ஜூப்ளி ஹில்ஸ் இடைத்தேர்தல்: 24,729 வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி

ஹைதராபாத்: ஹைத​ரா​பாத், ஜூப்ளி ஹில்ஸ் இடைத்​தேர்​தலில் காங்​கிரஸ் வேட்​பாளர் நவீன் யாதவ், 24,729 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றார். ஹைத​ரா​பாத், ஜூப்ளி ஹில்ஸ் தொகுதி பிஆர்​எஸ் கட்சி எம்​எல்ஏ மாகண்டி கோபி​நாத் கடந்த ஜூன் மாதம் உடல்​நலக்​குறை​வால் கால​மா​னார். இதனால் இந்த தொகு​திக்கு கடந்த 11-ம் தேதி இடைத்​தேர்​தல் நடை​பெற்​றது. இத் தேர்​தலில் காங்​கிரஸ், பிஆர்​எஸ், பாஜக வேட்​பாளர்​கள் உட்பட மொத்​தம் 58 பேர் போட்​டி​யிட்​டனர். 49 சதவீத வாக்​கு​கள் மட்​டுமே பதி​வா​யின. இந்​நிலை​யில் வாக்கு எண்​ணிக்கை … Read more

நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பு: குடியரசுத் தலைவரின் முடிவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

புதுடெல்லி: நீட் விலக்கு மசோ​தாவுக்கு ஒப்​புதல் அளிக்க மறுத்த குடியரசுத் தலை​வரின் முடிவுக்கு எதி​ராக தமிழக அரசு உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​துள்​ளது. இதுதொடர்​பாக தமிழக அரசின் சார்​பில் மூத்த வழக்​கறிஞர் பி.​வில்​சன் மற்​றும் வழக்​கறிஞர் மிஷா ரோஹ்தகி தாக்​கல் செய்​துள்ள மனு​வில், நீட் விலக்கு மசோ​தாவுக்கு ஒப்​புதல் அளிக்க மறுத்த குடியரசுத் தலை​வரின் நடவடிக்கை சட்​ட​விரோத​மானது. குடியரசுத் தலை​வரது இந்த நடவடிக்​கையை ரத்து செய்து நீட் விலக்கு மசோ​தாவுக்கு ஒப்புதல் அளித்​த​தாக அறிவிக்க வேண்​டும் அல்​லது … Read more

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் சஸ்பெண்ட்: பாஜக மேலிடம் நடவடிக்கை

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.கே. சிங், கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமாக இருந்தவர் ஆர்.கே. சிங். பிஹார் அரசியல் களத்தில் மூத்த அரசியல்வாதியாகத் திகழ்கிறார். அர்ரா தொகுதியின் முன்னாள் எம்.பி.யாக இருக்கிறார். இந்நிலையில் கட்சியிலிருந்து ஆர்.கே.சிங்கை சஸ்பெண்ட் செய்து பாஜக மேலிடம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதன் காரணமாக அவர் நீக்கப்பட்டுள்ளார் என கட்சி மேலிடம் தெரிவித்துள்ளது. பிஹார் சட்டப் பேரவைத் தேர்தல் … Read more

11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் முறைகேடு: பழனிசாமிக்கு எதிராக சிபிஐ விசாரணை கோரி வழக்கு

சென்னை: கடந்த அதி​முக ஆட்​சிக் காலத்​தில் 11 மாவட்​டங்​களில் புதி​தாக மருத்​து​வக் கல்​லூரி​களு​டன் கூடிய மருத்​து​வ மனை​கள் கட்​டப்பட்​ட​தில் முறை​கேடு நடந்​துள்​ள​தாகக் கூறி முன்னாள் முதல்​வர் பழனி​சாமிக்கு எதி​ராக சிபிஐ விசா​ரணை கோரி உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்டது. இதுதொடர்​பாக திரு​வாரூர் மாவட்​டம் நன்​னிலம் தாலுகா முடி​கொண்​டானைச் சேர்ந்த என்​.ராஜசேகரன் உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​த மனு: கடந்த அதி​முக ஆட்​சி​யில் ராம​நாத​புரம், கள்​ளக்​குறிச்​சி, திரு​வள்​ளூர், அரியலூர், நாகப்​பட்​டினம், விருதுநகர், திருப்​பூர், கிருஷ்ணகிரி, நீல​கிரி, நாமக்​கல், திண்​டுக்​கல் … Read more

தீவிரவாத மருத்துவர்களிடம் இருந்து கைப்பற்றிய வெடிபொருள் வெடித்து காஷ்மீரில் 9 பேர் பரிதாப உயிரிழப்பு: 32 பேர் படுகாயம்

புதுடெல்லி: தீவிரவாத மருத்துவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களை ஜம்மு – காஷ்மீரில் உள்ள காவல் நிலையத்தில் ஆய்வு செய்தபோது திடீரென வெடித்ததில் போலீஸார், தடயவியல் நிபுணர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். 32 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் காவல் நிலையக் கட்டிடம் பலத்த சேதமடைந்தது. ஜம்மு – காஷ்மீரில் போலீஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுத்து புன்போரா, நவ்காம் உள்ளிட்ட இடங்களில் கடந்த அக்டோபர் மாத மத்தியில் … Read more

“நாட்டிலேயே பாசிச பாஜகவுக்கு பதற்றத்தை தரக்கூடிய கட்சியாக திமுக திகழ்கிறது” – உதயநிதி ஸ்டாலின்

சிவகங்கை: நாட்டிலேயே பாசிச பாஜகவுக்கு பதற்றத்தை கொடுக்கக் கூடிய கட்சியாக திமுக திகழ்கிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கிருங்கோட்டையில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசின் புதுப்பிக்கப்பட்ட வெண்கல சிலையை துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசும்போது, “2026 தேர்தலில் சிவகங்கை, ராமநாதபுர ஆகிய 2 மாவட்டங்களிலும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். அடிமை கட்சி அதிமுக, பாசிச பாஜகவை வீழ்த்தி 2-வது முறையாக … Read more

பிஹார் முதல் டெல்லி வரை ஆதிக்கம் செலுத்தும் ஆளுமை: யார் இந்த நிதிஷ் குமார்?

‘நிதிஷ் குமார் ஒரு மண் குதிரை’ – 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் மகாகட்பந்தன் கூட்டணியை முறித்துக் கொண்டு பாஜகவுடன் அவர் கைகோர்த்தபோது பரவலாக முன்வைக்கப்பட்ட விமர்சனம் இது. ஆனால் ஜோதி பாசு, நவீன் பட்நாயக் போன்றோர் செய்த சாதனையை (தொடர்ந்து 20 ஆண்டுகளாக மாநில முதல்வர் பதவி) சமன் செய்து ‘அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்’ என தனது அரசியல் ஆளுமையை வெளிப்படுத்தியுள்ளார் நிதிஷ் குமார். 10-வது முறையாக முதல்வர் பதவி! – முதன்முதலில் இவர் மார்ச் … Read more

‘எஸ்ஐஆர் பணிகளில் திமுக முறைகேடு’ – நவ.17-ல் அதிமுக ஆர்ப்பாட்டம் என இபிஎஸ் அறிவிப்பு

சென்னை: “தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டு வரும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை திமுக மேற்கொண்டு வருவதாக குற்றஞ்சாட்டும் அதிமுக, இதனைக் கண்டித்து வரும் 17-ம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்கு மக்கள் தயாராகிவிட்ட நிலையில், தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டு வரும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளை … Read more

‘ராகுல் எங்கள் தலைவர்; அவருக்கு ஊக்கம் கொடுத்தோம்’ – கர்நாடக முதல்வர் சித்தராமையா @ டெல்லி

புதுடெல்லி: கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா டெல்லிக்கு பயணமாக சென்றுள்ளார். இந்த பயணத்தில் மழை மற்றும் வெள்ளம் காரணமாக பயிர் சேதம் ஏற்பட்ட நிலையில் விவசாயிகளுக்கு நிவாரணம் கோரியும், மேகதாது அணை விவகாரம் குறித்தும் மத்திய அரசின் உதவியை அவர் கோரவுள்ளதாக தகவல். இந்நிலையில், சனிக்கிழமை அன்று டெல்லியில் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். “அமைச்சரவை மாற்றம் குறித்து எங்கள் அமைச்சர்கள் யாரும் எதுவும் பேசவில்லை. பிரதமர் மோடியை இன்று நான் சந்தித்திருக்க வேண்டும். பிஹார் தேர்தல் காரணமாக … Read more

“பிஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்கு எஸ்ஐஆர் ஒரு காரணம்” – சீமான்

திருச்சி: “பிஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதற்கு எஸ்.ஐ.ஆர் ஒரு காரணம்தான். திட்டமிட்டு எஸ்.ஐ.ஆர் மூலம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டிலும் வாக்காளர்கள் நீக்கப்படுவார்களா என்கிற அச்சம் உள்ளது” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “பிஹாரில் நிதிஷ் குமார் தனது பெயரை கெடுத்துக் கொள்ளவில்லை. எஸ்.ஐ.ஆர் மூலம் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். இன்னும் 5 மாதங்கள் … Read more