20 ஓவர் உலக கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்தியா-நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்

மெல்போர்ன், ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சூப்பர்12 சுற்றில் நேரடியாக களம் காணும் அணிகள் போட்டிக்கு தயாராகும் பொருட்டு தலா 2 பயிற்சி ஆட்டங்களுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஏற்பாடு செய்துள்ளது. இதில் பிரிஸ்பேனில் நேற்று முன்தினம் நடந்த முதலாவது பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 6 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை பதம் பார்த்தது. அந்த ஆட்டத்தில் லோகேஷ் ராகுல், சூர்யகுமார் யாதவ் அரைசதம் விளாசினர். வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி … Read more

தொடர் ஏவுகணை, பீரங்கி தாக்குதலில் ஈடுபடும் வடகொரியாவை கடுமையாக சாடிய தென்கொரியா

சியோல், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் வலியுறுத்தியும், வடகொரியா விடாமல் தொடர்ந்து ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது. தொடர்ந்து ஏவுகணை சோதனையை அதிகப்படுத்திவரும் வடகொரியா, அதன் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகளில் புதிய பீரங்கி தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதற்கு தென்கொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், வடகொரியாவின் இத்தகைய நடவடிக்கை, 2018 உடன்படிக்கையை மீறும் செயல் என்று தெரிவித்ததாக தென்கொரிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. “வட கொரியாவின் தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்கள் கொரிய தீபகற்பம் மற்றும் சர்வதேச சமூகத்தின் … Read more

கார் கண்ணாடியில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கரை அகற்ற கூறிய போலீசை நடுரோட்டில் புரட்டி எடுத்த நபர்

போபால், மத்தியபிரதேச மாநிலத்தில் காரின் உட்புறமும் தெளிவாக தெரியும் வகையிலான ஸ்டிக்கரை மட்டுமே கண்ணாடியில் ஒட்டவேண்டும் என்று விதி உள்ளது. விதியை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில், அம்மாநிலத்தின் இந்தூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலையில் வந்த ஒரு காரின் கண்ணாடி முழுவதும் தடை செய்யப்பட்ட கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. காரின் உள்ளே பயணிப்பவர்கள் யார்? என்பதே தெரியாத வகையில் மிகவும் அடர்த்தி மிகுந்த கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. இதை கண்ட அங்கு பணியில் … Read more

வாழ்வா-சாவா நெருக்கடியில் வெஸ்ட் இண்டீஸ்: ஜிம்பாப்வேயுடன் இன்று மோதல்

ஹோபர்ட், 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டின் முதல் சுற்றில் இன்று பி பிரிவில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் நிகோலஸ் பூரன் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி, கிரேக் எர்வின் தலைமையிலான ஜிம்பாப்வேயை எதிர்கொள்கிறது. தொடக்க ஆட்டத்தில் ஸ்காட்லாந்திடம் 42 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்த வெஸ்ட் இண்டீசுக்கு இது வாழ்வா-சாவா ஆட்டமாகும். இதிலும் தோற்றால் சூப்பர்12 சுற்று வாய்ப்பை ஏறக்குறைய … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 60.98 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63 கோடியே 7 லட்சத்து 7 ஆயிரத்து 516 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே … Read more

இரண்டு கூட்டாளிகளின் உதவியுடன் மாமியார் வீட்டில் கொள்ளையடித்த மருமகள்

பக்வாரா, பஞ்சாபில் சமீபத்தில் திருமணமான இளம்பெண் ஒருவர் தனது மாமியார் வீட்டில் இருந்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள நகைகள், பணம் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை இரண்டு இளைஞர்களின் உதவியுடன் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரேட்டர் கைலாஷ் பகுதியைச் சேர்ந்த வரீந்தர் மிஸ்ரா, என்பவரின் வீட்டில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. வரீந்தர் மிஸ்ராவின் இளைய மகனுக்கு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடந்துள்ளது. இருவரும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர். … Read more

டி20 உலகக்கோப்பை: ஐக்கிய அரபு அமீரக வீரர் 109 மீட்டர் தூரம் சிக்ஸ் அடித்து அசத்தல்..!

சிட்னி, 8-வது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. 16 அணிகளில் 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறின. மீதமுள்ள 4 அணிகளை தேர்வு செய்யும் விதமாக முதல் சுற்று ஆட்டங்களில் 8 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன. இந்நிலையில், நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் விளையாடின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 152 … Read more

ஆப்கானிஸ்தான்: கை, கால்களை கட்டிப்போட்டு 27 பேரை சுட்டுக்கொன்ற தலீபான்கள்

காபூல், ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தலீபான்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் இந்துகுஷ் மலைத்தொடரின் அருகே அமைந்துள்ள பஞ்ச்ஷீர் மாகாணத்தில் தலீபான்களுக்கு எதிரான கிளர்ச்சி படை செயல்பட்டு வருகிறது. இந்த கிளர்ச்சி படைக்கும் தலீபான்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த மாதம் பஞ்ச்ஷீர் மாகாணத்தில் நடந்த சண்டையில் கிளர்ச்சி படையினர் 40 பேர் கொல்லப்பட்டதாகவும், 100-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டதாகவும் தலீபான்கள் கூறியிருந்தனர். இந்த நிலையில் பஞ்ச்ஷீர் மாகாணத்தில் சிறைப்பிடிக்கப்பட்ட நபர்கள் … Read more

பிரதமர் மோடி இன்று குஜராத் பயணம் – ரூ. 15 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்…!

காந்தி நகர், குஜராத்தின் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்பட பல அரசியல் தற்போது முதலே பிரசாரம் உள்ளிட்ட தேர்தல் நடவடிக்கையில் இறங்கிவிட்டன. இந்நிலையில், பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று குஜராத் செல்கிறார். அவர் பாதுகாப்பு தொடர்பான கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். அதன் பின்னர், நிறைவு பெற்ற வளர்ச்சி திட்டங்களை தொடங்கி … Read more

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி: கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வெற்றி

கரூர் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி கரூரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 450 பேர் கலந்து கொண்டு விளையாடினர். இப்போட்டியில் கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவர் பிரசாந் 46 முதல் 48 கிலோ எடைப்பிரிவில் முதலிடத்தையும், மகாலட்சுமி என்ற மாணவி 52 கிலோ எடை பிரிவில் 3-வது இடமும் பிடித்து சாதனை படைத்தனர். இதையடுத்து, வெற்றி பெற்ற மாணவ-மாணவிக்கு கல்லூரி முதல்வர் … Read more