IND vs AUS: தொடரை இழந்த இந்தியா… இந்த 3 தவறுகளே தோல்விக்கு முக்கிய காரணங்கள்!

India vs Australia: அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் சுமார் 17 ஆண்டுகளுக்கு பின் இந்தியா ஓடிஐ போட்டிகளில் தோல்வியை தழுவி உள்ளது. மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சுப்மான் கில் தலைமையிலான இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடரில் விளையாட இருந்தது. 

Add Zee News as a Preferred Source

பெர்த் ஆப்டஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஓடிஐ போட்டியில் மழை குறுக்கீட்டுக்கு மத்தியில் விளையாடி, டிஎல்எஸ் முறைப்படி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவியிருந்தது. இதையடுத்து, இன்று அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் இந்திய அணி கடுமையாக போராடி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியிருக்கிறது.

India vs Australia: ஆட்ட நாயகன் ஜாம்பா

இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 265 ரன்களை ஆஸ்திரேலியாவுக்கு இலக்காக நிர்ணயித்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 73, ஷ்ரேயாஸ் ஐயர் 61, அக்சர் பட்டேல் 44 ரன்களை அடித்தனர். ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சில் ஜாம்பா 4, பார்ட்லட் 3, ஸ்ட்ராக் 2 விக்கெட்டை எடுத்தனர்.

ஆஸ்திரேலியா பேட்டிங்கில் மார்ஷ் 11, டிராவிஸ் ஹெட் 28 ரன்களை அடுத்து ஆடடமிழந்தார். ஷார்ட் 71, ரென்ஷா 30 ரன்கள் அடித்து மிரட்டினர். பின்வரிசை பேட்டிங்கில் கூப்பப் கானொலி 61, மிட்செல் ஓவன் 36 ரன்களை எடுத்து ஆஸ்திரேலியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்று 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றினர். இந்திய அணி பந்துவீச்சில் அர்ஷ்தீப், ஹர்ஷித் ராணா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டையும், முகமது சிராஜ், அக்சர் பட்டேல் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். ஜாம்பா ஆட்டநாயகன் விருதை வென்றார். அந்த வகையில், இந்திய அணி இந்த போட்டியில் தோல்வியடைய காரணமாக இருந்த மூன்று முக்கிய தவறுகளை இங்கு காணலாம்.

2ND ODI. Australia Won by 2 Wicket(s) https://t.co/aB0YqSCClq #TeamIndia #AUSvIND #2ndODI

— BCCI (@BCCI) October 23, 2025

India vs Australia: குல்தீப் யாதவை எடுக்காதது

இந்திய அணி நீண்ட பேட்டிங் வரிசை வேண்டும் என்பதற்காக நிதிஷ் குமார் ரெட்டியை நம்பர் 8இல் மற்றும் ஹர்ஷித் ராணாவை நம்பர் 9இல் விளையாட வைக்கிறது. இவர்கள் ஒருவருக்கு பதில் குல்தீப் யாதவை பிளேயிங் லெவனில் இன்று சேர்த்திருந்தால், மிடில் ஆர்டரில் விக்கெட்டுகளை சரித்திருக்கலாம். ஷார்ட் சுழற்பந்துவீச்சில் திணறிய நிலையில், குல்தீப் ஆஸ்திரேலியாவின் மிடில் ஓவரை சாய்த்துக்காட்டியிருப்பார். மணிக்கட்டு சுழற்பந்துவீச்சாளரான ஜாம்பாவை போல் குல்தீப் யாதவும் அசத்தியிருப்பார். ஆனால், கில் – கம்பீர் குல்தீப்பை விட ஆல்-ரவுண்டர்களின் மேல் நம்பிக்கை வைத்தது பெரிய தவறாக அமைந்தது. இதுவும் தொடரை இழக்க முக்கிய காரணம். 

India vs Australia: சுப்மான் கில்லின் அனுபவமின்மை

இந்திய பந்துவீச்சில் முதல் 10 ஓவர்களை சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் இருவரும் சரிசமமாக பகிர்ந்து பந்துவீசினர். அடுத்து ஹர்ஷித் ராணாவும், வாஷிங்டன் சுந்தரும் பந்துவீச வந்தனர். ஹர்ஷித் ராணா டிராவிஸ் ஹெட் விக்கெட்டை எடுத்ததும், ஷார்ட் உள்ளே வந்தார். உடனே சுப்மான் கில் வாஷிங்டன் சுந்தரை ஒரு ஓவரோடு நிறுத்திவிட்டு, நிதிஷ் குமாரை ரெட்டி பந்துவீச அழைத்தார். நிதிஷ் குமாரிடம் பெரியளவு வேகமோ, ஸ்விங்கோ இல்லாத காரணத்தால் ஷார்ட் – ரென்ஷா ஜோடி அவரை பதம்பார்த்து செட்டிலாகிவிட்டது. அடுத்து அக்சர் பட்டேல் பந்துவீச வந்த இரண்டாவது ஓவரிலேயே ரென்ஷாவின் விக்கெட்டை எடுத்துவிட்டார். எனவே, சுழற்பந்துவீச்சை சற்று முன்னரே பந்துவீச வைத்திருக்கலாம்.

India vs Australia: கோட்டை விட்ட வாய்ப்புகள்

இந்திய அணி இன்று இரண்டு முறை ஷார்ட் கொடுத்த கேட்ச்சை தவறவிட்டது. நிதிஷ் ராணா வீசிய பந்தில், ஷார்ட் 23 ரன்களில் இருந்தபோது பாயிண்ட் திசையில் கொடுத்த எளிய கேட்ச்சை அக்சர் பட்டேல் தவறவிட்டார். வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில், ஷார்ட் 55 ரன்களில் கொடுத்த கேட்ச்சை அதே பாயிண்ட் திசையில் சிராஜ் தவறவிட்டார். கடைசியாக ஷார்ட் 78 பந்துகளில் 74 ரன்களை அடித்திருந்தார். அவர் முதலில் கொடுத்த கேட்சை பிடித்திருந்தாலே ஆஸ்திரேலியாவுக்கு 50 ரன்கள் குறைந்திருக்கும், நெருக்கடி கொடுத்து வெற்றியும் பெற்றிருக்கலாம். இறுதியில் வெறும் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியோ தோற்றது. ஒருவேளை அக்சர் பட்டேல் அந்த கேட்ச்சை பிடித்திருந்தால் இந்தியா தொடரையும் சமன் செய்திருக்கும். 

மேலும் படிக்க | இந்திய அணி செய்த மிகப்பெரிய தவறு.. கொந்தளித்த காங்கிரஸ் எம்.பி.! வைரலாகும் பதிவு

மேலும் படிக்க | Ind vs Aus 2nd ODI: ரோகித் சர்மா ஹாட்ரிக் சாதனைகள்.. என்னென்ன தெரியுமா?

மேலும் படிக்க | ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வா? ரசிகர்களுக்கு விராட் கோலி கொடுத்த சிக்னல்
 

About the Author


Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.