
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் சொத்துகள் தொடர்பாக அறநிலையத் துறை, வருவாய்த் துறை தாக்கல் செய்த பட்டியலில் வேறுபாடுகள் இருப்பதால், இரு துறை அதிகாரிகளும் ஆவணங்கள் அடிப்படையில் கோயில் சொத்துகளை உறுதிப்படுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் மற்றும் அதன் உபகோயில்களுக்குச் சொந்தமான சொத்துகளை மீட்டு முறையாகப் பராமரிக்கவும், மீனாட்சியம்மன் கோயிலில் புனரமைப்புப் பணிகள் மேற்கொண்டு, விரைவில் குடமுழுக்கு நடத்தக் கோரியும், சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.