வருவாய்த் துறையினர் போராட்டத்தை திமுக அரசு தூண்டுகிறது: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

திருநெல்வேலி: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளுக்கு எதிராக வருவாய்த் துறையினர் போராட்டம் நடத்த திமுக அரசு தூண்டுகிறது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார். திருநெல்வேலியில் வ.உ.சி-யின் நினைவு தினத்தை ஒட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வ.உ.சி-க்கு அஞ்சலி செலுத்துவதில் பெருமைப் படுகிறோம். சுதந்திரப் போராட்ட வீரர்களை கவுரவப்படுத்துவதில் முதல் ஆளாக இருப்பவர் பிரதமர் மோடி. திருநெல்வேலி மக்களுக்கு நான் என்றும் … Read more

‘மகளிர்க்கு ரூ.10,000 கொடுக்காமல் இருந்திருந்தால்…’ – ஜேடியு வெற்றியை விமர்சித்த பிகே

பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, பெண்களுக்கு ரூ.10,000 கொடுக்காமல் இருந்திருந்தால் ஜேடியு 25 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றிருக்காது என்று ஜன சுராஜ் கட்சித் தலைவரும் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை அடுத்து பிரசாந்த் கிஷோர், பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். தேர்தலுக்கு முன்னதாக, ஜேடியு 25 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது என பிரசாந்த கிஷோர் கூறியது … Read more

‘பாஜகவுக்குச் சாமரம் வீசவே எஸ்ஐஆரை அதிமுக ஆதரித்தது’ – என்.ஆர்.இளங்கோ எம்.பி

சென்னை: பாஜகவுக்கு சாமரம் வீசுவதற்காகவே எஸ் ஐ ஆரை அதிமுக ஆதரித்தது என்றும் திமுகவினர் மீது அதிமுக விமர்சனம் வைப்பது இயலாமையின் வெளிப்பாடு என்றும் திமுக சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, “ அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்த குற்றச்சாட்டான, திமுகவின் பிஎல்ஏ2-க்கள் மட்டும்தான் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு மட்டும்தான் கணக்கீட்டுப் படிவம் கொடுக்கப்படுகிறது என்பது உண்மைக்கு புறம்பான செய்தி. பிஎல்ஓ-க்கள் … Read more

‘தற்கொலை தாக்குதல் எனப்படுவது…’ – டெல்லி குண்டு வெடிப்பு குற்றவாளி உமர் நபியின் பழைய வீடியோ வெளியானது!

புதுடெல்லி: “தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் குறித்து பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. இது ஒரு வகையான உயிர்த் தியாக நடவடிக்கை.” என டெல்லி கார் குண்டு வெடிப்பு நடத்திய மருத்துவர் உமர் நபி பேசியுள்ள வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. கடந்த 10-ம் தேதி டெல்லி – செங்கோட்டை பகுதியில் உமர் நபி இந்த தாக்குதலை நடத்தினார். அதற்கு முன்பாக இந்த வீடியோவை அவர் பதிவு செய்திருக்கலாம் எனத் தகவல். இந்த வீடியோவை ஆங்கில ஊடக நிறுவனம் ஒன்று … Read more

எஸ்ஐஆர் பணிகள் புறக்கணிப்பு: தேர்தல் ஆணையத்துக்கு விடுக்கப்படும் மறைமுக மிரட்டல் – பாஜக சாடல்

சென்னை: தேர்தல் கமிஷனின் வாக்காளர் சிறப்பு தீவிர சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு எதிராக அரசு ஊழியர்களை மறைமுகமாக செயல்பட தமிழக அரசு நிர்வாகம் ஊக்குவிக்கக் கூடாது என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் கடந்த 4-ம் தேதி முதல் எஸ்.ஐ.ஆர். எனப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் வாக்காளர் சிறப்பு … Read more

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை ஒத்திவைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கேரளா மனு

புதுடெல்லி: உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த இருப்பதால் தங்கள் மாநிலத்தில் சிறப்பு தீவிர திருத்தத்தை ஒத்திவைக்கக் கோரி கேரள அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது. இது தொடர்பாக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், “அரசியல் சாசன பிரிவு 243-E, 243-U ஆகியவற்றின் படியும், கேரள பஞ்சாயத்து சட்டம் பிரிவு 94ன் படியும், கேரள நகராட்சி சட்டப்படியும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை ஐந்தாண்டுகளுக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்பது கட்டாயம். இந்த … Read more

அண்ணா நகரில் ரூ.97 கோடியில் ‘ரெரா’ அலுவலக கட்டிடம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: கட்​டிடம் மற்​றும் மனை விற்​பனை ஒழுங்​கு​முறை குழு​மம் (ரெ​ரா) மற்​றும் மேல்​முறை​யீட்டு தீர்ப்​பா​யத்​துக்கு, அண்ணா நகரில் ரூ.97 கோடியில் கட்​டப்​பட்​டுள்ள புதிய அலு​வல​கக் கட்டிடத்தை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று திறந்து வைத்​தார். இதுகுறித்து, தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தமிழகத்​தில் கட்​டிடம் மற்​றும் மனை விற்​பனை துறையை ஒழுங்​குபடுத்​த​வும், மேம்​படுத்​த​வும், மனை, அடுக்​கு​மாடிக் குடி​யிருப்​பு​களுக்​கான விற்​பனையை வெளிப்​படை​யான முறை​யில் உறு​தி​ செய்​வதற்​கும், கட்​டிட மனை விற்​பனைத் துறை​யில் நுகர்​வோர் நலனைப் பாது​காப்​ப​தற்​கும், அவர்​களின் குறை​களுக்கு விரை​வாக … Read more

‘இது குடும்பப் பிரச்சினை; நான் பார்த்துக் கொள்கிறேன்’ – தேஜஸ்வி – ரோகிணி மோதல் குறித்து லாலு கருத்து!

பாட்னா: தேஜஸ்வி யாதவ் – ரோகிணி ஆச்சார்யா இடையேயான பிரச்சினை என்பது குடும்பத்தின் உள் விவகாரம் என்றும் அதை தான் பார்த்துக் கொள்வதாகவும் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களை வென்ற நிலையில், மகா கூட்டணி 35 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது, அதில் ஆர்ஜேடி கட்சி 25 இடங்களில் வென்றது. எந்த சட்டப்பேரவையிலும் எதிர்க்கட்சியாக தேர்வாக மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில் 10 சதவீத இடங்களில் வென்றிருக்க … Read more

முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவர் வெள்ளையன் காலமானார்

சென்னை: முருகப்பா குழு​ம முன்​னாள் தலை​வர் அருணாசலம் வெள்​ளை​யன் நேற்று கால​மா​னார். அவருக்கு வயது 72. இதுகுறித்து முரு​கப்பா குழு​மம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “முரு​கப்பா குழு​மத்​தின் முன்​னாள் தலை​வர் வெள்​ளை​யன் நாள்​பட்ட உடல்​நலக்குறைவு காரண​மாக சிகிச்சை பெற்​று​வந்​தார். இந்த நிலை​யில் நேற்று அவர் கால​மா​னார்” என்று தெரிவிக்கப்பட்டுள்​ளது. திவான் பகதூர் முரு​கப்பா செட்​டி​யார் நிறு​விய முரு​கப்பா குழு​மம் 125 ஆண்டு பாரம்​பரி​யம் கொண்​டது. முரு​கப்பா குடும்​பத்​தின் நான்​காவது தலை​முறையைச் சேர்ந்​தவர் வெள்​ளை​யன். இவருக்கு மனைவி லலிதா மற்​றும் … Read more

மனைவியை பணயமாக வைத்து சூதாடிய கணவன் மீது வழக்கு

லக்னோ: உத்தர பிரதேசத்தில் மனைவியை பணயமாக வைத்து சூதாடிய கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறும்போது, ‘‘மீரட்டில் கிவாய் கிராமத்தைச் சேர்ந்த டானிஷ் என்பவரை கடந்தாண்டு அக்டோபர் 24-ல் திருமணம் செய்து கொண்டேன். அப்போதே குடிபோதையில் என்னை வைத்து சூதாட ஆரம்பித்துவிட்டார். எதிர்த்து கேட்டதற்கு அவரும், என்னுடைய மாமியாரும் சேர்ந்து அடித்து உதைத்தனர். என் கணவர் சூதாட்டத்தில் தோற்றதால் எட்டு பேர் என்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி உள்ளனர். பலமுறை அபார்ஷன் … Read more