர் உயி​ரிழந்​த​தாக ஆப்​கானிஸ்​தான் கிரிக்​கெட் வாரி​யம் (ஏசிபி) தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து ஏசிபி வெளியிட்ட அறிக்கையில், “நட்​பு ரீ​தியி​லான ஒரு ஆட்​டத்​தில் பங்​கேற்க எங்​கள் கிரிக்​கெட் வீரர்​கள் பாகிஸ்​தான் எல்​லைக்கு அரு​கில் உள்ள உர்​குனில் இருந்து ஷரா​னா​வுக்கு சென்​றனர். அவர்​கள் மீண்​டும் உர்​குன் திரும்​பிய பிறகு அவர்​கள் குறி​வைத்து தாக்​கப்​பட்​டனர். இதில் கபீர், சிப்​கதுல்​லா, ஹாரூன் ஆகிய 3 வீரர்​கள் உட்பட 8 பேர் உயி​ரி ழந்​தனர். பாகிஸ்​தானின் இந்த தாக்​குதல் கோழைத்​தன​மானது.

உர்​குன் மாவட்ட கிரிக்​கெட் வீரர்​களின் உயிர் தியாகத்​திற்கு ஏசிபி ஆழ்ந்த இரங்​கல் தெரிவிக்​கிறது” என்று கூறி​யுள்​ளது.

போட்டியில் இருந்து விலகல்: தாக்​குதலை தொடர்ந்​து, பாகிஸ்​தான் மற்​றும் இலங்​கை​யுடன் அடுத்த மாதம் நடை​பெற​விருந்த முத்​தரப்பு டி20 தொடரில் இருந்து ஆப்​கானிஸ்​தான் வில​கியது. இறந்​தவர்​களுக்கு மரி​யாதை செலுத்​தும் வகை​யில் ஏசிபி இம்​முடிவை எடுத்​துள்​ளது.
ஏசிபி​யின் இந்த முடிவை ஆப்​கானிஸ்​தான் டி-20 அணி​யின் கேப்​டன் ரஷீத் கான் வரவேற்​றுள்​ளார். பாகிஸ்​தான் தாக்​குதலுக்கு அவர் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்.

பாகிஸ்​தானில் தாக்​குதல் நடத்​தும் தீவிர​வா​தி​களுக்கு ஆப்​கானிஸ்​தானில் அடைக்​கல​மும் பயிற்​சி​யும் தரப்​படு​வ​தாக பாகிஸ்​தான் குற்​றம் சாட்டி வரு​கிறது. இது தொடர்​பாக ஆப்​க​னில் கடந்த 9-ம் தேதி பாகிஸ்​தான் தாக்​குதல் நடத்​தி​யதை தொடர்ந்து எல்​லை​யில் இரு நாட்​டுப் படைகளும் ஒரு வாரம் மோதலில் ஈடு​பட்​டன. இதில் இரு தரப்​பிலும் ஏராள​மானோர் உயி​ரிழந்​தனர். இதையடுத்து இரு நாட்​டுப் படைகளும் எல்​லை​யில் 48 மணி நேர சண்டை நிறுத்​தம் மேற்​கொள்ள கடந்த புதன்​கிழமை மாலை முடிவு செய்​தன. இந்​நிலை​யில் இந்த உடன்​பாட்டை மீறி தாக்​குதல் நடத்​தப்​பட்​டுள்​ள​தாக ஆப்​கானிஸ்​தான்​ குற்​றம்​ சாட்​டியுள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.