மனைவியுடன் தகராறு: 2 குழந்தைகளை கொன்று வாலிபர் தற்கொலை

பிஜ்னோர்,

உத்தரப் பிரதேசம் மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மகன், மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முபாரக்பூர் குர்த் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபுராம் (28 வயது). இவருக்கு தீபன்ஷு (5 வயது) என்ற மகனும், ஹர்ஷிகா (3 வயது) என்ற மகளும் இருந்தனர். பாபுராமுக்கும் அவரது மனைவிக்கும் இடையே கடந்த சில நாட்களாக அடிக்கடி சண்டை வந்துள்ளது. இந்த நிலையில் நேற்றும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து பாபுராம் தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள காட்டிற்கு சென்றுள்ளார். அங்கு வைத்து குழந்தைகள் இருவருக்கும் விஷம் கொடுத்துள்ளார். பின்னர் தானும் விஷம் குடித்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து அவர்கள் மூவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் மூவரும் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பாபுராம் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. குழந்தைகளின் உடல்களை அவர்களது உறவினர்கள் கொண்டு சென்றனர்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.