‘நியாயமாக, பாரபட்சமின்றி செயல்படுங்கள்’ – சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை மேற்கோள் காட்டி சிபிஆருக்கு காங். வாழ்த்து

புதுடெல்லி: முன்னாள் குடியரசு தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனைப் போல நியாயமாக, பாரபட்சமின்றி சி.பி. ராதாகிருஷ்ணன் செயல்பட வேண்டும் என காங்கிரஸ் வாழ்த்து தெரிவித்துள்ளது. குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதை அடுத்து, அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்தியாவின் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு … Read more

இந்தியாவின் நியாயமற்ற வர்த்தகம் அமெரிக்காவுக்கு தேவையில்லை: பீட்டர் நவரோ

வாஷிங்டன்: இந்தியாவின் நியாயமற்ற வர்த்தகம் அமெரிக்காவுக்கு தேவையில்லை என்று அமெரிக்காவின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா 50% வரி விதித்துள்ளது. பரஸ்பர வரி விதிப்பின் அடிப்படையில் 25% வரி விதிப்பும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அபராதாமாக 25% வரி விதிப்பும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியப் பொருட்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது. அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு நியாயமற்றது, காரணமற்றது என குறிப்பிட்டுள்ள இந்தியா, ஏற்றுமதிக்கான … Read more

நெல் கொள்முதல் நிலைய ஊழல்களை தடுக்காத திமுகவை விவசாயிகள் மன்னிக்க மாட்டார்கள் – அன்புமணி

சென்னை: வறுமையில் வாடும் விவசாயிகளிடமிருந்து கட்டாயக் கையூட்டுப் பெறுவதை விட பெரும் பாவமும், குற்றமும் இருக்க முடியாது. இதைத் தடுக்காமல் ஊக்குவித்து வரும் திராவிட மாடல் அரசை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குறுவை பருவ நெல் கொள்முதல் வழக்கத்தை விட ஒரு மாதம் முன்கூட்டியே தொடங்கியுள்ள நிலையில், நெல் கொள்முதல் நிலையங்களில் தலைவிரித்தாடும் ஊழல்களால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப் … Read more

சிபிஆருக்கு ‘மனசாட்சியுடன்’ வாக்களித்த இண்டியா கூட்டணி எம்பிக்களுக்கு சிறப்பு நன்றி: கிரண் ரிஜிஜு

புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் என்டிஏ கூட்டணி சார்பில் போட்டியிட்ட சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ‘மனசாட்சியுடன்’ வாக்களித்த இண்டியா கூட்டணி எம்பிக்களுக்கு சிறப்பு நன்றி என்று பாஜக மூத்த தலைவரும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சருமான கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் 767 வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில், 452 வாக்குகள் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கும், 300 வாக்குகள் சுதர்சன் ரெட்டிக்கும் கிடைத்தன. மீதமுள்ள 15 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. நேற்று … Read more

30 ஆண்டு கால ஊழலை விசாரிக்கவும்; நேபாள அரசமைப்பை திருத்தவும் – ஜென் z போராட்டக்காரர்கள் நிபந்தனை!

காத்மாண்டு: நே​பாளத்​தில் இளம் தலை​முறை​யினரின் ஊழல் எதிர்ப்பு போராட்​டம் தீவிரமடைந்ததன் ​காரணமாக அந்நாட்டுப் பிரதமர் சர்மா ஒலி பதவியை ராஜி​னாமா செய்​துள்ளார். இந்நிலையில், நேபாள அதிபர் ராம் சந்திர பவுடேல், ஜென் z போராட்டக்காரர்களை சந்தித்து ஆலோசிக்கவுள்ளார். இன்று இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து போராட்டக்காரர்களிடம் அவர் வலியுறுத்துவார் என்று தெரிகிறது. இந்த நிலையில், நேபாளத்தில் அமைதி திரும்ப போராட்டக்காரர்கள் சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளனர். … Read more

சமூக நீதிக்கு அடையாளமாக திமுக உள்ளது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

காஞ்சிபுரம்: ‘சமூக நீதிக்கு அடையாளமாக திமுக உள்ளது’ என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று காஞ்சிபுரம் வந்தார். முதலில் காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், வாக்குச் சாவடி முகவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் அவர் ஆலோசனை நடத்தினார். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெறுவதற்கான பல்வேறு வழிமுறைகளை கூறியதுடன், கட்சி … Read more

ஓட்டல் சமையல் தொழிலாளிக்கு ரூ.46 கோடி வருமான வரி நோட்டீஸ்

போபால்: மத்​திய பிரதேச மாநிலம் பிந்த் மாவட்ட நெடுஞ்​சாலை​யில் உள்ள ஒரு உணவகத்​தில் சமையல​ராக பணிபுரிந்து வருபவர் ரவிந்​தர் சிங் சவு​கான் (30). இவருக்கு கடந்த ஏப்​ரல் 9-ம் தேதி வரு​மான வரித் துறையி​லிருந்து ஒரு நோட்​டீஸ் வந்​துள்​ளது. அவருக்கோ அவரது மனை​விக்கோ ஆங்​கிலம் தெரி​யாது என்​ப​தால், அந்த நோட்​டீஸை புறக்​கணித்​து​விட்​டனர். பின்​னர் கடந்த ஜூலை 25-ம் தேதி 2-வது முறை​யாக நோட்​டீஸ் வந்​துள்​ளது. இதையடுத்​து, ஆங்​கிலம் தெரிந்​தவர்​களின் உதவியை நாடி உள்​ளார். அப்​போது, வரு​மான வரித் … Read more

இந்தியர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த செனட் உறுப்பினர் மன்னிப்பு கேட்க வேண்டும்: ஆஸ்திரேலிய பிரதமர்

சிட்னி: ஆஸ்​திரேலி​யா​வில் குடியேறும் இந்​தி​யர்​கள் எண்​ணிக்கை சமீப கால​மாக அதி​கரித்து வரு​கிறது. அங்கு குடியேறிய வெளி​நாட்​ட​வர்​களில் இங்​கிலாந்​துக்கு அடுத்​த​படி​யாக இந்​தி​யர்​கள் 2-ம் இடத்​தில் உள்​ளனர். கடந்த 2023-ம் ஆண்டு கணக்​கெடுப்​பின்​படி 8.4 லட்​சம் இந்​தி​யர்​கள் அங்கு வசிக்​கின்​றனர். இதுத​விர, ஆயிரக்​கணக்​கானோர் ஆஸ்​திரேலி​யா​விலேயே பிறந்து குடி​யுரிமை பெற்​றுள்​ளனர். இந்​நிலை​யில், அங்கு வசிக்​கும் இந்​தி​யர்​களுக்கு எதி​ரான மனநிலை அதி​கரித்து வரு​கிறது. குறிப்​பாக, கடந்த சில வாரங்​களாக வெளி​நாட்​டினர் அதிக அளவில் குடியேறு​வதற்கு எதி​ராக, நாடு முழு​வதும் ‘மார்ச் பார் ஆஸ்​திரேலி​யா’ … Read more

ஆப்பிள் ஐபோன் 17 சீரிஸ் போன்கள் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

குபெர்டினோ: அமெரிக்க நாட்டில் இந்திய நேரப்படி நேற்று (செப்.9) இரவு 10.30-க்கு நடைபெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் நிகழ்வில் ‘ஐபோன் 17 சீரிஸ்’ ஸ்மார்ட்போன்களை அந்நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் அறிமுகம் செய்து வைத்தார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி உள்ளது ஐபோன் 17 சீரிஸ் போன்களின் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். கடந்த 2007-ல் ஆப்பிள் நிறுவனம் முதல் ஐபோன் மாடலை அறிமுகம் செய்தது. அது முதல் ஆண்டுதோறும் தங்கள் பயனர்களுக்கு புதிய அப்டேட் வழங்கும் வகையில் … Read more

இந்தியாவில் முதல்முறையாக கடல்சார் வள அறக்கட்டளை: அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்

சென்னை: இந்​தி​யா​வில் முதல்​முறை​யாக கடல் வள பாது​காப்​புக்​காக அமைக்​கப்​பட்ட தமிழ்​நாடு கடல்​சார் வள அறக்​கட்​டளையை அமைச்​சர் தங்​கம் தென்​னரசு தொடங்கி வைத்​தார். தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் மூலம் தேர்வு செய்​யப்​பட்ட வனக்​காவலர்​கள் மற்​றும் வனவர்​களுக்​கான பணி நியமன ஆணை​கள் வழங்​கும் நிகழ்ச்சி சென்னை கலை​வாணர் அரங்​கில் நேற்று நடை​பெற்​றது. வனத்​துறை அமைச்​சர் ஆர்​.எஸ்​.​ராஜகண்​ணப்​பன் தலைமை தாங்​கி, 333 வனப் பணி​யாளர்​களுக்கு பணி நியமன ஆணை​களை வழங்​கி​னார். அதைத் தொடர்ந்து இந்​தி​யா​வில் முதல்​முறை​யாக கடலோர சூழல் அமைப்​பு​களைப் … Read more