சத்தீஸ்கரில் பொற்காலம் தொடக்கம்: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் 

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கரில் பொற்​காலம் தொடங்​கி​யிருக்​கிறது என்று பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார்.

கடந்த 2000-ம் ஆண்டு நவம்​பர் 1-ம் தேதி சத்​தீஸ்​கர் மாநிலம் உதய​மானது. கடந்த 2005-ம் ஆண்​டில் அந்த மாநில தலைநகர் ராய்ப்​பூர் அருகே நயா ராய்ப்​பூர் நகரம் உரு​வாக்​கப்​பட்​டது. அங்கு 52 ஏக்​கர் பரப்​பள​வில் ரூ.324 கோடி செல​வில் பிரம்​மாண்ட சட்​டப்​பேரவை கட்​டப்​பட்டு உள்​ளது. புதிய சட்​டப்​பேர​வையை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று திறந்​து​வைத்​தார்.

அப்​போது அவர் பேசி​ய​தாவது: கடந்த 2000-ம் ஆண்​டில் முன்​னாள் பிரதமர் வாஜ்​பாய் ஆட்​சிக் காலத்​தில் சத்​தீஸ்​கர் மாநிலம் உரு​வாக்​கப்​பட்​டது. இன்று சத்​தீஸ்​கர் உதய​மான தினம். இப்​போது வெள்ளி விழாவை கொண்​டாடு​கிறோம். 25 ஆண்​டு​களில் மாநிலம் அபாரவளர்ச்சி அடைந்​திருக்​கிறது. தற்​போது சத்​தீஸ்​கரில் பொற்​காலம் தொடங்​கி​யிருக்​கிறது. முன்​னாள் முதல்​வர் ரமண் சிங் ஆட்​சிக் காலத்​தில் மாநிலம் வளர்ச்​சிப் பாதை​யில் அடி​யெடுத்து வைத்​தது. இன்​றைய முதல்​வர் விஷ்ணு தியோ சாய் ஆட்​சி​யில் மாநிலம் அதிவேக​மாக வளர்ச்சி அடைந்து வரு​கிறது. மக்​களே கடவுள் என்ற கொள்​கையை பாஜக பின்​பற்​றுகிறது. பகவான் ராமர் சத்​தீஸ்​கரின் மரு​மகன் ஆவார். பகவானின் வழி​காட்​டு​தல்​களின்​படி சத்​தீஸ்​கரில் ராம ராஜ்ஜி​யம் நடை​பெற்று வரு​கிறது.

சத்​தீஸ்​கரில் மவோ​யிஸ்ட் தீவிர​வாதம் ஒடுக்​கப்​பட்​டிருக்​கிறது. இந்த மாநிலம் மட்​டுமன்றி நாடு முழு​வதும் மாவோ​யிஸ்ட், நக்​சல் தீவிர​வாதம் வேரறுக்​கப்​பட்டு வரு​கிறது. விரை​வில் மாவோ​யிஸ்ட் தீவிர​வாதம் இல்​லாத இந்​தியா உரு​வாகும். வரும் 2047-ம் ஆண்​டில் வளர்ச்சி அடைந்த இந்​தி​யாவை உரு​வாக்க இலக்கு நிர்​ண​யித்து இருக்​கிறோம். இந்த இலக்கை எட்ட சத்​தீஸ்​கர் உறு​துணை​யாக இருக்​கும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

பின்​னர் ராய்ப்​பூரில் நடந்த விழா​வில் ரூ.14,260 கோடி மதிப்​பிலான பல்​வேறு திட்​டங்​களை பிரதமர் நரேந்​திர மோடி தொடங்கி வைத்​தார். சில திட்​டங்​களுக்கு அவர் அடிக்​கல் நாட்​டி​னார். அங்கு நடந்த விழா​வில் அவர் பேசி​ய​தாவது: சத்​தீஸ்​கரில் இயற்கை வளங்​கள் நிறைந்​திருக்​கிறது. இதன்​காரண​மாக மாநிலத்​தின் தொழில் துறை அபார வளர்ச்சி அடைந்து வரு​கிறது. இதற்கு வித்​திட்​ட​வர் முன்​னாள் முதல்​வர் ரமண் சிங். தற்​போது அவர் சட்​டப்​பேர​வை​யின் சபா​நாயக​ராக உள்​ளார். இந்த நேரத்​தில் அவரை மனதார பாராட்​டு​கிறேன். இவ்​வாறு பிரதமர் நரேந்​திர மோடி பேசி​னார்.

நயா ராய்ப்​பூரில் 9.75 ஏக்​கர் பரப்​பள​வில் ரூ.50 கோடி செல​வில் பழங்​குடி சுதந்​திர போராட்ட வீரர்​களின் அருங்​காட்​சி​யகம் அமைக்​கப்​பட்டு உள்​ளது. இது நாட்​டின் முதல் டிஜிட்​டல் பழங்​குடி​யின அருங்​காட்​சி​யகம் ஆகும். இதனை பிரதமர் நரேந்​திர மோடி திறந்து வைத்​தார். பிரம்ம குமாரி​கள் அமைப்பு சார்​பில் நயா ராய்ப்​பூரில் 1.5 ஏக்​கரில் பிரம்​மாண்ட தியான கூடம் கட்​டப்​பட்டு உள்​ளது. அந்த தியான கூடத்​தை​யும் பிரதமர் மோடி திறந்து வைத்​தார்.

கடந்த 2012-ம் ஆண்டு முதல் நயா ராய்ப்​பூரில் ஸ்ரீ சத்ய சாய் சஞ்​சீ​வினி மருத்​து​வ​மனை செயல்​பட்டு வரு​கிறது. அந்த மருத்​து​வ​மனை​யில் இது​வரை 37,000 குழந்​தைகளுக்கு இலவச​மாக இதய அறு​வைச் சிகிச்சை செய்​யப்​பட்டு உள்​ளது. அங்கு அண்​மை​யில் இதய அறு​வைச் சிகிச்​சை செய்​து கொண்​ட 2,500 குழந்​தைகளு​டன்​ பிரதமர்​ நரேந்​திர மோடி நேற்​று கலந்​துரை​யாடி​னார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.