Ravindra Jadeja Demand For CSK RR Trade: ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறது என்றால், அது ரவீந்திர ஜடேஜா – சஞ்சு சாம்சன் டிரேடிங்கை தான் என சொல்ல வேண்டும். சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இடையே முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்து, பிசிசிஐயிடம் இந்த டிரேடிங் குறித்து அதிகாரப்பூர்வமாக சமர்பிக்கப்பட்டுவிட்டதாக கூறப்படும் நிலையில், இன்னும் ஓரிரு நாள்களில் இந்த டிரேட் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளிவரலாம் என கூறப்படுகிறது.
Add Zee News as a Preferred Source
Ravindra Jadeja CSK Trade: டிரேடிங்கில் சின்ன சிக்கல்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரவீந்திர ஜடேஜா (ரூ.18 கோடி) மற்றும் சாம் கரண் (ரூ.2.4 கோடி) ஆகியோரை டிரேடிங் மூலம் ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணி பெறுகிறது. பதிலுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் இருந்து சஞ்சு சாம்சனை (ரூ.18 கோடி) சிஎஸ்கே பெற்றுக்கொள்கிறது. ஹர்திக் பாண்டியா 2024இல் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து மும்பைக்கு வந்த டிரேடை விட, இது மிகப்பெரிய டிரேடாக அமையும் எனலாம்.
இருப்பினும், தற்சமயம் இந்த சஞ்சு சாம்சன் – ரவீந்திர ஜடேஜா – சாம் கரண் டிரேட் இறுதியாகாமல் இருக்கிறது. குறிப்பாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தற்போது 8 வெளிநாட்டு வீரர்கள் இருப்பதால் கூடுதலாக ஒரு வெளிநாட்டு வீரரை அணிக்குள் எடுக்க முடியாது. அந்த வகையில், ஹசரங்கா மற்றும் தீக்ஷனா ஆகியோரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விடுவிக்கும்பட்சத்தில் அந்த இடத்தில் சாம் கரண் கொண்டுவரப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Ravindra Jadeja CSK Trade: சஞ்சு சாம்சனுக்கு கேப்டன்ஸியா…?
ஏறத்தாழ சஞ்சு சாம்சன் சிஎஸ்கேவுக்கு வருவது உறுதியாகி இருக்கிறது என்றாலும், ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன்ஸியில் நீடிப்பாரா அல்லது சஞ்சு சாம்சனுக்கு பொறுப்பு வழங்கப்படுமா என்ற கேள்வியும் எழுகிறது. புதிய அணியை அமைக்காத வரையில், ஏற்கெனவே உருவான ஸ்குவாடில் புதிதாக வரும் சஞ்சு சாம்சனுக்கு கேப்டன்ஸி கொடுக்கப்பட மாட்டாது என முன்னாள் வீரர் ரவிசந்திரன் அஸ்வின் கணித்துள்ளார். இதில் யாரின் கணிப்பு சரியாகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Ravindra Jadeja CSK Trade: ஜடேஜா ஒப்புக்கொண்டது ஏன்?
அதேநேரத்தில், ஜடேஜா சென்னை அணியை விட்டுச் செல்வது ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜடேஜா சிஎஸ்கேவை ஒரு குடும்பமாக பார்த்த நிலையில், அவரால் எப்படி ராஜஸ்தானுக்கு செல்ல ஒப்புக்கொள்ள முடிந்தது என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த வகையில், சிஎஸ்கே அணியால் ஜடேஜாவை கட்டாயப்படுத்தி ராஜஸ்தான் அணிக்கும் சிஎஸ்கேவால் டிரேட் செய்ய இயலாது, ஜடேஜாவின் ஒப்புதல் தேவை என்பது ஐபிஎல் டிரேட் விதிகளிலேயே உள்ளது. அப்படியென்றால், ஜடேஜா இந்த டிரேடிங்கிற்கு ஒப்புக்கொள்ள என்ன காரணம் என்ற கேள்வியும் எழுகிறது. இதுகுறித்த தகவல்தான் தற்போது வெளியாகி இருக்கிறது.
Ravindra Jadeja RR Captaincy: ஜடேஜாவுக்கு கேப்டன்ஸியா?
அதாவது, ஜடேஜா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு செல்ல வேண்டுமென்றால் தனக்கு கேப்டன்ஸி வேண்டும் என கேட்டிருக்கிறார் என தகவல் கூறப்படுகிறது. அதற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் ஒப்புக்கொண்ட பின்னரே ஜடேஜா டிரேடிங்கிற்கு ஒப்புதல் கொடுத்திருக்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் சில தினங்களில் இந்த டிரேட் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம். 19 வயதாக இருந்தபோது 2008ஆம் ஆண்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி கோப்பையையும் வென்றிருந்தார், ரவீந்திர ஜடேஜா.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ரியான் பராக் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடையே கேப்டன்ஸிக்கு கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரவீந்திர ஜடேஜா தற்போது கேப்டன்ஸியை பெற இருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.
மேலும் படிக்க | CSK ஜடேஜாவை கட்டாயப்படுத்த முடியுமா? ஐபிஎல் டிரேடிட் ரூல்ஸ் சொல்வது என்ன?
மேலும் படிக்க | சஞ்சு சாம்சன் சிஎஸ்கே வருவதில் திடீர் சிக்கல்? ஜடேஜா நீடிக்க வாய்ப்பு!
மேலும் படிக்க | சஞ்சு சாம்சன் மட்டும் இல்லை! இந்த 2 வீரர்களை டார்கெட் செய்யும் சிஎஸ்கே!
About the Author

Sudharsan G
I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
…Read More