தமிழக எல்லையில் ஆம்னி பேருந்துகள் நிறுத்தம்: பெங்களூரு பயணிகள் அவதி

பெங்களூரு: தமிழகத்​தில் இருந்து பெங்​களூரு​வுக்கு இயக்​கப்​படும் ஆம்னி பேருந்​துகள் எல்​லை​யிலேயே நிறுத்​தப்​படு​வ​தால் பயணி​கள் கடும் அவதிக்கு ஆளாகி​யுள்​ளனர்.

தமிழகத்​தில் இருந்து கர்​நாடகா​வுக்கு இயக்​கப்​பட்ட தமிழக பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்​துகள் உரிய அனு​ம​தி, பாது​காப்புச் சான்​றிதழ் இல்​லாதவை​யாக இருப்​ப​தாகக் ​கூறி, அம்​மாநில போக்​கு​வரத்து துறை அதி​காரி​கள் 60 பேருந்​துகளுக்கு அபராதம் விதித்​தனர். மேலும் ‘ஆல் இந்தியா டூரிஸ்ட் பெர்​மிட்’ விதி​களின்படி சாலை வரி விதிக்​கப்​பட்​டது. இதற்கு எதிர்ப்பு தெரி​வித்த தமிழக ஆம்னி பேருந்து உரிமை​யாளர்கள் சங்​கம் கர்​நாட​கா, கேரளா உள்​ளிட்ட மாநிலங்​களுக்கு பேருந்​துகள் இயக்​கப்​ப​டாது என அறி​வித்​தது.

இந்​நிலை​யில் நேற்று முன்தினம் தமிழகத்​தில் இருந்து கர்​நாட​கா​வில் உள்ள பெங்​களூரு, மைசூரு உள்​ளிட்ட இடங்​களுக்குச் செல்ல வேண்​டிய ஆம்னி பேருந்​துகள் தமிழக எல்​லை​யில் நிறுத்​தப்​பட்​டன. தூக்க கலக்​கத்​தில் இருந்த பயணி​களை வேறு வாக​னங்​களில் கர்​நாடகா​வுக்குச் செல்​லுமாறு இறக்கிவிட்​டனர்.

இதனால் ஆயிரக்​கணக்​கான பயணி​கள் காலை​யிலேயே சுமார் 1 கி.மீ. தூரம் சுமை​களோடு நடந்து சென்​று, பெங்​களூரு பேருந்​துகளில் ஏறி சென்​றனர். இந்த சந்​தர்ப்​பத்தை பயன்படுத்தி சில ஆட்​டோ, வாடகை கார் ஓட்​டுநர்​கள் கூடு​தல் கட்​ட​ணம் வசூலித்​த​தால் பயணி​கள் கடும் சிரமத்​துக்கு ஆளாகினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.