பாட்னா கூட்டம் | எதிர்க்கட்சிகளின் அணுகுமுறையில் தீவிரமும் உண்மையும் இல்லை: மாயாவதி விமர்சனம்

லக்னோ: பாஜகவுக்கு எதிரான கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை பாட்னாவில் நடைபெற உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் தங்களது நோக்கத்தில் தீவிரமாக இருப்பதாகத் தெரியவில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை ஒருங்கிணைந்து எதிர்கொள்வதற்கான வியூகம் குறித்து ஆலோசிக்க பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் பிஹார் தலைநகர் பாட்னாவில் வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க நாட்டின் பல்வேறு முக்கிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. … Read more

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 10,000 பொறியாளர்களை நியமிக்க நடவடிக்கை: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 10,000 பொறியாளர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தம்) சட்டம், 2022 மற்றும் விதிகள், 2023 தொடர்பான பயிலரங்கத்தை நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பேசுகையில், “தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998-க்கான (திருத்தம்), 2022 சட்டம் 11 பகுதிகளாகவும் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான விதிகள் 2023, … Read more

‘அமுல்’ சிறுமியை உருவாக்கிய ‘விளம்பரத் துறை குரு’ சில்வெஸ்டர் டா குன்ஹா மறைவு

மும்பை: அமுல் சிறுமியை வடிவமைத்த சில்வெஸ்டர் டா குன்ஹா காலமானார். 80 வயதைக் கடந்த அவர், உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்தார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். சில்வெஸ்டர் டா குன்ஹா மரணம் குறித்து அமுல் நிறுவனத்தின் குஜராத் சந்தைப்படுத்தல் மேலாளரான பவன் சிங் கூறும்போது, “குன்ஹா இந்திய விளம்பர உலகின் லெஜண்ட். உலகின் மிக நீண்ட தொடர்ச்சியான விளம்பர பிரச்சாரங்களில் ஒன்றை வடிவமைத்திருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார். மேலும் நிறுவன முன்னாள், இன்னாள் … Read more

ஜனநாயக திருவிழாவான 2024 பொதுத் தேர்தலை காண வாருங்கள்: ஜி20 பிரதிநிதிகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு

பனாஜி: ஜனநாயக திருவிழாவான 2024 பொதுத் தேர்தலை காண வாருங்கள் என்று ஜி20 மாநாட்டுப் பிரதிநிதிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். நடப்பு ஆண்டுக்கான ஜி20அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டு இந்தியா வழிநடத்தி வருகிறது. அதன்படி நாட்டின்பல்வேறு பகுதிகளில் ஜி20 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஜி20 சுற்றுலா அமைச்சர்களுக்கான மாநாடு கோவா மாநிலத் தலைநகர் பனாஜியில் நேற்று நடைபெற்றது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் … Read more

5,362 மதுக்கடைகளையும் மூடவேண்டும்: புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

மதுரை: தமிழகத்திலுள்ள 5,362 மதுபானக் கடைகளும் மூடவேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தினார். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சென்னை செல்ல மதுரை விமான நிலையம் வந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ”தமிழகத்தில் 1937 முதல்1971 வரை பூரண மதுவிலக்கு அமலில் இருந்தது . 71-ல் திமுக ஆட்சியில் மதுவிலக்கு தளர்த்தப்பட்டது. தொடர்ந்து 20 ஆண்டாகவே மதுவிலக்கு அமல், தளர்வு என, மாறி மாறி … Read more

பாட்னா கூட்டம் | ஒரு குடும்பமாக இருந்து பாஜகவை எதிர்ப்போம்: மம்தா பானர்ஜி

பாட்னா: ஒரு குடும்பமாக இருந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்ப்போம் என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்வதற்கான வியூகம் தொடர்பாக ஆலோசிக்க எதிர்க்கட்சிகள் பிஹார் தலைநகர் பாட்னாவில் வெள்ளிக்கிழமை கூடுகின்றன. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாட்னாவுக்கு வருகை தந்த மம்தா பானர்ஜி, பிஹார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவருமான லாலு பிரசாத் யாதவை அவரது … Read more

அமெரிக்காவில் 1882-ம் ஆண்டு தொடங்கப்பட்ட லாட்டி நியூயார்க் பேலஸ் ஓட்டலில் தங்கியுள்ளார் பிரதமர் மோடி

நியூயார்க்: அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, நியூயார்க் நகரில் உள்ள பிரபல ‘லாட்டி நியூயார்க் பேலஸ் ஓட்டலில்’ தங்கியுள்ளார். இந்த ஓட்டல் கடந்த 1882-ம்ஆண்டு தொடங்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்கது. இந்தஇடம் முன்பு வில்லார்ட் ஹவுசஸ் என அழைக்கப்பட்டது. 51 மாடியுடன் கூடிய இந்த ஓட்டல் 563 அடி உயரம் கொண்டது. வில்லார்ட் ஹவுசஸ் பகுதியில் 55 மாடி கொண்ட ஹெம்ஸ்லே பேலஸ் ஓட்டலை ஹேரி ஹெம்ஸ்லே என்ற தொழிலதிபர் கட்டினார். கடந்த 1992-ம் ஆண்டு இந்த … Read more

சிபிஐ, அமலாக்கத் துறைக்கு நாடு முழுவதும் சோதனையிட அதிகாரம் உண்டு: மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங்

காரைக்குடி: சிபிஐ, அமலாக்கத் துறைக்கு நாடு முழுவதும் சோதனையிட அதிகாரம் உண்டு என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார். அவர் இன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள மித்திரங்குடியில் பிரதமர் கிராமச் சாலைகள் திட்டம் மூலம் ரூ.4 கோடியில் அமைக்கப்படும் சாலைப் பணியை பார்வையிட்டார். தொடர்ந்து சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஒன்றியத் தலைவர் சரண்யா உள்ளிட்டோர் கலந்து … Read more

அசாமில் கடும் வெள்ளப்பெருக்கு – 10 மாவட்டங்களைச் சேர்ந்த 1.2 லட்சம் பேர் பாதிப்பு

கவுகாத்தி: அசாமில் பெய்து வரும் கனமழை காரணமாக 10 மாவட்டங்களைச் சேர்ந்த 1.2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அசாமில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மழை மேலும் தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து, அடுத்த 48 மணி நேரத்துக்கு மிக கனமழை பெய்யும் என அறிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பதற்கான ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது. 10 மாவட்டங்களில் பாதிப்பு: … Read more

பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணம் இரு தரப்பு உறவை மேலும் ஆழப்படுத்தும்: வெள்ளை மாளிகை

வாஷிங்டன்: பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணம், இரு நாடுகளுக்கு இடையேயான நெருக்கமான ஒருங்கிணைப்பை மேலும் ஆழப்படுத்தும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி, மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், அவரது இந்த பயணம் இரு தரப்பு உறவில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறித்து வெள்ளை மாளிகை மூத்த அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறினார். அவர் கூறியதாவது: “பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணம் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஆழமான மற்றும் … Read more