Chennai Super Kings, IPL 2026 Mini Auction : ஐபிஎல் 2026 தொடர் வரும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறும். தோனி விளையாடும் கடைசி சீசன் என கூறப்படுவதால் நடப்பு சீசனில் ஐபிஎல் தொடருக்கு எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.
Add Zee News as a Preferred Source
ஐபிஎல் 2026 சீசனை முன்னிட்டு அபுதாபியில் வரும் டிச. 16ஆம் தேதி மினி ஏலம் நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு அணிகளும் பற்பல தேவைகளுடன் மினி ஏலத்திற்கு வர இருக்கின்றன. அதிலும் கேகேஆர் அணி ரூ.63.3 கோடியுடனும், சிஎஸ்கே அணி ரூ.43.4 கோடியுடனும் ஏலத்திற்கு வருகின்றன.
Chennai Super Kings: சிஎஸ்கேவின் பேட்டிங் ஆர்டர்
சிஎஸ்கே அணி ஜடேஜா மற்றும் சாம் கரணை ராஜஸ்தானுக்கு டிரேட் செய்துவிட்டு, சஞ்சு சாம்சனை பெற்றிருக்கிறது. இதன்மூலம் டாப் ஆர்டர் பிரச்னையை சிஎஸ்கே தீர்த்துவிட்டது என்றே சொல்லலாம். இதனால் ராகு திரிபாதி, டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா உள்ளிட்டோரை சிஎஸ்கே கழட்டிவிட்டது. சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட், ஆயுஷ் மாத்ரே, உர்வில் பட்டேல், டிவால்ட் பிரேவிஸ், ஷிவம் தூபே என பேட்டிங் சிறப்பாக தோற்றமளிக்கிறது. இருப்பினும் ஜடேஜாவுக்கான மாற்று வீரரை சிஎஸ்கே ஏலத்தில் கண்டெடுக்க வேண்டும்.
Chennai Super Kings: சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் தேவை
ஜடேஜாவை போல் 4 ஓவர்கள் சுழற்பந்துவீச்சு வீசவும், பின்வரிசையில் பேட்டிங் செய்யவும் ஒரு இந்திய வீரர் தேவை. ஆனால், ஜடேஜா போன்ற அனுபவம் கொண்டவர் கிடைப்பது அரிதினும் அரிது. அதுவும் இந்திய வீரர் என்பது மிக மிக அரிது. இதனால்தான், மேக்ஸ்வெல் அல்லது லிவிங்ஸ்டனை எடுக்கவேண்டும் என சிஎஸ்கே ரசிகர்கள் இணையத்தில் பேசி வந்தனர். ஆனால் இப்போது மேக்ஸ்வெல் மினி ஏலத்திற்கு பதிவு செய்யாததால் அவர் ஏலத்திற்கே வரப்போவதில்லை. லிவிங்ஸ்டனின் பார்மை நம்பி அவரை எடுத்தாலும் பெரியளவில் கைக்கொடுப்பாரா என்ற சந்தேகமும் இருக்கும். இதனால்தான், அகேல் ஹூசைன், மைக்கெல் பிரேஸ்வெல் ஆகியோரையும் சிஎஸ்கே குறிவைக்கும் என கூறப்படுகிறது.
Chennai Super Kings: வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டரும் தேவை
மறுபுறம், ஆன்ட்ரே ரஸ்ஸலும் ஓய்வை அறிவித்துவிட்டதால் வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் கிடைப்பதும் சிக்கலாகிவிட்டது. சாம் கர்ரணை சிஎஸ்கே கழட்டிவிட்டாலும், ஜேமி ஓவர்டனை தக்கவைத்திருந்தது. இருப்பினும் இன்னொரு வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் சிஎஸ்கேவுக்கு தேவை. ஆனால் வெளிநாட்டு வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக கேம்ரூன் கிரீன் மட்டுமே இருக்கிறார். இந்தச் சூழலில், சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர், வேகப்பந்துவீச்சு் ஆல்-ரவுண்டர் என இரண்டு வெளிநாட்டு வீரர்களை எடுத்தாலும் பிளேயிங் லெவனில் ஒருவரை மட்டுமே விளையாட வைக்க முடியும். பிரேவிஸ், நூர் அகமது, எல்லிஸ் ஆகியோரின் இடம் உறுதி என்பதால் பிளேயிங் லெவனில் ஒரே வெளிநாட்டவரை விளையாட வைக்க இயலும்.
Chennai Super Kings: இந்திய ஆல்-ரவுண்டரின் தேவை
இதனால், வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர், சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் இரண்டிலும் இந்திய வீரர்களை கண்டிப்பாக எடுத்தாக வேண்டும். சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர்கள் இந்தியாவில் கொட்டிக்கிடந்தாலும் கூட, சிஎஸ்கேவுக்கு தேவை என்பது ஒரு பினிஷர்தான். அந்த வகையில், பின்வரிசையில் இறங்கி அதிரடி காட்டக்கூடிய வீரராக 20 வயதான உத்தர பிரதேச வீரர் பிரசாந்த் வீர் என்பவரை சிஎஸ்கே குறிவைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Chennai Super Kings: யார் இந்த பிரசாந்த் வீர்?
2022ஆம் ஆண்டில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரின் மூலம் பிரசாந்த் வீர் கவனம் ஈர்த்தார். அதன்பின் 2023ஆம் ஆண்டிலேயே சையத் முஷ்டாக் அலி டிராபி தொடரில் களமிறங்கினார். தொடர்ந்து, உள்நாட்டு தொடர்களில் சிறந்த ஆல்-ரவுண்டராக வலம் வந்த பிரசாந்த் வீர், இந்தாண்டு நடந்த UPT20 லீக் தொடரில் தனது முழு திறனையும் வெளிப்படுத்தினார். அந்த தொடரில் 10 போட்டிகளில் 320 ரன்களை 155.34 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்திருந்தார், பிரசாந்த். அதில் 3 அரைசதமும் அடக்கம். மேலும், 6.69 எகானமியில் பந்துவீசி 8 விக்கெட்டுகளையும் சரித்தார். ஆட்டத்தை முடித்துக்கொடுக்கும் திறனும் இவரிடம் இருந்தது. மேலும், UPT20 தொடரின் இந்த சீசனில் வளர்ந்தவரும் வீரருக்கு வழங்கப்படும் Emerging Player of The Season விருதை வென்றார்.
Chennai Super Kings: SMAT தொடரிலும் கலக்கல்
23 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளிலும் பிரசாந்த் வீரர் கலக்கினார். இந்தாண்டில் மட்டும் 5 போட்டிகளில் 255 ரன்களை அடித்து 14 விக்கெட்டை எடுத்திருக்கிறார். அதேநேரத்தில், 23 வயதுக்குட்பட்டோருக்கான தொடரின் காலிறுதிப்போட்டியில் 22 பந்துகளில் 61 ரன்கள் என அதிரடியாக ரன்களை குவித்தது மட்டுமின்றி அந்த போட்டியில் பந்துவீசி 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதுவே அவரை சீனியர் அணி பக்கம் கொண்டுவந்தது. மேலும் தற்போது நடைபெற்று வரும் சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரிலும் அவர் கவனம் ஈர்க்கும் வகையில் விளையாடினார். ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிராக அதுவும் டெத் ஓவர்களில் ஆகிப் நபி மற்றும் யுத்விர் சிங் ஆகியோரை எதிர்கொண்டு 10 பந்துகளில் 37 ரன்களை குவித்தார். மேலும், அதே போட்டியில் 4 ஓவர்களை வீசி 20 ரன்களுக்கு 3 விக்கெட்டையும் கைப்பற்றினார்.
Chennai Super Kings: சிஎஸ்கே நிச்சயம் ஏலத்தில் எடுக்கும்
ஜடேஜாவை போல் பிரசாந்த் வீர் இடதுகை வீரர் ஆவார். இவருக்கு இருக்கும் பினிஷிங் திறன் மற்றும் ஆல்-ரவுண்டிங் திறன் ஆகியவற்றுக்காகவே சிஎஸ்கே இவரை நிச்சயம் ஏலத்தில் குறிவைக்கும். சிஎஸ்கேவிடம் அதிகம் தொகை இருப்பதால் இவருக்கு கடும் போட்டி இருக்கும்பட்சத்தில் அதிக தொகையை முதலீடு செய்யவும் தயக்கம் காட்டாது.
மேலும் படிக்க | கோடிகள் கொட்டும் மினி ஏலம்: 2026-ல் இந்த ஒரு வீரருக்கு ஜாக்பாட் உறுதி?
மேலும் படிக்க | வெறியோடு காத்திருக்கும் CSK… ஏலத்தில் இந்த இந்திய பௌலருக்கு கோடிகள் கொட்டுமாம்…!
மேலும் படிக்க | ஏன் திடீர் என மேக்ஸ்வெல், ரஸ்ஸல் ஐபிஎல்லில் இருந்து விலகினர்? காரணம் இது தானா?
About the Author

Sudharsan G
I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
…Read More