விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காமல் கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்டும் பணி தொடரக் கூடாது: ஐகோர்ட் உத்தரவு

மதுரை: கையகப்படுத்திய நிலங்களுக்குரிய இழப்பீடு வழங்காமல் கொள்ளிடம் ஆற்றில் பாலத்துடன் கூடிய கதவணை கட்டுமானப் பணியை தொடரக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே மயிலாடுதுறை மாவட்டம் குமாரமங்கலம், கடலூர் மாவட்டம் ஆதனூர் இடையே பாலத்துடன் கூடிய கதவணை கட்ட அரசு ரூ.400 கோடி ஒதுக்கியது. இத்திட்டத்துக்காக கொள்ளிடம் ஆற்றின் கரையில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இந்த நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி சுந்தரவிமலநாதன் என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் … Read more

வங்கக் கடலில் கருணாநிதி பேனா நினைவுச் சின்னம்: 15 நிபந்தனைகளுடன் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல்

புதுடெல்லி: தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு வங்கக் கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 15 நிபந்தனைகளுடன் ஒப்புதல் வழங்கி உள்ளது. இது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தமிழக அரசின் பொதுப்பணித்துறைக்கு கடந்த 19-ம் தேதி ஒப்புதல் கடிதம் அனுப்பி உள்ளது. அதில், “நிபுணர் மதிப்பீட்டுக் குழு மற்றும் தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் ஆகியவற்றின் பரிந்துரைகளின் அடிப்படையில் சென்னை திருவல்லிக்கேணி அருகே கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க … Read more

அட்லாண்டிக் பெருங்கடலில் மாயமான நீர்மூழ்கிக் கப்பலில் குறையும் ஆக்சிஜன்!- தொடரும் தேடுதல் பணி

அட்லாண்டிக்: அட்லாண்டிக் பெருங்கடலில் டைட்டானிக் பாகங்களைக் காணச் சென்றபோது ஒரு மாலுமி உட்பட 5 பேருடன் மாயமான நீர்மூழ்கிக் கப்பலை காணும் பணி நான்காவது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது. இங்கிலாந்தைச் சேர்ந்த டைட்டானிக் கப்பல் கடந்த 1912-ம் ஆண்டு, அமெரிக்காவின் நியூயார்க் நகரத்துக்கான தனது முதல் பயணத்திலேயே பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் டைட்டானிக்கின் உதிரி பாகங்கள் கனடா அருகே அட்லான்டிக் கடல் பகுதியில் 12,500 அடி ஆழத்தில் மூழ்கிக் … Read more

மூடப்பட்டு 3 ஆண்டுகள் ஆனது… ஐசிஎஃப் பஸ் ஸ்டாண்ட எப்ப சார் திறப்பீங்க?

சென்னை: பயணிகள் நலன் கருதி ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சென்னை ஐசிஎஃப் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. மேலும் ஐ.சி.எஃப் மருத்துவமனை, 4 பள்ளிகள் இங்கு செயல்பட்டு வருகின்றன. இப்பகுதி மக்கள் மற்றும் ஐசிஎஃப் ஊழியர்களின் தேவையை கருத்தில் கொண்டு இங்கு ஐசிஎஃப் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு, 50-க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இங்கிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்து வந்தனர். … Read more

‘பாட்னா எதிர்க்கட்சிகள் கூட்டம் | 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான ஒரு சிறந்த தொடக்கம்’ – திரிணமூல் காங்கிரஸ்

கொல்கத்தா : பாட்னாவில் வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டம், 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான நல்ல தொடக்கமாக திரிணமூல் காங்கிரஸ் கருதுகிறது. மேலும் ஜனநாயக விரோத மற்றும் சர்வாதிகார கொள்கைகளுக்கு எதிரான, பாஜகவுக்கு எதிராக இருக்கும் கட்சிகள் ஒன்றிணைவதன் முக்கியத்துவத்தை அக்கட்சி வலியுறுத்தியுள்ளது. பிஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதாதளம் கட்சித் தலைவருமான நிதிஷ் குமார் அழைப்பு விடுத்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் நாளை (ஜூன் 23) அம்மாநில தலைநகர் பாட்னாவில் நடக்க இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் … Read more

ஷேன் வார்ன் மரணத்துக்கான காரணம் என்ன?- மருத்துவர்கள் பகிர்ந்த தகவல்

சிட்னி: கிரிக்கெட் விளையாட்டின் ஜாம்பவான்களில் ஒருவரான ஷேன் வார்னின் மரணத்துக்கான காரணம் என்ன என்பதை மருத்துவர்கள் பகிர்ந்துள்ளனர். வார்னின், உடற்கூராய்வின் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகளை அவர்கள் இதில் தெரிவித்துள்ளனர். இதனை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டன் நாட்டில் வசித்து வரும் இதயவியல் மருத்துவர் அசீம் மல்ஹோத்ரா மற்றும் ஆஸ்திரேலிய மருத்துவ வல்லுநர்கள் சங்கத்தின் தலைவரும், மருத்துவருமான கிறிஸ் நீல் ஆகியோர் இணைந்து கண்டறிந்துள்ளனர். உடற்கூராய்வு முடிவுகளின் படி வார்னுக்கு இதய நோய் இருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். … Read more

வள்ளலார் குறித்த ஆளுநரின் கருத்துகள் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியவை: அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: வள்ளலார் குறித்த ஆளுநரின் கருத்துகள் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியவை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். வள்ளலாரின் 200-வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழக ஆளுநர் ரவி, பத்தாயிரம் ஆண்டு சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார் என்று பேசியிருந்தார். சனாதன தர்மத்தை எதிர்த்த வள்ளலாரை சனாதன தர்மத்துக்கு ஆதரவாளராக ஆளுநர் பேசியிருப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பாக தமிழக நிதி, மின்சாரம் மற்றும் மனிவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது … Read more

மோடிக்கு சவால்விடும் தலைவர் எதிர்க்கட்சிகளிடம் இல்லை: பிஹார் முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சி

பாட்னா: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு சவால்விடக்கூடிய அளவிலான தலைவர் எதிர்க்கட்சிகளிடம் இல்லை என்று பிஹார் முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சி தெரிவித்துள்ளார். பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசில் அங்கம் வகித்து வந்த ஜிதன் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி, இரு தினங்களுக்கு முன்பு அதில் இருந்து வெளியேறியது. இதையடுத்து ஜிதன் ராம் மஞ்சியும் அவரது மகனும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியின் தலைவருமான … Read more

சீனா | உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 31 பேர் பலி; பலர் காயம்

பெய்ஜிங்: சீனாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 31 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இதுகுறித்து சினுவா செய்தி நிறுவனம், “சீனாவின் யின்சுவான் நகரில் புதன்கிழமை இரவு உணவகம் ஒன்றில் வாயு கசிந்து பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது உணவகத்தில் டிராகன் திருவிழா கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் சிக்கி கொண்டனர். இதில் 31 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. உயிரிழந்தவர்களில் பலர் பள்ளி மாணவர்கள்” என்று … Read more

தமிழக மீனவர்கள் 22 பேர் கைது | இலங்கை கடற்படை அத்துமீறலுக்கு முடிவு கட்டுவது எப்போது?- ராமதாஸ் கேள்வி

சென்னை: தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்குடன் இந்தியா – இலங்கை கூட்டுப் பணிக்குழுவின் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி சாதகமான முடிவை மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ராமதாஸ் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மற்றும் புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த 22 மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். … Read more