கர்நாடகாவில் அடுத்த 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த சில நாட்களுக்கு முன் வரலாறு காணாத கனமழை பெய்ததால், பெங்களூரு நகரமே வெள்ளத்தில் மூழ்கியது. இந்நிலையில், தற்போது பெங்களூருவில் இயல்பு நிலை திரும்பி உள்ள நிலையில், மீண்டும் பெங்களூருவில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக பெங்களூருவில் தினமும் மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை முதல் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக மஞ்சள் … Read more

20 ஓவர் உலக கோப்பை: இலங்கை-நெதர்லாந்து இன்று மோதல்

கீலாங், 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டின் முதல் சுற்றில் ஏ பிரிவில் இன்று கடைசிகட்ட லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. ஒரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இலங்கை அணி, நெதர்லாந்தை கீலாங் ஸ்டேடியத்தில் (இந்திய நேரப்படி காலை 9.30 மணி) சந்திக்கிறது. ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் உள்ள இலங்கை அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே சூப்பர்12 சுற்றுக்கு தகுதி பெற முடியும். 2 வெற்றியுடன் உள்ள நெதர்லாந்து ரன்ரேட்டில் பின்தங்கி இருப்பதால் அந்த … Read more

மின் உற்பத்தி நிலையங்கள் மீது ரஷியா தாக்குதல் – இருளில் மூழ்கிய உக்ரைன்!

கீவ், கிரீமியாவை ரஷியாவுடன் இணைக்கும் பாலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த குண்டு வெடிப்புக்கு உக்ரைன் தான் காரணம் என குற்றம் சாட்டிய ரஷியா உக்ரைன் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியது. உக்ரைனில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள் மீது ரஷியா நடத்திய தாக்குதலின் காரணமாக, கீவ் உள்ளிட்ட நகரங்கள் மின் தடையால் இருளில் மூழ்கியுள்ளன. ஏவுகணை தாக்குதலில் உக்ரைனின் முக்கிய மின் உற்பத்தி நிலையங்கள் பாதிக்கப்பட்டன. இதனால் கீவ் உள்ளிட்ட நகரங்களில் மின் தடையும், தண்ணீர் … Read more

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வி.ஐ.பி கலாச்சாரம்: மத்திய அரசுக்கு மருத்துவர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு!

புதுடெல்லி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மருத்துவ பராமரிப்பு ஏற்பாடுகளை ஒருங்கிணைத்து எளிதாக்க ஒரு மருத்துவ அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று புதிதாக நிலையான வழிகாட்டுதல் நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதனை ஏற்று, டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் எம் ஸ்ரீனிவாஸ், மக்களவை செயலகத்தின் இணைச் செயலாளர் ஒய்.எம்.காந்த்பாலுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், 24 மணி நேரமும் எய்ம்ஸ் கட்டுப்பாட்டு அறையில், மருத்துவமனை நிர்வாகத் துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் அதிகாரிகளாக இருப்பார்கள். அவர்கள், சிகிச்சைக்கு வரும் … Read more

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: தொடக்க சுற்றில் லக்‌ஷயா சென் வெற்றி

ஒடென்சி, டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஒடென்சி நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு தொடக்க சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய இளம் வீரர் லக்‌ஷயா சென் 21-16, 21-12 என்ற நேர்செட்டில் இந்தோனேஷியாவின் அந்தோணி சினிசுகா ஜின்டிங்கை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 21-13, 22-20 என்ற நேர்செட்டில் சீனாவின் ஜாவ் ஜுன் பெங்கை விரட்டினார். பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் … Read more

மியான்மர் சிறையில் பயங்கர குண்டு வெடிப்பு: 8 பேர் பலி

நோபிடாவ், மியான்மரின் 2-வது மிகப்பெரிய நகரமான யாங்கூனில் அந்த நாட்டின் மிகப்பெரிய சிறைச்சாலை உள்ளது. நூற்றாண்டு பழமையான இந்த சிறையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் அரசியல் கைதிகள் ஆவர். இந்த சிறையில் மிகவும் கடுமையான கட்டுப்பாடுகள் இருப்பதாகவும், கைதிகள் மனிதாபிமான மற்ற முறையில் நடத்தப்படுவதாகவும் பரவலாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை இந்த சிறையில் சில கைதிகளை பார்க்க அவர்களது உறவினர்கள் வந்திருந்தனர். அவர்கள் சிறையின் தபால் … Read more

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கு – இடைக்கால தடையை நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

புதுடெல்லி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கில், அமலாக்கத்துறை விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை மேலும் 2 மாதத்துக்கு நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அமலாக்கத்துறை விசாரணைக்கு சென்னை ஐகோர்ட்டு விதித்த இடைக்கால தடையை 2 மாதத்திற்கு நீட்டித்து … Read more

ரஷியாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைன் பிராந்தியங்களில் ராணுவ சட்டம் அமல்: புதின் அதிரடி

மாஸ்கோ, சிறப்பு ராணுவ நடவடிக்கை என கூறி உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கி 8 மாதங்கள் ஆகிறது. ஆனாலும் போர் முடிவில்லாமல் நீண்டு கொண்டு இருக்கிறது. இந்த போரில் உக்ரைனிடம் இருந்து ஆக்கிரமித்த லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய 4 பிராந்தியங்களை சமீபத்தில் ரஷியா தன்னுடன் இணைத்துக்கொண்டது. இது சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து, சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட அந்த 4 பிராந்தியங்களையும் ரஷியாவிடம் இருந்து மீட்டெடுக்க … Read more

உலக மல்யுத்த போட்டி: இந்திய வீரர் சஜன் பன்வாலா வெண்கலம் வென்று சாதனை

பாண்டேவெட்ரா, 23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி ஸ்பெயின் நாட்டில் உள்ள பாண்டேவெட்ரா நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான கிரீகோ ரோமன் பந்தயத்தில் 77 கிலோ எடைப்பிரிவின் முதல் சுற்றில் வெற்றி பெற்ற இந்திய வீரர் சஜன் பன்வாலா கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் மால்டோவா நாட்டு வீரர் அலெக்சான்ட்ரின் குதுவிடம் 0-8 என்ற புள்ளி கணக்கில் தோல்வி அடைந்தார். சஜனை வீழ்த்திய அலெக்சான்ட்ரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால் ‘ரெபிசாஜ்’ சுற்றில் பங்கேற்கும் வாய்ப்பு பெற்ற … Read more

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவா? சசிதரூரா? – ஓட்டு எண்ணிக்கை தொடக்கம்

புதுடெல்லி, கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததால், காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார். இடைக்கால தலைவராக சோனியாகாந்தி பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்து, கட்சிக்கு முழுநேர தலைவரை தேர்ந்தெடுக்க கடந்த 17-ந்தேதி தேர்தல் நடத்தப்பட்டது. மல்லிகார்ஜுன கார்கேவும், சசிதரூரும் போட்டியிட்டனர். நாடு முழுவதும் 68 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. 9 ஆயிரத்து 915 மாநில காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகள் ஓட்டுப்போட தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் 9 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் … Read more