மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு திட்டத்தை மேலும் 3 ஆண்டு நீட்டிக்க வேண்டும்: காங். சிந்தனை அமர்வு கூட்டத்தில் வலியுறுத்தல்

உதய்பூர்: ஒன்றிய பாஜ அரசால் இந்திய பொருளாதாரத்தின் நிலை மிகுந்த கவலை அளிக்கும் விதத்தில் இருப்பதாக குற்றம்சாட்டிய காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், ஜிஎஸ்டி இழப்பீட்டை மேலும் 3 ஆண்டுக்கு நீட்டிக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளார். கட்சியை வலுப்படுத்தவும், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிக்கவும் காங்கிரசின் 3 நாள் சிந்தனை அமர்வு கூட்டம் ராஜஸ்தானின் உதய்பூரில் நடக்கிறது. 2ம் நாளான நேற்றைய கூட்டத்தில், நாட்டின் பொருளாாதார பிரச்னைகள் குறித்து விவாதிக்கும் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் ஒன்றிய நிதி … Read more

மே 15 : பெட்ரோல் விலை ரூ. 110.85, டீசல் விலை ரூ.100.94

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 110.85 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் கோதுமை ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு தடை: விலை உயர்வை தடுக்க நடவடிக்கை

புதுடெல்லி: உள்நாட்டில் விலை உயர்வைக் கட்டுப்படுத்த கோதுமை ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு திடீர் தடை விதித்துள்ளது. தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கும் விதமாக இந்த தடை உத்தரவு உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது.உலகில் அதிகளவில் கோதுமை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் சீனாவும், 3வது இடத்தில் ரஷ்யாவும், 8வது இடத்தில் உக்ரைனும் உள்ளன. கடந்த 2 மாதமாக ரஷ்யா – உக்ரைன் போர் நடப்பதால், அந்நாடுகளில் இருந்து கோதுமை உற்பத்தி முற்றிலும் முடங்கி, உலகளாவிய … Read more

டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சமூக வலைதள பதிவில் வெளியிட்டுள்ள செய்தியில்,”டெல்லி தீ விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன்” என்று கூறியுள்ளார்.

கொரோனாவுக்கு உலக அளவில் 6,287,570 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62. 87 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,287,570 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 520,816,858 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 475,241,461 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 39,124 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நடப்பாண்டில் இதுவரை 117 குற்றவாளிகள் குண்டாசில் கைது: கமிஷனர் சங்கர் ஜிவால் தகவல்

சென்னை: நடப்பாண்டில் இதுவரை 117 குற்றவாளிகள் குண்டாசில் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:சென்னை பெருநகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்ய பல்வேறு  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில்,  கடந்த 1ம்  முதல் நேற்று வரை கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 82  குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் … Read more

17 கோடி பாக்கியை தராவிட்டால் முதல்வரின் பாதுகாப்புக்கு வாகனம் அனுப்ப முடியாது: ஆந்திர போக்குவரத்து துறை அதிரடி

திருமலை: ஆந்திர மாநில அரசுக்கு அம்மாநில போக்குவரத்து துறை நேற்று முன்தினம் கடிதம் அனுப்பியுள்ளது. அதில், ‘முதல்வர் மற்றும் முக்கிய பிரமுகர்களின் சுற்றுப்பயணம் மற்றும் பாதுகாப்புக்கு வழங்கப்படும் வாகனங்களுக்கு ₹17 கோடியே 5 லட்சம் மாநில அரசு செலுத்த வேண்டி உள்ளது. இந்த தொகை கடந்த 3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இதனை உடனே செலுத்தாவிட்டால் முதல்வர், முக்கிய பிரமுகர்களின் சுற்றுப் பயணத்திற்கு வாகனங்களை வழங்க முடியாது. முதல்வரின் மாவட்ட சுற்றுப் பயணங்கள் விரைவில் தொடங்க உள்ளது. … Read more

காரில் கடத்திய 250 கிலோ செம்மரக்கட்டை பறிமுதல்

திருவொற்றியூர்: செங்குன்றம் ஆலமரம் பகுதியில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை சோதனையிட்டனர். அதில் 5 அடி நீளம் கொண்ட  250 கிலோ எடையுள்ள 5 செம்மரக்கடைகள் இருந்தது. இதுதொடர்பாக கார் டிரைவர் சிவசங்கரை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் திருச்சி அருண்குமார்(29), செங்குன்றம் சரவணன் (எ) அர்னால்ட் சரவணன்(34), வியாசர்பாடி மோகன்(61), அண்ணனூர் ஜமால் (எ) அசேன் மொய்தீன்(34), கும்மிடிப்பூண்டி ரமேஷ்(46), இப்ராஹீம் ஷா(44), சிவசங்கர்(24), இப்ராஹிம்(56), பி.வி.காலனி சங்கர்(39) ஆகியோரை … Read more

பள்ளி மாணவி பலாத்காரம் ஆசிரியராக பணியாற்றிய மார்க்சிஸ்ட் பிரமுகர் கைது: நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகளை சீரழித்ததாக புகார்

திருவனந்தபுரம்: கேரளாவில் மலப்புரத்தில்  பணியில் இருந்தபோது 100க்கும் மேற்பட்ட மாணவிகளை பலாத்காரம் செய்ததாக  கூறப்பட்ட புகாரில், ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியரும், சிபிஎம் கவுன்சிலருமான  சசிகுமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம்,  மலப்புரத்தை சேர்ந்தவர் சசிகுமார் (57). மலப்புரம் மாவட்டத்திலுள்ள ஒரு அரசு  உதவி பெறும் தனியார் பள்ளியில் பணிபுரிந்த இவர், கடந்த மார்ச் மாதம் ஓய்வு  பெற்றார். மலப்புரம் நகரசபையில் மூன்று முறை சிபிஎம் கவுன்சிலராகவும்  இருந்துள்ளார். இந்நிலையில், ஆசிரியர்  சசிகுமார் பணியில் … Read more

போலி ஆவணம் கொடுத்து 2.76 கோடி கடன் மோசடி.: கணவன், மனைவி கைது

சென்னை:  தி.நகரில் இயங்கி வரும் பைனான்ஸ் நிறுவனத்தில், கடந்த 2017ம் ஆண்டு எம்.ஆர்.கார்டன் சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளர்கள் என்று கூறி ரவி, பொன்னம்மாள், மஞ்சு, வெங்கடேசன் மற்றும் பலர் சேர்ந்து ₹2.76 கோடி கடன் பெற்றுள்ளனர். அதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இடத்தின் ஆவணத்தை அடமானம் வைத்துள்ளனர்.அந்த ஆவணத்தை சரிபார்த்தபோது அவை போலியானவை என்றும், ஏற்கனவே பத்திரப்பதிவு துறையினரால் ரத்து செய்த ஆவணம் என்றும் தெரியவந்தது. எனவே போலியான ஆவணங்களை சமர்பித்து ₹2.76 கோடி … Read more