பிஹாரில் விறுவிறுப்பாக தொடங்கிய முதல் கட்ட தேர்தல்: 9 மணி வரை 13.13% வாக்குகள் பதிவு

பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி பதிவான வாக்குப் பதிவு 13.13% ஆக இருந்தது. பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது, இந்த வாக்குப் பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும். காலை 9 மணி நிலவரப்படி பதிவான வாக்குப் பதிவு 13.13% ஆக இருந்தது. … Read more

வீர, தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் பெற டிச.15 வரை விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு 

சென்னை: தமிழக அரசு நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: வீர, தீர செயல்​களுக்​கான ‘அண்ணா பதக்​கம்’ ஒவ்​வொரு ஆண்​டும் குடியரசு தின விழா​வின்​போது முதல்​வ​ரால் வழங்​கப்​படு​கிறது. பொது​மக்​களில் மூவருக்​கும், அரசு ஊழியர்​களில் மூவருக்​கும் (சீருடைப் பணி​யாளர்​கள் உட்​பட) இந்த பதக்​கங்​கள் வழங்​கப்​படும். விண்​ணப்​ப​தா​ரர் தமிழகத்தை சேர்ந்​தவர்​களாக இருக்க வேண்​டியது அவசி​யம். வயது வரம்பு கிடை​யாது. அந்​தவகை​யில், 2026-ம் ஆண்​டுக்​கான ‘வீர தீர செயல்​களுக்​கான அண்ணா பதக்​கம்’ விருதுக்கு பரிந்​துரைகள் வரவேற்​கப்​படு​கின்​றன. இதற்​கான விண்​ணப்​பம் மற்​றும் பரிந்​துரைகள் https://awards.tn.gov.in என்ற … Read more

பிஹார் முதல் கட்ட வாக்குப் பதிவும், தேர்தல் கள நிலவரமும் – ஒரு பார்வை

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் இன்று முதல்கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இதன் 121 தொகுதிகளில் தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியிடம் (என்டிஏ) 59, மெகா கூட்டணியிடம் 61 எம்எல்ஏக்கள் உள்ளனர். பிஹார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6, 11 தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதன்படி, 121 தொகுதிகளில் இன்று முதல்கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. 18 மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த தொகுதிகளில் மொத்தம் 122 பெண்கள் உள்ளிட்ட 1,314 … Read more

“தமிழக அரசின் முடிவே அவலங்களுக்கு காரணம்” – தூய்மைப் பணி பிரச்சினையில் சு.வெங்கடேசன் எம்.பி சாடல்

மதுரை: ”தூய்மைப் பணியை தனியாருக்கு கொடுக்கக் கூடிய தமிழக அரசின் முடிவே அனைத்து அவலங்களுக்கும் அடிப்படை காரணம்” என்று சு.வெங்கடேசன் எம்.பி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், “தூய்மைப் பணியை தனியாருக்கு கொடுக்க கூடிய தமிழக அரசின் முடிவு, அனைத்து அவலங்களுக்கும் அடிப்படை காரணம். தனியாருக்கு கொடுக்கும் முடிவை கைவிட வேண்டும். நகரங்களின் தூய்மையையும், வசிக்கும் மக்களின் சுகாதாரத்தையும் பாழாக்கும். கூடுதலான பிரச்சினை என்றால், மதுரை மாநகராட்சியில் தூய்மைப் பணி … Read more

பிஹார் தேர்தலில் 64% வாக்குப்பதிவு: முதல்கட்டமாக 121 தொகுதிகளில் அமைதியாக நடைபெற்றது

பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் முதல்கட்டமாக 121 தொகுதிகளில் நேற்று அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 64.46 சதவீத வாக்குகள் பதிவாகின. பிஹாரில் 243 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில் முதல்கட்டமாக 121 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 122 பெண்கள் உட்பட 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 48, ஐக்கிய ஜனதா தளம் 57, எல்ஜேபி (ஆர்)13, ஆர்எல்எம் 2, எச்ஏஎம் 1 வேட்பாளர்கள் … Read more

திமுக மீது பாய்ச்சல்… பாஜக பற்றி கப்சிப்! – விஜய் சொல்ல வருவது என்ன?

கரூர் கூட்ட நெரிசல் துயரத்துக்குப் பின்னர் ஒரு வழியாக மீண்டும் வெளியில் வந்துவிட்டார் விஜய். அத்துடன், தவெக சிறப்பு பொதுக்குழுவில் திமுக மீது கடும் தாக்குதலை தொடுத்த விஜய், பாஜக பற்றி மூச்சு கூட விடாதது பேசுபொருளாகி இருக்கிறது. கரூரில் செப்டம்பர் 27-ல் நடந்த கூட்ட நெரிசல் உயிரிழப்புகளுக்குப் பின்னர், ஒரு மாதத்துக்கும் மேலாக ‘சைலண்ட்’ மோடில் இருந்த தவெக இப்போது ‘வைப்ரேஷன் மோடு’க்கு மாறியிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் உறவினர்களை … Read more

‘பிஹாரில் தே.ஜ.கூட்டணிக்கு முன்னெப்போதும் இல்லாத பெரும்பான்மை கிடைக்கும்' – பிரதமர் மோடி

புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், ‘வாக்காளர்களிடையே காணப்படும் உற்சாகம், தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு முன்னெப்போதும் இல்லாத பெரும்பான்மை கிடைக்கும் என்பதைக் குறிக்கிறது’ என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். பிஹார் சட்டப்பேரவை தேர்தலின் இரண்டாம் கட்டத்திற்கான தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி இன்று இரண்டு பேரணிகளில் உரையாற்ற உள்ளார். அராரியா மாவட்டத்தின் ஃபோர்ப்ஸ்கஞ்சில் நடைபெறும் பொதுக் கூட்டம் மற்றும் பகல்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் … Read more

அஜித்குமார் காவல் மரண வழக்கில் குற்றப்பத்திரிகை தாமதம் ஏன்? – சிபிஐ விளக்கம்

மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவல் மரண வழக்கில் நீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாதது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் சிபிஐ விளக்கம் அளித்தது. சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் நகை திருட்டு வழக்கு விசாரணையின்போது உயிரிழந்தார். அஜித் குமாரை கம்பால் தாக்கி கொலை செய்ததாக தனிப்படை காவலர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அஜித்குமார் மரணம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் அதிமுக வழக்கறிஞர் மாரீஸ்குமார் உட்பட பலர் பொதுநல மனு தாக்கல் … Read more

பிஹார் முதற்கட்ட தேர்தல்: மாலை 5 மணி வரை 60.13% வாக்குகள் பதிவு

பாட்னா: பிஹார் சட்டப்பேரவைக்கான முதற்கட்டத் தேர்தலில் மாலை 5 மணி வரை 60.13% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு 18 மாவட்டங்களில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 5 மணி வரை 60.13% வாக்குகள் பதிவாகி உள்ளன. தேர்தல் நடைபெற்ற 18 மாவட்டங்களில் அதிகபட்சமாக பெகுசராய் மாவட்டத்தில் 67.32% வாக்குகள் பதிவாகி உள்ளன. தலைநகர் பாட்னாவில் 55.02% வாக்குகள் பதிவாகி உள்ளன. கோபால்கஞ்ச் மாவட்டத்தில் … Read more

“தவெக தலைவர் விஜய் பலவீனமானவர்” – பேரவைத் தலைவர் அப்பாவு கருத்து

நெல்லை: “தவெக தலைவர் விஜய் பலவீனமானவர். கரூர் விவகாரத்தில் தமிழக முதல்வர் பெருந்தன்மையாக நடந்து கொண்டார்” என்று தமிழக சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு கூறினார். திருநெல்வேலி உடையார்பட்டி தாமிரபரணி ஆற்றங்கரையில், சமூக நல்லிணக்க பேரவை, தமிழ்நாடு அய்க்கஃப், துறவியர் பேரவை மற்றும் தோழமை கல்வி நிறுவனங்கள் இணைந்து மாநில அளவிலான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி, மரக்கன்று மற்றும் பனை விதை நடும் விழாவை நடத்தின. இதில் தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு, திருநெல்வேலி மாநகராட்சி … Read more