பாகிஸ்தான் அணுசக்தி மையத்தை தாக்க இந்திரா அனுமதிக்கவில்லை: அமெரிக்க முன்னாள் சிஐஏ அதிகாரி தகவல் 

வாஷிங்டன்: ‘‘இஸ்​ரேலும் இந்​தி​யா​வும் சேர்ந்து பாகிஸ்​தான் அணுசக்தி மையத்தை தாக்​கு​வதற்​கு, அப்​போதைய பிரதமர் இந்​திரா காந்தி அனு​ம​திக்​க​வில்​லை. இது மிக​வும் அவமானகர​மானது’’ என்று அமெரிக்​கா​வின் உளவுத் துறை​யான சிஐஏ முன்​னாள் அதி​காரி தெரி​வித்​துள்​ளார். அமெரிக்​கா​வின் சிஐஏ அதி​காரி​யாக பணி​யாற்​றிய​வர் ரிச்​சர்ட் பார்​லோ. இவர் தனி​யார் செய்தி நிறு​வனத்​துக்கு அளித்த பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 1980-ம் ஆண்​டு​களில் பாகிஸ்​தான் அணுசக்தி ஆராய்ச்​சி​யில் ஈடு​பட்டு வந்​தது. குறிப்​பாக அணுஆ​யுதம் தயாரிப்​ப​தற்கு தேவை​யான யுரேனி​யத்தை கஹுவா அணுசக்தி மையத்​தில் செறிவூட்​டும் நடவடிக்​கை​யில் … Read more

புதுச்சேரியில் எஸ்ஐஆர் நடைமுறைகளில் குளறுபடி: அதிமுக குற்றச்சாட்டு

புதுச்சேரி: இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை புதுச்சேரி தேர்தல் துறை சீர்குலைத்து வருகிறது என்று புதுச்சேரி அதிமுக குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தெரு நாய்கள் விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். கடந்த கால திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தரமற்ற மருந்து கொள்முதல் செய்தது மற்றும் மதுபான உற்பத்தியில் லஞ்சம் பெற்றது தொடர்பாக … Read more

மகாத்மா காந்தி அன்று எதிர்கொண்ட அதே போரை இன்று காங்கிரஸ் எதிர்கொள்கிறது: பிரியங்கா காந்தி

கட்டிஹார் (பிஹார்): ஒரு காலத்தில் மகாத்மா காந்தி எதிர்கொண்ட அதே போரை இன்று காங்கிரஸ் எதிர்கொள்கிறது என பிரியங்கா காந்தி வத்ரா தெரிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கட்டிஹார் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா, “பிரதமர் மோடி தனது பதவிக்கான கண்ணியத்தைப் பேணவில்லை. ஒருபக்கம் அவர், அகிம்சைக்கான வந்தே மாதரம் பாடலை புகழ்ந்து பேசுகிறார். மறுபக்கம், நாட்டு துப்பாக்கி பற்றிப் பேசுகிறார். ஒரு காலத்தில் … Read more

தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 6453 மெட்ரிக் டன் கேழ்வரகு கொள்முதல்: அமைச்சர் சக்கரபாணி தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் 6453 மெட்ரிக் டன் கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட்டு 3578 விவசாயிகளுக்கு ரூ. 26.48 கோடி வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் முதல் தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மற்றும் சேலம் ஆகிய நான்கு மாவட்டங்களில் கேழ்வரகு கொள்முதல் தொடர்ந்து செய்யப்படும் என தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பரவலாக்கப்பட்ட கொள்முதல் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் கேழ்வரகு கொள்முதல் திட்டம், கடந்த … Read more

‘நாட்டில் சைபர் மோசடி தடுப்பு பிரிவு இல்லாதது ஏன்?’ – பணத்தை இழந்த திரிணமூல் எம்.பி கேள்வி

புதுடெல்லி: திரிண​மூல் காங்​கிரஸ் எம்பி கல்​யாண் பானர்​ஜி​யின் வங்​கிக் கணக்​கில் இருந்து ரூ.57 லட்​சம் மோசடி செய்​யப்​பட்டது. தற்போது அந்த பணம் அவரது வங்கிக் கணக்கில் மீண்டும் பெறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, ‘நாட்டில் சைபர் மோசடி தடுப்பு பிரிவு ஏன் இல்லை?’ என நிதி அமைச்சகத்தை நோக்கி அவர் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் கூறியது: “மக்கள் பிரதிநிதியான நானே சைபர் மோசடியால் பாதிக்கப்பட்ட நிலையில் சாமானிய … Read more

பாகிஸ்தான் – ஆப்கன் பேச்சு தோல்வி: போருக்குத் தயார் என தலிபான் அரசு எச்சரிக்கை

காபூல்: துருக்கியின் இஸ்தான்புல் நகரில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை எட்டாத நிலையில், ‘போருக்கு தயார்’ என ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான் அரசு தெரிவித்துள்ளது. “நட்பு நாடுகளான துருக்கியும், கத்தாரும் இணைந்து பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயன்றது. நவ.6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் மிகுந்த நம்பிக்கையுடன் ஆப்கன் தரப்பில் பங்கேற்றோம். இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் தீவிரமாக கவனம் செலுத்தும் என … Read more

சென்னையில் பிங்க் ஆட்டோவை ஆண்கள் ஓட்டினால் பறிமுதல்!

சென்னை: சென்னையில் பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாநகரில் பெண்கள், குழந்தைகள் தனியாக பாதுகாப்புடன் பயணம் செய்ய ஏதுவாக, பெண்களுக்கான உதவி எண் மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட இளஞ்சிவப்பு (பிங்க்) ஆட்டோ சேவை அறிமுகம் செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ரூ.1 லட்சம் மானியம் மற்றும் வங்கி … Read more

பிஹார் தேர்தலில் வாக்குப் பதிவு அதிகரிப்பது எதற்கான அறிகுறி? – ஒரு விரைவுப் பார்வை

பிஹாரில் 243 சட்டப்பேரவை தொகுதிகளில் முதல்கட்டமாக 121 தொகுதிகளுக்கு கடந்த 6-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. 1,314 வேட்பாளர்கள் களம் கண்டன இந்தத் தேர்தலில் 65.08 சதவீத வாக்குகள் பதிவானது என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு பிஹார் தேர்தல் களத்தின் ஹாட் டாப்பிக் ஆகியுள்ளது. 2020 பிஹார் சட்டப்பேரவை பொதுத் தேர்தலுடன் ஒப்பிடும்போது தற்போதைய வாக்குப்பதிவு 7.79% அதிகரித்துள்ளது. 2024 மக்களவை பொதுத் தேர்தலுடன் ஒப்பிடும்போது 8.8% அதிகரித்துள்ளது. பொதுவாகவே வாக்கு சதவீதம் அதிகரித்தால், அது ஆட்சிக்கு எதிரான … Read more

இனப்படுகொலை: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பித்த துருக்கி!

இஸ்தான்புல்: காசாவில் நடத்திய போருக்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமைச்சர்கள் மற்றும் அவரது அரசாங்கத்தில் உள்ள மூத்த அதிகாரிகள் மீது இனப்படுகொலை குற்றச்சாட்டுக்கான கைது வாரன்ட்களை துருக்கி அரசு பிறப்பித்துள்ளது. காசாவில் திட்டமிட்டு இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அவரது அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் செய்ததாக துருக்கி குற்றம் சாட்டியுள்ளது. இதனையடுத்து, காசாவில் நடத்திய போருக்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமைச்சர்கள் மற்றும் அவரது அரசாங்கத்தில் … Read more

“திமுகவுக்கு சாதகமாக இருக்காது என்பதால் ‘எஸ்ஐஆர்’ தவறு என சொல்லக் கூடாது” – சரத்குமார்

மதுரை: “திமுகவுக்கு சாதகமாக இருக்காது என்பதால் எஸ்ஐஆர் சரிபார்ப்பது தவறு என சொல்லக் கூடாது” என பாஜக தேசியக்குழு உறுப்பினரும், நடிகருமான சரத்குமார் தெரிவித்தார். சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு இன்று வருகை தந்த பாஜக தேசியக்குழு உறுப்பினரும், நடிகருமான சரத்குமார் கூறியது: “கோவையில் நடந்த பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் காலில் சுட்டுப்பிடித்ததாக கூறியுள்ளனர். பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர்களை நீதிமன்றங்களில் நிரூபித்து தூக்குத் தண்டனை பெற்றுத்தர வேண்டும். அதிகபட்ச தண்டனை வழங்கினால்தான் … Read more