அமெரிக்காவில் 2-வது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.6% சரிவு

வாஷிங்டன், அமெரிக்காவின் வணிக அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2022-ம் ஆண்டின் ஜூன் மாதம் வரையிலான இரண்டாவது காலாண்டில் உள்நாட்டு உற்பத்தி 0.6 சதவீதம் என்ற அளவில் சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்த தனியார் பங்கு முதலீடு, பலவீனமான குடியிருப்பு அல்லாத நிலையான முதலீடு மற்றும் மத்திய அரசு மற்றும் உள்ளூர் மற்றும் மாநில அரசாங்கங்களின் குறைந்த செலவினம் ஆகியவையே இந்த சரிவுக்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது. அதே சமயம் அங்கு நுகர்வு செலவுகள் … Read more

ராஜகால்வாயை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை; குமாரசாமி வலியுறுத்தல்

பெங்களூரு: பெங்களூருவில் மழை பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்க ராஜகால்வாயை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கூறினார். குமாரசாமி பார்வையிட்டார் ராமநகர் மாவட்டம் சன்னப்பட்டணா தாலுகாவில் பெய்த மழை காரணமாக, அந்த தாலுகாவில் உள்ள பல்வேறு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. இந்த நிலையில், சன்னப்பட்டணாவில் மழை பாதித்த பகுதிகளை நேற்று காலையில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பார்வையிட்டார். மக்களிடம் அவர் குறைகளை கேட்டு அறிந்தார். பின்னர் குமாரசாமி நிருபர்களுக்கு … Read more

ஆசியக் கோப்பை கிரிக்கெட்: வங்காளதேச அணியை வீழ்த்தி சூப்பர்4 சுற்றுக்கு இலங்கை தகுதி

துபாய், 6 அணிகள் பங்கேற்றுள்ள 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு துபாயில் நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் இலங்கை-வங்காளதேச அணிகள் (பி பிரிவு) மல்லுகட்டின. ‘டாஸ்’ ஜெயித்த இலங்கை கேப்டன் ஷனகா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய வங்காளதேச அணியில் சபிர் ரகுமான் (5 ரன்) ஏமாற்றினாலும் மற்றொரு தொடக்க வீரர் மெஹிதி ஹசன் மிராஸ் சில … Read more

கடல் வளத்தை பாதுகாக்க நடவடிக்கை – உலக வர்த்தக அமைப்பு உறுதி

ஜெனீவா, சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகர் ஜெனீவாவில் உலக வர்த்தக அமைப்பின் 12-வது மந்திரிகள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கடலில் மீன்வளத்தை பெருக்கும் வகையில் மீன்பிடித்தலை கட்டுப்படுத்தி கடல் வளத்தை உறுதி செய்வது தொடர்பான உடன்பாடு எட்டப்பட்டது. நீடித்த வளர்ச்சி இலக்கிற்கு இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உடன்பாடாக கருதப்படுகிறது. மீன்பிடித்தல் சலுகை தொடர்பான பேச்சுவார்த்தைகள் நீண்ட காலத்திற்கு மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியம் குறித்து உலக வர்த்தக அமைப்பின் துணை பொதுச்செயலாளர் ஷியாங்சென் சாங் விளக்கினார். மீன்பிடித்தல் … Read more

'சினூக்' ஹெலிகாப்டர்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படும் – விமானப்படை தகவல்

புதுடெல்லி, இந்திய விமானப்படைக்கு சினூக் ஹெலிகாப்டர்கள் அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்பட்டு உள்ளன. பன்னோக்கு ரக ஹெலிகாப்டர்களான இவற்றின் மூலம் படைகள், தளவாடங்கள், வெடிபொருட்கள், எரிபொருள் போன்றவற்றை விரைவாக கொண்டு செல்ல முடியும். அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்பட்ட 15 ஹெலிகாப்டர்களும் விமானப்படையில் இணைக்கப்பட்டு உள்ளன. அமெரிக்கா சுமார் 400 சினூக் ஹெலிகாப்டர்களை இயக்கி வரும் நிலையில், அவற்றில் தற்போது அடிக்கடி கோளாறுகள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக எரிபொருள் கசிவு காரணமாக தீ விபத்துகள் அரங்கேறி வருகின்றன. இதனால் தங்களிடம் … Read more

20 ஓவர் கிரிக்கெட் ஆல்-ரவுண்டர் தரவரிசை – ஹர்திக் பாண்ட்யா முன்னேற்றம்

துபாய், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி), 20 ஓவர் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்டிங் தரவரிசையில் டாப்-10 இடங்களில் மாற்றமில்லை. பாகிஸ்தானின் பாபர் அசாம் முதலிடத்திலும், முகமது ரிஸ்வான் 2-வது இடத்திலும், இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் 3-வது இடத்திலும் தொடருகிறார்கள். இந்திய கேப்டன் ரோகித் சர்மா 17-வது இடத்திலும், விராட் கோலி 34-வது இடத்திலும் உள்ளனர். பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் ஹேசில்வுட்டும் (792 புள்ளி), 2-வது இடத்தில் … Read more

புரட்சியாளர் சேகுவேராவின் மகன் மரணம்

கராக்கஸ், கியூபாவில் பிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து புரட்சியில் ஈடுபட்டு, ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்டவர் சேகுவேரா. புரட்சியாளர், டாக்டர், அரசியல்வாதி இலக்கியவாதி எனப் பன்முகத்தன்மை கொண்ட சேகுவேராவுக்கு மொத்தம் 4 மகன்கள். அவர்களில் 3-வது மகன் கமிலோ சேகுவேரா. 60 வயதான கமிலோ சேகுவேரா கியூயாவில் தனது மகளுடன் வசித்து வந்தார். கியூபா தலைநகர் ஹவானாவில் உள்ள சேகுவேரா ஆய்வு மையத்தின் இயக்குனராக இவர் இருந்து வந்தார். அதில் சேகுவேராவின் கிளர்ச்சி தொடர்பான ஆவணங்கள் மற்றும் பிற பொருட்கள் … Read more

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – டெல்லி துணைநிலை கவர்னர் முடிவு

புதுடெல்லி, டெல்லி துணைநிலை கவர்னர் சக்சேனா, கடந்த 2016-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது கதர் கிராம தொழில் ஆணைய தலைவராக இருந்தார். அப்போது அவர் ரூ.1,400 கோடி கருப்பு பணத்தை மாற்றியதாக ஆம் ஆத்மி புகார் கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்றும், அவர் பதவி விலக வேண்டும் எனவும் சட்டசபையில் அந்த கட்சி எம்.எல்.ஏ.க்கள் நேற்று முன்தினம் போராட்டமும் நடத்தினர். ஆம் ஆத்மியின் இந்த குற்றச்சாட்டை சக்சேனா திட்டவட்டமாக மறுத்து உள்ளார். … Read more

நியூசிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் கிரான்ட்ஹோம் ஓய்வு

கிறைஸ்ட்சர்ச், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் காலின் டி கிரான்ட்ஹோம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், “அடிக்கடி காயத்தில் சிக்குவதால் முன்பு போல் என்னால் கடினமாக பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை. அணியிலும் இடம் பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. மேலும் எனக்கு என்று ஒரு குடும்பம் உள்ளது. கிரிக்கெட்டுக்கு பிறகு எனது எதிர்காலம் என்ன என்பதை பார்க்க வேண்டி இருக்கிறது. இது குறித்து சில வாரங்களாக தீவிரமாக … Read more

இலங்கைக்கு கடனுதவி வழங்க சர்வதேச நிதியம் ஒப்புதல்: இன்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு

கொழும்பு, வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வரும் இலங்கை சர்வதேச நிதியத்திடம் அவசர கடனுதவியாக 5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.39,733 கோடி) கோரியுள்ளது. இது தொடர்பாக சர்வதேச நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு வந்து அந்த நாட்டு அரசு அதிகரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. முதல் கட்ட பேச்சுவார்த்தை கடந்த மாதம் 24-ந்தேதி முடிவடைந்த நிலையில், சமீபத்தில் 2-ம் கட்டபேச்சுவார்த்தை தொடங்கியது. இந்த பேச்சுவார்த்தை நேற்றுடன் முடிவடைவதாக இருந்தது. ஆனால் பேச்சுவார்த்தை மேலும் … Read more