‘பரகாமணி' திருட்டு வழக்கில் குற்றவாளியை பிடித்த தேவஸ்தான முன்னாள் பாதுகாப்பு அதிகாரி மர்ம சாவு: போலீஸார் விசாரணை

திருப்பதி: ​திருப்​பதி ஏழு​மலை​யானுக்கு பக்​தர்​கள் உண்​டியல் மூலம் செலுத்​தும் பணத்தை எண்​ணும் இடத்தை ‘பர​காமணி’ என்​றழைக்​கின்​றனர்.
தீவிர சோதனை, கண்​காணிப்பு கேம​ராக்​கள் போன்ற கெடு​பிடிகள் இருந்​தா​லும், தேவஸ்​தான சீனியர் அஸிஸ்​டெண்​டாக பணிபுரிந்து வந்த ரவிக்​
கு​மார் கடந்த 2023-ம் ஆண்டு ஏப்​ரல் மாதம் வெளி​நாட்டு கரன்​ஸிகளை எடுத்து ஒளித்து வைத்து கொண்​டிருந்​த​போது, அங்கு பாது​காப்பு பணியி​லிருந்த திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான உதவி பாது​காப்பு அதி​காரி (ஏவிஎஸ்ஓ) சதீஷ் குமார் கையும் களவு​மாக பிடித்​தார்.

அவரிடம் நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில் சுமார் ரூ.100 கோடி வரை திருடியதை​யும் தான் திருடிய சொத்​துகளில் 2 வீடு​களை மட்​டும் வைத்து கொண்டு மீத​முள்ள அனைத்து சொத்​துகள் அனைத்​தை​யும் மீண்​டும் தேவஸ்​தானத்​திற்கே திருப்பி தான​மாக கொடுத்து விடு​வ​தாக​வும் கூறி​னார்.
இதனிடையே ஆந்​தி​ரா​வில் ஆட்சி மாறியதையடுத்​து, இது தொடர்​பாக ஆந்​திர உயர்​நீதி மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்டு சிஐடி போலீ​ஸார் விசா​ரிக்க உத்​தர​விடப்​பட்​டது. சமீபத்​தில் இந்த விசா​ரணைக்கு ரவிக்​கு​மாரை கைது செய்த முன்​னாள் தேவஸ்​தான உதவி பாது​காப்பு அதி​காரி சதீஷ் குமார் வாக்குமூலம் கொடுத்தார்.

இந்​நிலை​யில், தற்​போது குந்​தக்​கல் ரிசர்வ் போலீஸ் படை​யில் இன்​ஸ்​பெக்​ட​ராக பணி​யாற்றி வரும் முன்​னாள் தேவஸ்​தான உதவி பாது​காப்பு அதி​காரி சதீஷ்கு​மார் நேற்று அனந்​த​பூர் மாவட்​டம், தாடிபத்ரி அருகே கோமலி ரயில் நிலை​யத்​துக்கு சற்று தொலை​வில் தண்​ட​வாளத்​தில் பிண​மாக கண்​டெடுக்​கப்​பட்​டார். ரவிக்​கு​மார் திருட்டு வழக்​கில் முக்​கிய சாட்​சி​யான சதீஷ்கு​மார் கொலைசெய்​யபட்​டா​ரா? அல்​லது தற்​கொலை செய்​து கொண்​​டா​ரா என்​ற கோணத்​தில்​ போலீ​ஸார்​ வி​சா​ரணை நடத்​தி வரு​கின்​றனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.