இங்கிலாந்தில் மாணவர்களுடன் தகாத உறவில் ஈடுபட்ட ஆசிரியைக்கு வாழ்நாள் தடை

லண்டன், இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு பள்ளியில் கணித ஆசிரியையாக பணிபுரிந்தவர் ரெபேக்கா ஜாய்ன்ஸ் (வயது 31). இவர் 2022-ம் ஆண்டு தனது வகுப்பில் பயிலும் 2 மாணவர்களுடன் தகாத உறவில் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே பள்ளி நிர்வாகம் உடனடியாக அவரை பணியிடை நீக்கம் செய்தது. மேலும் சிறுவர்களின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் ரெபேக்காவை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது அந்த 2 பேரையும் … Read more

ஆதார் கார்டு பிளாஸ்டிக் அட்டைக்கான கட்டணம் திடீர் அதிகரிப்பு: எவ்வளவு தெரியுமா?

புதுடெல்லி, ஆதார் கார்டு என்பது தற்போது தவிர்க்க முடியாத அடையாள ஆவணமாக உள்ளது. பள்ளி அட்மிஷன் முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் பிரதானமாக ஆதார் எண்ணே கேட்கப்படுகிறது. 12 இலக்கங்கள் கொண்ட இந்த ஆதார் அட்டையை செல்லும் இடமெல்லாம் எடுத்து செல்ல ஏதுவாக, பிவிசி (PVC) எனப்படும் பிளாஸ்டிக் ஆதார் அட்டையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) இணையதளத்தில் விண்ணப்பித்து இந்த பிவிசி ஆதார் அட்டையை வாங்கிக் கொள்ள முடியும். இதற்கான … Read more

இன்னும் 94 ரன்கள்…சச்சின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் விராட் கோலி

சென்னை, இந்திய அணியின் நட்சத்திர பேட்டர் விராட் கோலி. இவர் 2008-ம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானதிலிருந்து, சுமார் 17 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். சமீபத்தில் டி20 மற்றும் டெஸ்ட் வடிவ கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர் , ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடி வருகிறார். விரைவில் நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த தொடரில் விளையாட இருக்கும் … Read more

ஈரானில் உயிரிழப்பு 36ஆக அதிகரிப்பு

டெஹ்ரான், மேற்காசிய நாடான ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அங்கு அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் கரன்சியான ரியாலின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்தது. பணவீக்கத்தால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதையடுத்து ஈரானில் அரசுக்கு எதிராக வியாபாரிகள், பொதுமக்கள், மாணவர்கள் போராட்டங்களில் குதித்துள்ளனர். கடந்த டிசம்பர் 28-ம் தேதி தொடங்கிய போராட்டம், 22 மாகாணங்களில் 100க்கும் மேற்பட்ட இடங்களுக்கு பரவி உள்ளது. ஆங்காங்கே அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்துள்ளன. பல … Read more

வெனிசுலா அதிபரை போல மோடியையும் டிரம்ப் நாடு கடத்துவாரா? காங். மூத்த தலைவர் சர்ச்சை பேச்சு

மும்பை, வெனிசுலா அதிபரை கடத்திச் சென்றதைப் போல நமது பிரதமரையும் டிரம்ப் கடத்தி செல்வாரா என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பிருத்வி ராஜ் சாவுகான் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநில முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய மந்திரியுமான பிருத்வி ராஜ் சவுகான் இது தொடர்பாக கூறியதாவது: வெனிசுலாவில் நடந்ததைப் போன்ற ஒன்று இந்தியாவில் நடக்குமா என்பதுதான் இப்போது எழும் கேள்வி. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், நமது பிரதமரை கடத்திச் செல்வாரா? என்றார். பிருத்வி ராஜ் … Read more

முதல் டி20: இலங்கை – பாகிஸ்தான் நாளை மோதல்

கொழும்பு , 20 அணிகள் இடையிலான 10-வது ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தயாராகும் வகையில் பாகிஸ்தான் அணி இலங்கைக்கு சென்று 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது. நாளை இரவு 7 மணிக்கு இந்த … Read more

வெனிசுலா அதிபர் மாளிகை அருகே டிரோன்கள் பறந்ததால் பரபரப்பு

கராகஸ் வெனிசுலாவின் தலைநகர் கராகஸ் நகரில் கடந்த 3-ந்தேதி அதிகாலை 2 மணியளவில் சுமார் 7 இடங்களில் அமெரிக்க ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து வெனிசுலாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து நிக்கோலஸ் மதுரோவும், அவருடைய மனைவி சிலியா புளோரசும் அமெரிக்க ராணுவ வீரர்களால் கைது செய்யப்பட்டு வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டனர். இதனிடையே, வெனிசுலா துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்சை புதிய இடைக்கால அதிபராக வெனிசுலா சுப்ரீம் … Read more

டெல்லி பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக மாணவர்கள் கோஷம்: போலீசில் புகார்

புதுடெல்லி, கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி 5-ந் தேதி, டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) ஒரு கும்பல் புகுந்து வன்முறையில் ஈடுபட்டது. அதன் 6-வது நினைவு தினத்தையொட்டி, பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, டெல்லி கலவர சதி வழக்கில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க முன்னாள் தலைவர் உமர் காலித், ஷார்ஜீல் இமாம் ஆகியோருக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் மறுத்த தகவல் கிடைத்தது. இதையடுத்து, பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி … Read more

மலேசிய ஓபன் பேட்மிண்டன்: லக்சயா சென் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

கோலாலம்பூர், மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென் , சிங்கப்பூரின் ஜேசன் டே உடன் மோதினார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய லக்சயா சென் 21-16, 15-21, 21-14 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 1 More update தினத்தந்தி Related Tags : பேட்மிண்டன்  Badminton  Lakshaya Sen 

இங்கிலாந்து விமான தளங்களில் வந்திறங்கிய அமெரிக்க போர் விமானங்கள்; ஈரானை தாக்க முடிவா?

லண்டன், ஈரான் நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை ஆகியவற்றால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைந்து உள்ளது. மாகாணங்கள், நகரங்கள் என பல்வேறு பகுதிகளிலும் மக்கள் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உள்நாட்டில் ஏற்பட்டு உள்ள போராட்டங்களை, இஸ்ரேல் ஆயுதம்போல் பயன்படுத்தி கொண்டு, ஈரான் அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்த கூடும் என ஈரான் அஞ்சுகிறது. போராட்டங்கள் தொடர்ந்து ஸ்திரத்தன்மையற்ற நிலை நீடிக்கிறது என்றால், நிலைமையை பயன்படுத்தி … Read more