கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

மைசூரு: நீர்வரத்து அதிகரிப்பு கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து ஓய்ந்தது. தொடர்மழையால் அணைகள், ஆறு, குளம், குட்டைகளில் தண்ணீர் நிரம்பின. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மைசூரு, மண்டியா, பெங்களூரு, உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி பகுதியில் உள்ள கே.ஆர்.எஸ். அணைக்கும், மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி பகுதியில் உள்ள கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி … Read more

ஆசியக் கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா – பிரதமர் மோடி வாழ்த்து

துபாய், ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட்டில் துபாயில் நேற்று இரவு அரங்கேறிய 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் (ஏ பிரிவு) மோதின. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. முடிவில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 147 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 19.4 ஒவர்களில் 5 … Read more

சீனாவில் புதிதாக 1,444 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பெய்ஜிங், உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்த நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்றைய தினம் 1,494 பேருக்கு … Read more

வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த வாலிபரின் இறுதி சடங்கிற்கு ரூ.50 ஆயிரம் வழங்கிய எம்.எல்.ஏ.

மைசூரு: மைசூரு டவுன் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 36). இவர் கடந்த 26-ந்தேதி வெளியே சென்று இருந்தார். அப்போது அந்த பகுதியில் கனமழை பெய்து உள்ளது. கெக்கெரேகுந்தி கிராமத்தின் அருகில் உள்ள ஏரியில் உடைப்பு ஏற்பட்டு தரைப்பாலத்தில் தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இந்த சமயத்தில் மகேஷ் அந்த சாலையை கடக்க முயன்றபோது திடீரென தரைப்பாலம் உடைந்ததில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். போலீசார், தீயணைப்பு படையினர் சேர்ந்து அவரை நேற்றுமுன்தினம் பிணமாக மீட்டனர். இதுகுறித்து ஜெயப்புரா … Read more

ஆசிய கோப்பை : பந்துவீச்சில் ஜொலித்த இந்தியா…! 148 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்

துபாய், ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட்டில் துபாயில் இன்று அரங்கேறும் 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் (ஏ பிரிவு) மோதுகின்றன . ஐ.சி.சி. உலக கோப்பை மற்றும் ஆசிய கோப்பை போட்டிகளில் மட்டுமே தற்போது இவ்விரு அணிகளும் மோதுகின்றன. அதனால் முன்பை விட இப்போது எதிர்பார்ப்பு இன்னும் எகிறி விட்டது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.அதன்படி பாகிஸ்தான் … Read more

பாகிஸ்தான் வழியாக அமெரிக்க டிரோன்கள் ஆப்கானிஸ்தானில் நுழைகின்றன: தலிபான் அரசு குற்றச்சாட்டு!

காபுல், ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி அமெரிக்கா தனது படைகள் அனைத்தையும் முழுவதுமாக விலக்கிக் கொண்டது. இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் அமெரிக்காவின் திடீர் டிரோன் தாக்குதலில் பயங்கரவாதியான ஒசாமா பின்லேடனின் முக்கிய கூட்டாளியான ஜவாஹிரி கொல்லப்பட்டார். ஆனால், ஜவாஹிரி மரணத்தை ஆப்கான் அதிகாரிகள் ஒப்புக்கொள்ளவில்லை. ஆப்கானிஸ்தானில் அவர் இருப்பதையும் … Read more

வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத விவசாயி: சாதி பெயரை கூறி திட்டிய 2 பேர் கைது

கோலார் தங்கவயல்: சிக்பள்ளாப்பூர் தாலுகா ஷெட்டிகெரே கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாஸ். விவசாயியான இவர் தனியார் நிதி நிறுவனத்தில் மோட்டார் சைக்கிளுக்கான கடன் பெற்று இருந்தார். இந்த நிலையில் கடன் தொகை ரூ.11 ஆயிரத்திற்கான காசோலையை தனியார் நிதி நிறுவனத்திற்கு சீனிவாஸ் கொடுத்திருந்தார். ஆனால், சீனிவாசின் வங்கி சேமிப்பு கணக்கில் பணம் இல்லாததால் காசோலை வங்கி அதிகாரிகள் திருப்பி கொடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் அனில் மற்றும் ருத்ரப்பா ஆகிய இருவரும் செல்போனில் சீனிவாசை … Read more

"ஐபிஎல் ஏலத்தில் ஷஹீன் அப்ரிடி இருந்திருந்தால் ரூ.15 கோடிக்கு வாங்கப்பட்டு இருப்பார்"- அஸ்வின்

துபாய், ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த தொடரில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடி காயம் காரணமாக விலகியுள்ளார். இந்த நிலையில் அவர் குறித்து இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார். அப்ரிடி குறித்து அவர் கூறுகையில் “ஐபிஎல் ஏலத்தில் ஷஹீன் அப்ரிடி இருந்திருந்தால் எவ்வளவு சுவாரசியமாக இருந்திருக்கும் என்று நான் நிறைய யோசித்து … Read more

ஐ.எம்.எப்.- ன் ஒப்பந்தத்தை இம்ரான்கான் கட்சி நாசப்படுத்த முயற்சிக்கிறது – பாக். பிரதமர் குற்றச்சாட்டு

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் விதமாக அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐ.எம்.எப்.) அந்நாடு 170 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் நிதியுதவி கோரியுள்ளது. பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவது தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் நாளை ஆலோசனை நடத்துகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் கட்சி சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எப்.) ஒப்பந்தத்தை நாசப்படுத்த … Read more

நொய்டாவில் இன்று தரைமட்டமாகும் 'இரட்டை கோபுரங்கள்'

‘இரட்டை கோபுரம்’ என்றாலே நமக்கு கடந்த 2001-ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க்கில் அல்-கொய்தாவின் தாக்குதலில் தகர்ந்த உலக வர்த்தக மைய கட்டிடங்கள்தான் ஞாபகத்துக்கு வரும். ஆனால், தலைநகர் டெல்லி அருகேயும் இந்தியாவின் பெயர் ‘போன’ இரட்டை கோபுரங்கள் இருக்கின்றன. அவை ‘இருந்தன’ என்ற நிலையை இன்றே அடையப்போகின்றன. ஆம், அமெரிக்க இரட்டை கோபுரங்கள் பயங்கரவாதத்தால் தகர்ந்தன என்றால், இந்திய இரட்டை கோபுரங்கள் நீதித்துறை உத்தரவால் உடைந்து நொறுங்கப் போகின்றன. டெல்லி அருகே உத்தரபிரதேச மாநிலத்தின் கவுதம புத்தாநகர் … Read more