முக்கிய பெண் நக்சலைட் சத்தீஸ்கர் மாநிலத்தில் சரண்

ராய்ப்பூர்: அடுத்த ஆண்டு மார்ச் மாதத்​திற்​குள் நாட்​டில் நக்​சல் தீவிர​வாதத்தை முற்​றி​லும் ஒழிக்க மத்​திய அரசு உறு​திபூண்​டுள்​ளது. இதையொட்டி நக்​சலைட்​களுக்கு எதி​ராக கடும் நடவடிக்கை எடுக்​கப்​படு​கிறது. அதே​நேரத்​தில் சரண் அடைவோருக்கு அரசு மறு​வாழ்வு அளித்து வரு​கிறது. . சத்​தீஸ்​கரில் கடந்த மாதம் மட்​டும் சுமார் 300 நக்​சலைட்​கள் சரண் அடைந்​துள்​ளனர். இந்​நிலை​யில் சத்​தீஸ்​கரின் கேசிஜி (கை​ராகர்​-சுய்​காடன்​-கண்​டாய்) மாவட்​டத்​தில் முக்​கிய பெண் நக்​சலைட் ஒரு​வர் நேற்று சரண் அடைந்​தார். கமலா சோடி (30) என்ற இவர், சத்​தீஸ்​கரின் சுக்மா … Read more

‘ரோடு ஷோ’க்களை தடை செய்ய திருமாவளவன் கோரிக்கை

அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களை தடை செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: தலைவர்களைப் பார்ப்பதற்கு மக்கள் தானாக ஒன்று கூடுவார்கள் என்ற நிலை மாறி, மக்களைத் திட்டமிட்டுத் திரட்டும் போக்கு அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. இது அரசியலில் தனிநபர்வழிபாட்டுக்கும், கும்பல் கலாசாரத்துக்கும் இட்டுச் செல்வது மட்டுமின்றி மக்களை அரசியலற்ற வாக்குப் பண்டங்களாகவும் ஆக்குகிறது. கடந்த சில ஆண்டுகளாக ‘ரோடு ஷோக்கள்’ … Read more

ராணுவத்துக்கு மதம், ஜாதி கிடையாது: ராகுல் கருத்துக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் பதில்

புதுடெல்லி: ராணுவத்​துக்கு மதம், ஜாதி ஆகியவை கிடை​யாது என ராகுல் கருத்​துக்கு பாது​காப்​புத்​துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் பதில் அளித்​துள்​ளார். பிஹார் மாநிலம் அவுரங்​கா​பாத்​தில் நடை​பெற்ற தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் மக்​களவை காங்​கிரஸ் தலை​வர் ராகுல் காந்தி பங்​கேற்று பேசி​னார். அப்​போது அவர் கூறுகை​யில், ‘‘ நாட்​டில் உயர் வகுப்​பைச் சேர்ந்​தவர்​கள் 10 சதவீதம் பேர் உள்​ளனர். இவர்​கள் கட்​டுப்​பாட்​டில்​தான் கார்​பரேட் நிறு​வனங்​கள், அரசு நிர்​வாகம், நீதித்​துறை, ராணுவ​மும் கூட இந்த 10 சதவீதத்​தினர் கட்​டுப்​பாட்​டில்​தான் உள்​ளது. மீதம் … Read more

நகராட்சி நிர்வாகத் துறை பணி நியமனத்தில் மோசடி: வழக்குப்பதிவு செய்ய டிஜிபியிடம் பாஜக பொதுச் செயலாளர் மனு 

சென்னை: ‘நக​ராட்சி நிர்​வாகத் துறை​யில் பணி நியமனத்​தில் நடை​பெற்ற மோசடி குறித்து தமிழக காவல்​துறை உடனடி​யாக வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை​யைத் தொடங்க வேண்​டும்’ என்று டிஜிபி​யிடம் தமிழக பாஜக பொதுச் செய​லா​ளர் ஏ.பி.​முரு​கானந்​தம் மனு அளித்​துள்​ளார். அந்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: 2024-25 மற்​றும் 2025-26-ம் ஆண்​டுக்​கான நகராட்சி நிர்​வாகம் மற்​றும் குடிநீர் வழங்​கல் துறை​யில், காலிப்​பணி​யிடங்​களுக்​காக அதி​காரி​கள் மற்​றும் பணி​யாளர்​களைத் தேர்ந்​தெடுப்​ப​தில் பெரிய அளவி​லான ஊழல்நடந்​திருப்​ப​தாக அமலாக்​கத் துறை குற்​றம்​சாட்டி உள்​ளது. அந்​தவகை​யில், 2,538 பதவி​களுக்​கான ஆட்​சேர்ப்பு … Read more

நிலத்தை அரசு கையகப்படுத்தியதை கண்டித்து கர்நாடகவில் விவசாயி தீக்குளித்து தற்கொலை

பெங்களூரு: கர்​நாடக மாநிலம் மண்​டியா மாவட்​டத்​தில் உள்ள மூடனஹள்​ளியை சேர்ந்​தவர் மஞ்சே கவுடா (55). இவருக்கு சொந்​த​மான 2 ஏக்​கர் நிலம் கர்​நாடக வனத்​துறை இடத்​துக்கு அரு​கில் இருந்​தது. இதனால் வனத்​துறை அந்த நிலத்தை 3 ஆண்​டு​களுக்கு முன்பு கையகப்​படுத்​தி​யது. தனது நிலத்​துக்கு உரிய இழப்​பீடை உடனடி​யாக வழங்​கு​மாறு மண்​டியா மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கத்​தி​ல் மஞ்சே கவுடா மனு அளித்​தார். ஆனால் அரசு இழப்​பீடு வழங்​காமல் காலம் தாழ்த்​தி​யுள்​ளது. இந்​நிலை​யில் மஞ்சே கவுடா நேற்று முன் தினம் … Read more

சீருடை பணியாளர் தேர்வு வாரிய மதிப்பெண் அடிப்படையில் எஸ்.ஐ பதவி உயர்வு: 34 ஆண்டுகால பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி

சென்னை: ‘சீருடை பணி​யாளர் தேர்வு வாரிய மதிப்​பெண் அடிப்​படை​யில் எஸ்.ஐ பதவி உயர்வு வழங்​கப்​படும்’ என தமிழக அரசு அரசாணை பிறப்​பித்​துள்​ளது. தமிழக காவல் துறை​யில், காவல் பணி​யிடங்​கள் தமிழ்​நாடு சீருடை பணி​யாளர் தேர்வு வாரி​யம், தமிழ்​நாடு அரசு பணி​யாளர் தேர்​வாணை​யம் மற்​றும் மத்​திய அரசு பணி​யாளர் தேர்​வாணை​யம் மூலம் நிரப்​பப்​படு​கின்​றன. நேரடி எஸ்.ஐ. பணிக்​கான தேர்வை 1991 முதல் தமிழ்​நாடு சீருடை பணி​யாளர் தேர்வு வாரி​யம் நடத்​துகிறது. இதன்​மூலம் தேர்ந்​தெடுக்​கப்​படும் எஸ்​.ஐ.க்​களுக்கு (உதவி ஆய்​வாளர்) காவலர் … Read more

பிஹாரில் விறுவிறுப்பாக தொடங்கிய முதல் கட்ட தேர்தல்: 9 மணி வரை 13.13% வாக்குகள் பதிவு

பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி பதிவான வாக்குப் பதிவு 13.13% ஆக இருந்தது. பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது, இந்த வாக்குப் பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும். காலை 9 மணி நிலவரப்படி பதிவான வாக்குப் பதிவு 13.13% ஆக இருந்தது. … Read more

வீர, தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் பெற டிச.15 வரை விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு 

சென்னை: தமிழக அரசு நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: வீர, தீர செயல்​களுக்​கான ‘அண்ணா பதக்​கம்’ ஒவ்​வொரு ஆண்​டும் குடியரசு தின விழா​வின்​போது முதல்​வ​ரால் வழங்​கப்​படு​கிறது. பொது​மக்​களில் மூவருக்​கும், அரசு ஊழியர்​களில் மூவருக்​கும் (சீருடைப் பணி​யாளர்​கள் உட்​பட) இந்த பதக்​கங்​கள் வழங்​கப்​படும். விண்​ணப்​ப​தா​ரர் தமிழகத்தை சேர்ந்​தவர்​களாக இருக்க வேண்​டியது அவசி​யம். வயது வரம்பு கிடை​யாது. அந்​தவகை​யில், 2026-ம் ஆண்​டுக்​கான ‘வீர தீர செயல்​களுக்​கான அண்ணா பதக்​கம்’ விருதுக்கு பரிந்​துரைகள் வரவேற்​கப்​படு​கின்​றன. இதற்​கான விண்​ணப்​பம் மற்​றும் பரிந்​துரைகள் https://awards.tn.gov.in என்ற … Read more

பிஹார் முதல் கட்ட வாக்குப் பதிவும், தேர்தல் கள நிலவரமும் – ஒரு பார்வை

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் இன்று முதல்கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இதன் 121 தொகுதிகளில் தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியிடம் (என்டிஏ) 59, மெகா கூட்டணியிடம் 61 எம்எல்ஏக்கள் உள்ளனர். பிஹார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6, 11 தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதன்படி, 121 தொகுதிகளில் இன்று முதல்கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. 18 மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த தொகுதிகளில் மொத்தம் 122 பெண்கள் உள்ளிட்ட 1,314 … Read more

“தமிழக அரசின் முடிவே அவலங்களுக்கு காரணம்” – தூய்மைப் பணி பிரச்சினையில் சு.வெங்கடேசன் எம்.பி சாடல்

மதுரை: ”தூய்மைப் பணியை தனியாருக்கு கொடுக்கக் கூடிய தமிழக அரசின் முடிவே அனைத்து அவலங்களுக்கும் அடிப்படை காரணம்” என்று சு.வெங்கடேசன் எம்.பி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், “தூய்மைப் பணியை தனியாருக்கு கொடுக்க கூடிய தமிழக அரசின் முடிவு, அனைத்து அவலங்களுக்கும் அடிப்படை காரணம். தனியாருக்கு கொடுக்கும் முடிவை கைவிட வேண்டும். நகரங்களின் தூய்மையையும், வசிக்கும் மக்களின் சுகாதாரத்தையும் பாழாக்கும். கூடுதலான பிரச்சினை என்றால், மதுரை மாநகராட்சியில் தூய்மைப் பணி … Read more