
மும்பை: பிஹாரில் எதிர்க்கட்சிகள் கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ போட்டியிட்டாலும் வாக்காளர்கள் பிரதமர் நரேந்திர மோடியை உறுதியாக ஆதரித்துள்ளனர் என்றும், பிரதமர் மோடி பொதுமக்களின் இதயத்தில் வாழ்கிறார் என்றும் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.
இதுபற்றி பேசிய தேவேந்திர பட்னாவிஸ், “பிஹாரில் எதிர்க்கட்சிகள் ஒன்றாகவும், தனித்தனியாகவும் தேர்தலில் போட்டியிட்டன, ஆனால் பொதுமக்கள் பிரதமர் மோடியை ஆதரிக்கின்றனர். பிரதமர் மோடி பொதுமக்களின் இதயத்தில் வாழ்கிறார். ஒருவரின் குடும்பத்திலோ அல்லது கட்சியிலோ என்ன நடக்கிறது என்பது குறித்து நான் கருத்து தெரிவிக்க மாட்டேன். நாங்கள் பொதுமக்களுக்கு சேவை செய்வதில் கவனம் செலுத்துகிறோம்.