ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகள்: யாரும் செய்யாத வரலாற்று சாதனையை படைத்த இந்தோனேசியா வீரர்

புதுடெல்லி, சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்தோனேசியா வீரர் கெடே பிரியந்தனா வரலாற்று சாதனை படைத்துள்ளார். இந்தோனேசியா கம்போடியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி பாலி நகரில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தோனேசிய அணி 168 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 169 ரன்கள் இலக்குடன் விளையாடிய கம்போடியா அணி 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 106 … Read more

நெதர்லாந்து: கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அணுவகுப்பு காண கூடியிருந்தவர்கள் மீது மோதிய கார் ; 9 பேர் காயம்

ஆம்ஸ்டர்டாம், கிறிஸ்த மதத்தினரின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ளது. கிறிஸ்துமசை கொண்டாட உலகம் முழுவதும் கிறிஸ்தவ மதத்தினர் தயாராகி வருகின்றனர். குறிப்பாக, மேற்கத்திய நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. இந்நிலையில், நெதர்லாந்து நாட்டின் ஹெல்டர்லாந்து மாகாணம் நன்ஸ்பெட் பகுதியில் உள்ள சாலையில் நேற்று இரவு கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அணிவகுப்பு நடைபெறவிருந்தது. இந்த அணிவகுப்பை காண ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். அப்போது, சாலையில் வேகமாக வந்த கார் அங்கு கூடியிருந்த மக்கள் மீது மோதியது. … Read more

‘காங்கிரஸ் ஆட்சியில் சட்டவிரோத ஊடுருவல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது’ – கிரண் ரிஜிஜு

ஜெய்ப்பூர், காங்கிரஸ் ஆட்சியில் சட்டவிரோத ஊடுருவல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது என மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;- “பா.ஜ.க. அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, வடகிழக்கு மாநிலங்களில் சட்டவிரோத ஊடுருவல் தடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சட்டவிரோதமாக ஊடுருவி இந்தியாவில் வசித்து வருபவர்களை வெளியேற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. நாட்டில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தவரை, வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோத ஊடுருவல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. … Read more

மகளிர் பிரீமியர் லீக்: டெல்லி அணியின் புதிய கேப்டனாகும் இந்திய முன்னணி வீராங்கனை..?

புதுடெல்லி, 4-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) டி20 கிரிக்கெட் போட்டி நவிமும்பை மற்றும் வதோதராவில் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ந் தேதி முதல் பிப்ரவரி 5-ந் தேதி வரை நடக்கிறது. நவிமும்பையில் நடக்கும் இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன்ஸ் மும்பை இந்தியன்ஸ், முன்னாள் சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய முன்னணி வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் நியமிக்கப்பட உள்ளதாக … Read more

எப்ஸ்டீன் ஆவணங்கள்: நீக்கப்பட்ட டிரம்ப் புகைப்படங்கள் மீண்டும் சேர்ப்பு

வாஷிங்டன், அமெரிக்காவை சேர்ந்த பிரபல நிதியாளர் ஜெப்ரி எப்ஸ்டீன் பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீதான வழக்குகள் நிலுவையில் இருந்தபோது சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே அவர் மீதான விசாரணை ஆவணங்களில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட பிரபலங்கள் பெயர்கள் இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து எப்ஸ்டீன் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும்(Epstein Files) பொதுவெளியில் வெளியிட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதன்படி, ஜெப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புடைய 68 … Read more

‘சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் சகோதரர்கள் போல் பணியாற்றி வருகின்றனர்’ – சச்சின் பைலட்

பெங்களூரு, கர்நாடகத்தில் கடந்த 2023-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி எழுந்த நிலையில் இறுதியில் சித்தராமையா முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்டார். முதல்-மந்திரி பதவியை 2 பேரும் ஆட்சிக்காலத்தில் பாதியாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அப்போது ரகசிய ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி சித்தராமையா ஆட்சி அதிகாரத்தில் 2.5 ஆண்டுகள் நிறைவு செய்துவிட்டதால் முதல்-மந்திரி பதவியை தனக்கு வழங்க வேண்டும் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் திடீரென போர்க்கொடி … Read more

அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் இந்திய வீரர் ஓய்வு அறிவிப்பு

மும்பை, இந்திய ஆல் ரவுண்டரான கிருஷ்ணப்பா கவுதம் (37 வயது) அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவரான கிருஷ்ணப்பா கவுதம் இந்திய அணிக்காக ஒரே ஒரு சர்வதேச போட்டியில் மட்டுமே ஆடியுள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக கொழும்புவில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக களமிறங்கி ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளார். சர்வதேச அளவில் பெரிய அளவில் ஜொலிக்காவிட்டாலும் உள்ளூர் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். கவுதம் 59 முதல் … Read more

சிறையில் உள்ள மலேசிய முன்னாள் பிரதமரின் வீட்டுக்காவல் கோரிக்கையை நிராகரித்த கோர்ட்டு

கோலாலம்பூர், மலேசியாவில் கடந்த 2009ம் ஆண்டு முதல் 2018 வரை தொடர்ந்து 9 ஆண்டுகள் பிரதமராக இருந்தவர் நஜீப் ரசாக். இவர் பதவியில் இருந்தபோது மலேசிய மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 75 கோடி (இந்திய மதிப்பில்) ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் கோர்ட்டில் விசாரணை நடைபெற்றது. 3 ஆண்டுகள் நடந்த இந்த விசாரணையில் நஜீப் ரசாக் குற்றவாளி என 2022ம் ஆண்டு கோர்ட்டு தீர்ப்பளித்தது. … Read more

கேரளா: பத்தனம்திட்டாவில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த புலி கூண்டில் சிக்கியது

திருவனந்தபுரம், கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே வடசேரி கும்பலா பகுதியில் புலி ஒன்று குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வீடுகளில் இருந்த செல்லப் பிராணிகளை வேட்டையாடியது. இதனால் பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டது. இந்த நிலையில், புலியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். இதன்படி, அதன் வழித்தடத்தைக் குறி வைத்து வனத்துறையினர் வைத்த கூண்டில் புலி சிக்கியது. இதையடுத்து அந்த புலியை அடர்ந்த வனப்பகுதியில் விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். 1 More update தினத்தந்தி … Read more

டி20 உலகக் கோப்பை 2026: இந்த இந்திய வீரர்தான் அதிக விக்கெட் வீழ்த்துவார் – இர்பான் பதான்

மும்பை, 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் அமெரிக்காவுடன் பிப்.7-ந் தேதி மும்பையில் மோதுகிறது. அடுத்த ஆட்டத்தில் நமீபியாவை பிப்.12-ந் தேதி டெல்லியில் சந்திக்கிறது. 3-வது ஆட்டத்தில் பரம … Read more