ஆசிய கோப்பை பெண்கள் டி20 கிரிக்கெட்: இந்தியா – மலேசியா அணிகள் இன்று மோதல்

சில்கெட், 7 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. இதொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகிறது. பாகிஸ்தான் – வங்காளதேசம் அணிகள் காலை 8.30 மணிக்கு மோதுகின்றன. அடுத்ததாக நடைபெறும் ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணி மலேசியாவை எதிர்கொள்கிறது. இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் இலங்கை அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது. மலேசியா அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 9 … Read more

புளோரிடாவை உலுக்கிய இயான் புயல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு – 54 பேர் உயிரிழப்பு!

வாஷிங்டன், அமெரிக்க வரலாற்றின் மிக மோசமான புயல்களில் ஒன்றாகக்கருதப்படுகிற ‘இயான்’ புயல், அந்த நாட்டின் புளோரிடா மாகாணத்தை தாக்கியது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கேயோ கோஸ்டா என்ற கடற்கரை பகுதியருகே இயான் சூறாவளி புயல் கடந்த புதன்கிழமை மதியம் கரையை கடந்தது. இதனால், மணிக்கு அதிகபட்சம் 150 மைல்கள் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. புளோரிடாவை சூறையாடி சென்ற இயான் சூறாவளி புயல், தெற்கு கரோலினா கடற்கரையில் 2-வது முறையாக நேற்று முன்தினம் கரையை கடந்தது. … Read more

ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் குஜராத்தில் பசு பாதுகாப்புக்கு நாளொன்றுக்கு ரூ.40 வழங்கப்படும்- அரவிந்த் கெஜ்ரிவால்

ராஜ்கோட், பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் அங்கு தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. டெல்லி, பஞ்சாப்பை தொடர்ந்து குஜராத்திலும் கொடி நாட்ட துடிக்கும் ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால், அடிக்கடி குஜராத் பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். அந்தவகையில் பஞ்சாப் ஆம் ஆத்மி முதல்-மந்திரி பகவந்த் … Read more

இரானி கோப்பை கிரிக்கெட்: ரெஸ்ட் ஆப் இந்தியா அணி 374 ரன்னுக்கு ஆல்-அவுட் – சகாரியா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்

ராஜ்கோட், இரானி கோப்பை கிரிக்கெட்டில் ரெஸ்ட் ஆப் இந்தியா-சவுராஷ்டிரா அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ரெஸ்ட் ஆப் இந்தியா அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் ஆட களம் இறங்கிய சவுராஷ்டிரா அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் பேட்ஸ்மன்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். முதல் இன்னிங்சில் அந்த அணி 98 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடிய ரெஸ்ட் ஆப் இந்தியா அணி முதல் நாள் … Read more

பிரேசில் அதிபர் தேர்தல்: மீண்டும் வெற்றி பெறுவாரா ஜெயீர் போல்சனரோ..?

பிரேசிலியா, உலகின் 4-வது மிகப்பெரிய ஜனநாயக நாடான பிரேசிலில் நேற்று அதிபர் தேர்தல் நடந்தது. உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாக்குச்சாவடிகளில் மக்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். வாக்குப்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ஜெயீர் போல்சனரோ மீண்டும் போட்டியிடுகிறார். அவர் உள்பட மொத்தம் 9 பேர் அதிபர் பதவிக்கான போட்டியில் களத்தில் … Read more

விண்வெளியில் ஆய்வு பணியில் ஈடுபட்ட மங்கள்யான் விண்கலம் செயலிழந்தது

பெங்களூரு: இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ), விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2013-ம் ஆண்டு ரூ.450 கோடி செலவில் பி.எஸ்.எல்.வி.-25 ராக்கெட் மூலம் மங்கள்யான் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. அது 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ந் தேதி செவ்வாய் கிரக கோளப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் அதன் செயல்பாடு நின்றுள்ளது. இதன் மூலம் மங்கள்யான் விண்கலம் விடை பெற்று கொண்டது. இதுகுறித்து இஸ்ரோ அதிகாரிகள் கூறியதாவது:- மங்கள்யான் விண்கலத்தில் … Read more

டி20 உலகக் கோப்பையை வெல்ல இந்த இரு அணிகளுக்கு தான் அதிக வாய்ப்பு – ஷேன் வாட்சன்

8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் உட்பட 8 அணிகள் பங்கேற்கும் முதல் சுற்றில் இருந்து 4 அணிகள் … Read more

இந்தோனேசியா: கால்பந்து ரசிகர்கள் வன்முறையில் 174 பேர் உயிரிழந்த சம்பவம்- அந்நாட்டு அதிபர் இரங்கல்

ஜகார்த்தா, இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணம் மலாங் நகரில் உள்ள கஞ்சுருஹான் மைதானத்தில் நேற்று முன்தினம் கால்பந்து போட்டி நடந்தது. இதில் உள்ளூர் அணியான அரேமா மற்றும் பெர்செபயா சுரபயா அணிகள் களம் கண்டன. கால்பந்து போட்டியை காண சுமார் 42 ஆயிரம் பார்வையாளர்கள் மைதானத்தில் திரண்டிருந்தனர். அவர்கள் அனைவருமே அரேமேனியாக்கள் என்று அழைக்கப்படும் அரேமா கால்பந்து அணியில் ரசிகர்கள் ஆவர். வீண் சச்சரவுகளை தவிர்க்கும் பொருட்டு பெர்செபயா சுரபயா கால்பந்து அணியின் ரசிகர்கள் யாரும் மைதானத்தில் … Read more

உ.பி.யில் துர்கா பூஜை பந்தலில் தீ விபத்து: 42 பேர் காயம்!

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் பதோஹியில் துர்கா பூஜை பந்தலில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தில் 42 பேர் காயமடைந்தனர். இரவு 9.30 மணியளவில் ஆரத்தி நடைபெற்றுக் கொண்டிருந்த போது இந்த தீ விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவத்தின் போது பந்தலுக்குள் சுமார் 300 பேர் இருந்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த சம்பவம் குறித்த தகவலறிசம்பவந்து தீயணைப்பு வீரர்கள் உடனே அங்கு சென்று தீயை அணைத்தனர். மீட்புப் பணிகளை மேற்பார்வையிட … Read more

மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி: பெரம்பலூர்-சென்னை அணிகள் இறுதி போட்டியில் மோதுகின்றன

பெரம்பலூர் தமிழ்நாடு பள்ளிகள் கிரிக்கெட் சங்கம் சார்பில் 17 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான 13-வது மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகள் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனத்தின் விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று மதியம் அரையிறுதி போட்டிகள் நடந்தது. இதில் பெரம்பலூர்-திருப்பத்தூர் அணிகள் மோதின. மற்றொரு ஆட்டத்தில் சென்னை-அரியலூர் அணிகள் மோதின. இதில் பெரம்பலூர் அணியும், சென்னை அணியும் வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தன. இறுதி போட்டி இன்று (திங்கட்கிழமை) … Read more