ரஷிய போருடன் காஷ்மீர் விவகாரம் ஒப்பீடு… ஐ.நா. சபையில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி

நியூயார்க், உக்ரைன் நாட்டின் டோனெட்ஸ்க், ஜபோரிஜ்ஜியா உள்ளிட்ட 4 பகுதிகளை ரஷியா தன்னுடன் இணைத்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஐ.நா. பொது சபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இதுபற்றிய வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு 143 உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்தன. 5 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தியா உள்பட 35 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருந்து விலகி இருந்தன. எனினும், உக்ரைனில் நடந்து வரும் போரில், பொதுமக்களின் உட்கட்டமைப்பு மீது தாக்குதல் நடத்தப்படுவது மற்றும் குடிமக்கள் உயிரிழப்பு … Read more

கல்வி நிலையங்களில் ஹிஜாப் தடை நீக்கமா? நீடிக்குமா? – சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு…!

புதுடெல்லி, கர்நடாக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு பி.யூ கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து உடுப்பி அரசு மகளிர் கல்லூரியில் பயிலும் இஸ்லாமிய மாணவிகள் பலர் அம்மாநில ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த கர்நாடக ஐகோர்ட்டு, ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசியம் இல்லை என்றும் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட … Read more

உலக கோப்பை: இந்திய அணியில் மாற்று வீரர்களாக முகமது சிராஜ், முகமது ஷமி, ஷர்துல் தாக்குர் சேர்ப்பு

புதுடெல்லி, 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் வருகிற 16-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே ஆஸ்திரேலியா சென்று பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. இந்திய அணியில் இடம் பிடித்து இருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு முதுகுபகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அணியில் இருந்து விலகி விட்டார். அவருக்கு பதிலாக மாற்று வீரர் யார்? என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்திய … Read more

ஸ்பெயினில் கொட்டித் தீர்த்த கனமழை – வீடுகள், வாகனங்கள் சேதம்

மேட்ரிட், ஸ்பெயின் நாட்டின் பல்வேறு நகரங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலச்சரிவு காரணமாக வீடுகள், வாகனங்கள் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன. ஸ்பெயினில் உள்ள டோரெவிஜா நகரில் கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், அங்கு கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் வாகன ஓட்டிகள் பலர் சிக்கிக் கொண்டனர். அடுத்த சில தினங்களுக்கு ஸ்பெயினில் மழை தொடர வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் … Read more

நாடு முழுவதும் ரூ.900 கோடி பணமுதலீட்டு மோசடி: 2 சீனர்கள் உள்பட 10 பேர் கைது

ஐதராபாத், நாட்டில் பல்வேறு இடங்களில் பணமுதலீடுகளில் மக்களை ஈடுபட செய்து, அவர்களை மோசடி செய்யும் கும்பலை கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். இதனால், பொருளாதார பாதிப்பு ஏற்படுகிறது என்றும் கூறப்படுகிறது. இதன்படி, நாட்டின் தலைநகர் டெல்லி மற்றும் பிற பகுதிகளில் உள்ள கால் சென்டர்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி உள்ளனர். இதுபற்றி ஐதராபாத் நகர காவல் ஆணையாளர் சி.வி. ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறும்போது, போலியான முதலீட்டு நிறுவனங்களின் நெட்வொர்க் கண்டறியப்பட்டு உள்ளது. அந்நிறுவனங்கள் மொபைல் … Read more

பள்ளி அணிகளுக்கான கால்பந்து: ரெட் அணி வெற்றி

சென்னை, லேட்டன்ட் வியூ அனலிடிக்ஸ் நிறுவனம் சார்பில் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளியை சேர்ந்த 13 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கான கால்பந்து போட்டி சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் 3-வது நாளான நேற்று சிறுவர்கள் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் ரெட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் சென்னை லயன்சை வீழ்த்தியது. மற்ற ஆட்டங்களில் ஒயிட் ஸ்பார்ட்டன்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் எவர் கிரீனையும், … Read more

அமெரிக்காவில் இந்திய மாணவரை குத்தி கொன்றது ஏன்? – கொரிய மாணவர் வாக்குமூலம்

வாஷிங்டன், அமெரிக்காவின் இன்டியானா பர்டூ பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு இந்தியாவை சேர்ந்த வருண் மணீஷ் சேடா (வயது 20) என்ற மாணவர் டேட்டா சயின்ஸ் பிரிவில் பயின்று வந்தார். இவர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார். இவருடன் கொரியாவை சேர்ந்த மின் ஜிம்மி ஷா என்ற மாணவரும் தங்கியிருந்தார். இந்தநிலையில் கடந்த வாரம் இவர்கள் இருவரும் அறையில் இருந்தபோது மின் ஜிம்மி ஷா திடீரென வருண் மணீஷ் சேடாவை கத்தியால் குத்தி கொலை … Read more

கர்நாடகத்தில் 11-வது நாளாக ஒற்றுமை பாதயாத்திரையை தொடங்கினார் ராகுல்காந்தி…!

பெங்களூரு, அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதி தமிழ்நாடு கன்னியாகுமரியில் ஒற்றுமை பாதயாத்திரையை தொடங்கினார். இந்த பாதயாத்திரை கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு வந்தது. அங்கு 19 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த 30-ந் தேதி ராகுல் காந்தியின் பாதயாத்திரை கர்நாடகத்திற்கு வந்தது. கர்நாடகத்தில் சாம்ராஜ்நகர் மாட்டம் குண்டலுபேட்டையில் இருந்து பாதயாத்திரை தொடங்கியது. இந்த பாதயாத்திரை மைசூரு, மண்டியா, துமகூரு ஆகிய மாவட்டங்கள் வழியாக சித்ரதுர்கா … Read more

குஜராத்தில் நடைபெற்று வரும் தேசிய விளையாட்டு போட்டி இன்று நிறைவடைகிறது..!

ஆமதாபாத், 36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத்தில் உள்ள ஆமதாபாத், ராஜ்கோட், சூரத் உள்பட 6 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த டிரையத்லான்( நீச்சல், ஓட்டம், சைக்கிளிங் ஆகிய 3 பந்தயங்கள் அடங்கிய போட்டி) கலப்பு தொடர் பிரிவில் ஆகாஷ் பெருமாள்சாமி, வாமன், ஆர்த்தி, கீர்த்தி ஆகியோர் அடங்கிய தமிழக அணி 1 மணி 59 நிமிடங்களில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. குஜராத் வெள்ளிப்பதக்கமும், மணிப்பூர் வெண்கலப்பதக்கமும் பெற்றது. அறிமுக போட்டியான … Read more

துபாயில் முதன்முறையாக பறந்த சீனாவின் பறக்கும் கார்

துபாய், சீனாவின் எக்ஸ்பெங் ஏரோத் என்ற நிறுவனம் மின்சாரத்தில் இயங்க கூடிய பறக்கும் கார்களை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளது. இந்த மின்சார கார்களை சர்வதேச சந்தைகளில் அறிமுகப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டு உள்ளது. இதன்படி எக்ஸ்2 என்ற பெயரிடப்பட்ட 2 பேர் அமர்ந்து செல்ல கூடிய பறக்கும் கார் ஒன்று, முதன்முறையாக பொதுமக்கள் முன்னிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் பறந்து சென்றது. ஒரு மூலைக்கு இரண்டு என மொத்தம் நான்கு மூலைகளிலும் எட்டு மின்சார … Read more