சென்னை: பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க தடை விதித்து மாநகராட்சியில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. மீறினால் ரூ.1 லட்சம் அபராதம் வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியின் டிசம்பர் மாதத்திற்கான மாதாந்திர மன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் டிசம்பர் 19ந்தேதிஅன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சென்னை மாநகராட்சியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய பிட்புல் மற்றும் ராட்வீலர் ஆகிய இன நாய்களை வளர்க்க தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த […]