குருகிராம் பகுதியில் சமூக ஊடக விளம்பரங்கள் மூலம் ஆயுதங்கள் விற்பனை: போலீசார் அதிர்ச்சி!

குருகிராம், டெல்லியை ஒட்டியுள்ள குருகிராம் பகுதியில் சமூக ஊடக விளம்பரங்கள் மூலம் ஆயுத விற்பனை செய்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகநூல் மற்றும் வாட்ஸ்அப் விளம்பரங்களில் அனுமதியின்றி ஆயுதங்கள் விற்பனை செய்ததாக குருகிராம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதற்காக ஒரு மொபைல் எண்ணைப் பயன்படுத்தி மூன்று பேஸ்புக் கணக்குகள் திறக்கப்பட்டன. கைத்துப்பாக்கிகள் விற்பனைக்கு என்று அந்த மொபைல் எண்ணில் இருந்து மக்களுக்கு வாட்ஸ்அப் செய்திகளும் அனுப்பப்பட்டன. கலா ஜாத்தேரி என்ற ரவுடியின் பெயரை குறிப்பிட்டு சமூக … Read more

ஆசிய கோப்பை: பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடக்கம் – இந்தியா-இலங்கை இன்று மோதல்

சில்கெட், 7 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் இன்று தொடங்குகிறது. முதல் நாளில் நடைபெறும் லீக் ஆட்டங்களில் வங்காளதேசம்-தாய்லாந்து, இந்தியா-இலங்கை அணிகள் மோதுகின்றன. ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட் போட்டி 2004-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. முதல் 4 தொடர் ஒருநாள் போட்டி (50 ஓவர்) வடிவில் நடத்தப்பட்டது. 2012-ம் ஆண்டில் இருந்து இந்த போட்டி20 ஓவர் கொண்டதாக நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2018-ம் ஆண்டு மலேசியாவில் … Read more

மீண்டும் மிரட்ட வரும் புதிய வைரஸ் கோஸ்டா-2

ஜெனீவா, கடந்த 2 ஆண்டுகளாக உலகை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் பெருந்தொற்று, கிட்டத்தட்ட உலகளவில் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரஸ் ஜிப்ரியேசிஸ் நேற்று முன்தினம் இதை மகிழ்ச்சியுடன் அறிவித்தார். ஆனால், கொரோனாவை போன்றே மனிதர்களை அச்சுறுத்தக் கூடிய புதிய வைரஸ் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு ‘கோஸ்டா-2’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. ரஷ்ய வவ்வால்களில் காணப்படும் இந்த வைரஸ், தற்போதுள்ள எந்த தடுப்பூசிக்கும் கட்டுப்படாது என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர். இதனால், புதிய … Read more

5ஜி சேவை இன்று தொடக்கம் – பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

புதுடெல்லி, சமீபத்தில், 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்டது. ஜியோ, ஏர்டெல், வோடபோன்-ஐடியா, அதானி நிறுவனம் ஆகியவை ஏலம் எடுத்தன. மொத்தம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி மதிப்புள்ள அலைக்கற்றைகள் ஏலம் போனது. இந்தநிலையில், நாட்டில் 5ஜி சேவை இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. டெல்லி பிரகதி மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், 5ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். முதலில், குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் 5ஜி சேவை அமலுக்கு வருகிறது. 2 ஆண்டுகளுக்குள் படிப்படியாக நாடு … Read more

ஒரு அணியாக நாங்கள் பல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் – ஹர்மன்பிரீத் கவுர்

சில்கெட், 8-வது ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) வங்காளதேசத்தில் உள்ள சில்ஹெட் நகரில் இன்று முதல் வருகிற 15-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இந்தியா, நடப்பு சாம்பியன் வங்காளதேசம், பாகிஸ்தான், தாய்லாந்து, இலங்கை, மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 7 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை … Read more

ஆப்கானிஸ்தானில் கல்வி மையத்தில் பயங்கர குண்டு வெடிப்பு 32 பேர் உடல் சிதறி பலி

காபூல், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள தஷ்ட்-இ-பார்ச்சி நகரில் தனியாருக்கு சொந்தமான உயர் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த கல்வி மையம் கல்லூரி நுழைவு தேர்வுகள் மற்றும் கல்லூரி தேர்வுகளுக்கு மாணவர்கள் தங்களை தயார் செய்து கொள்ள உதவுகிறது. இந்த நிலையில் நேற்று இந்த கல்வி மையத்தில் உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு பல்கலைக்கழக நுழைவுத்தேர்வுக்கான மாதிரி தேர்வு நடைபெற்றது. இதையொட்டி உள்ளூரை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் கல்வி மையத்துக்கு வந்து மாதிரி தேர்வை … Read more

பிரம்மோற்சவ விழா 5-வது நாள்: காலை மோகினி அலங்கார வீதிஉலா;இன்று இரவு கருடசேவை

திருமலை, திருப்பதி கோவில் பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான நேற்று காலை கற்பக விருட்ச வாகன வீதிஉலா, இரவு சர்வ பூபால வாகன வீதிஉலா நடந்தது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 10 மணிவரை கற்பக விருட்ச வாகன வீதி உலா நடந்தது. அப்போது லேசான தூறல் பெய்தது. கொட்டும் மழையில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் … Read more

இரானி கோப்பை: சவுராஷ்டிரா-ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இன்று மோதல்

ராஜ்கோட், 2019-20-ம் ஆண்டு ரஞ்சி சாம்பியன் சவுராஷ்டிரா-ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. 5 நாட்கள் நடைபெறும் இந்த போட்டி தினசரி காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெறும். இரு அணி வீரர்கள் விவரம்:- ரெஸ்ட் ஆப் இந்தியா:- மயங்க் அகர்வால், பிரியங் பாஞ்சல், அபிமன்யு ஈஸ்வரன், யாஷ் துல், சர்ப்ராஸ் கான், ஜெய்ஸ்வால், ஹனுமா விஹாரி (கேப்டன்), சவுரப் குமார், கே.எஸ்.பரத், … Read more

உக்ரைனுக்கு தொடர்ந்து ராணுவ உதவிகளை வழங்குவோம் – அமெரிக்கா அறிவிப்பு

நியூயார்க், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- ரஷிய அதிபர் புதின் மற்றும் அவரது பொறுப்பற்ற வார்த்தைகள் மற்றும் அச்சுறுத்தல்களால் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பயப்படப் போவதில்லை. புதினின் செயல்பாடுகள் அவர் போராடிக்கொண்டிருப்பதற்கான அறிகுறியாகும். அவரால் அண்டை நாட்டின் நிலப்பரப்பைக் கைப்பற்றி அதிலிருந்து தப்பிக்க முடியாது. உக்ரைனுக்கு நாங்கள் தொடர்ந்து ராணுவ தளவாடங்களை வழங்குவோம். “நேட்டோ பிராந்தியத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் பாதுகாக்க அமெரிக்கா எங்கள் நேட்டோ நட்பு நாடுகளுடன் இணைந்து முழுமையாக தயாராக … Read more

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மூன்றாவது வேட்பாளர் போட்டியிட வாய்ப்பு? ஜி23 குழு தலைவர்கள் நள்ளிரவில் திடீர் ஆலோசனை!

ஜெய்ப்பூர், காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா இல்லத்தில் நேற்றிரவு அரியானா முன்னாள் முதல்-மந்திரி பூபேந்தர் சிங் ஹூடா, மராட்டிய மாநில முன்னாள் முதல்-மந்திரி பிருத்விராஜ் சவான், முன்னாள் மத்திய மந்திரி மணிஷ் திவாரி உள்ளிட்ட ஜி23 குழுவை சேர்ந்த தலைவர்கள் திடீர் ஆலோசனை நடத்தினர். அதனை தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா நேற்றிரவு ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் தங்கியுள்ள ஜோத்பூர் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்து காங்கிரஸ் தலைவர் தேர்தல் குறித்து பேசினார். இந்நிலையில், … Read more