புதுடெல்லி,
12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது. இந்த தொடரில் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் தற்போது நடந்து வருகிறது. இதில் இன்று 3 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. அதன்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கிய முதல் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் – தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின.
இதில் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தனர். இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது. இறுதியில் இந்த மோதலில் அபாரமாக செயல்பட்ட அரியானா அணி 45-34 என்ற புள்ளிக்கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது.
தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் 2வது ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் – பெங்கால் வாரியர்ஸ் அணிகள் ஆடி வருகின்றன. இதையடுத்து இரவு 9.30 மணிக்கு தொடங்கும் 3வது ஆட்டத்தில் தபாங் டெல்லி – பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோத உள்ளன.