மணிப்பூர் வன்முறை | ஜூன் 24-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அமித் ஷா அழைப்பு

புதுடெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை வெடித்து சுமார் 50 நாட்கள் கடந்துள்ள நிலையில் வரும் ஜூன் 24-ம் தேதி (சனிக்கிழமை) அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டம் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் என்று உள்துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது. முன்னதாக இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் நிலவரத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த மே 29-ம் தேதி உள்துறை அமைச்சர் அமித் ஷா அங்கு சென்றார். … Read more

கூண்டுக்குள் எலான் மஸ்க் vs மார்க் ஸூகர்பெர்க் நேருக்கு நேர் மோதல்?

நியூயார்க்: மெட்டா நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஸூகர்பெர்க் உடன் கூண்டுக்குள் நேருக்கு நேர் மோத தான் தயார் என ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்வீட் செய்திருந்தார். இந்த மோதலுக்கு தானும் தயார் என மார்க் ஸூகர்பெர்க் சம்மதம் தெரிவித்துள்ளார். அதோடு மோதலுக்கான நிகழ்விடத்தை அனுப்பவும் என அவர் சொல்லியுள்ளார். இதனை இன்ஸ்டாவில் ஸூகர்பெர்க் தெரிவித்திருந்தார். மெட்டா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளரும் இதனை உறுதி செய்துள்ளார். இந்த நிலையில் ‘Vegas Octagon’ … Read more

செந்தில் பாலாஜிக்கு 5 மணி நேரம் பைபாஸ் இதய அறுவை சிகிச்சை – 4 செயற்கை ரத்தக் குழாய்கள் பொருத்தி ரத்த ஓட்டம் சீராக்கப்பட்டது

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 5 மணி நேரம் பைபாஸ் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அடைப்பு ஏற்பட்டிருந்த 4 ரத்தக் குழாய்களுக்கு பதிலாக 4 செயற்கை ரத்தக் குழாய்கள் பொருத்தி ரத்த ஓட்டம் சீராக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை சென்னை பசுமை வழிசாலையில் உள்ள அவரது அரசு இல்லத்தில் அமலாக்கத் துறையினர் கடந்த 14-ம் தேதி அதிகாலை கைது செய்தனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்து செல்லும்போது, அவர் … Read more

ராஜஸ்தான் | மனைவிக்கு ரூ.55 ஆயிரம் ஜீவனாம்சத்தை 280 கிலோ நாணயமாக வழங்கிய கணவன்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த தெரு வியாபாரி தஸ்ரத் குமாவத். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் சீமா என்பவரை திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்தனர். அதன்பின், ஜெய்ப்பூர் குடும்பநல நீதிமன்றத்தில் தஸ்ரத் விவாகரத்து வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்து வரும் குடும்பநல நீதிமன்றம், மனைவிக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.55 ஆயிரத்தை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அந்த ஜீவனாம்ச பணத்தை அவர் வழங்கவில்லை. அதனால் மனைவி மீண்டும் நீதிமன்றத்தை அணுகினார். … Read more

உபநிஷத புத்தகம், விநாயகர் சிலை, வைரக்கல் – பைடன் தம்பதிக்கு பிரதமர் மோடி வழங்கிய பரிசுகள்

வாஷிங்டன்: பிரதமர் மோடி அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு வெள்ளை மாளிகையில் அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்து நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். முன்னதாக வாஷிங்டன் வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது மழை பெய்ததை சுட்டிக் காட்டிய பிரதமர் மோடி தனது ட்விட்டரில் இந்திரனின் வரவேற்புடனும், இந்திய சமூகத்தினரின் வரவேற்புடன் வாஷிங்டன் வந்தடைந்தேன் என்று பதிவிட்டிருந்தார். பின்னர் அமெரிக்க அதிபர் ஏற்பாடு செய்திருந்த விருந்த நிகழ்ச்சிக்கு சென்றிருந்த அவரை அதிபர் … Read more

தமிழகத்தில் 4 நாட்கள் மழை வாய்ப்பு – கடலோரத்தில் சூறாவளிக் காற்று வீசும்

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வடதமிழகப் பகுதிகளின் வளிமண்டல மேலடுக்குகளில் கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (ஜூன் 22) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான மழை பெய்யக்கூடும். அதேபோல, வரும் 23, 24, 25-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூன் 21-ம் தேதி (நேற்று) காலை 8.30 … Read more

பெங்களூருவில் தேவாலய பீடத்தை அடித்து நொறுக்கியவர் கைது

பெங்களூரு: பெங்களூருவில் நள்ளிரவில் தேவாலயத்தின் பீடம் அடித்து நொறுக்கப்பட்ட விவகாரத்தில் 29 வயது கிறிஸ்தவ இளைஞர் கைது செய்யப்பட்டார். பெங்களூருவில் உள்ள கம்மனஹள்ளியில் 10ஆம் பாயஸ் தேவாலயம் உள்ளது. நேற்று முன் தினம் நள்ளிரவு 3 மணியளவில் உள்ளே நுழைந்த நபர் ஆலயத்தின் பலி பீடம், நற்கருணை பேழை, சுரூபங்கள் ஆகியவற்றை கம்பியால் அடித்து நொறுக்கினார். இந்த சம்பவத்துக்குபின் களைப்புடன் வெளியே வந்தார். அப்போது தேவாலயத்தின் நுழைவாயிலில் தூங்கிக்கொண்டிருந்த காவலாளியை எழுப்பி, அவரிடம் தண்ணீர் வாங்கி குடித்தார். … Read more

கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்க்க சென்றபோது 5 பேருடன் சுற்றுலா நீர்மூழ்கி ‘டைட்டன்’ திடீர் மாயம்

நியூஃபவுண்ட்லேண்ட்: இங்கிலாந்தைச் சேர்ந்த டைட்டானிக் கப்பல் கடந்த 1912-ம் ஆண்டு, தனது முதல் பயணத்திலேயே பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 1,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த கப்பல் கனடா அருகே அட்லான்டிக் கடல் பகுதியில் 12,500 அடி ஆழத்தில் மூழ்கி கிடக்கிறது. இந்த கப்பல் பற்றிய ஹாலிவுட் திரைப்படம் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தது. இதனால் நீர்மூழ்கியில் சென்று, ஆழ்கடலில் மூழ்கியிருக்கும் டைட்டானிக் கப்பலை பார்வையிடும் சாகச சுற்றுலாவை அமெரிக்காவைச் சேர்ந்த ஓசன்கேட் என்ற நிறுவனம் மேற்கொண்டது. … Read more

செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றியதை எதிர்த்த அமலாக்கத் துறை கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜியை அரசு மருத்துவமனையில் இருந்து, தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில், அமலாக்கத் துறையின் கோரிக்கையை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், விசாரணையை ஜூலை 4-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது. சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சு வலி காரணமாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், இதயத்தில் … Read more

5 நட்சத்திர ஓட்டலில் 2 ஆண்டுகள் தங்கிய நபர்: ரூ.58 லட்சம் மோசடி செய்ததாக போலீஸில் புகார்

புதுடெல்லி: டெல்லியில் 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அதன் ஊழியர்களுடன் கூட்டு சேர்ந்து வாடிக்கையாளர் ஒருவர் பணம் எதுவும் செலுத்தாமல் சுமார் 2 ஆண்டுகள் தங்கியுள்ளார். இதனால் ரூ.58 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஓட்டல் நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது. டெல்லி சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ‘ரோஸேட் ஹவுஸ்’ என்ற 5 நட்சத்திர ஓட்டல் தரப்பில், இது தொடர்பாக விமான நிலைய காவல் நிலையத்தில் சமீபத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதில் அங்குஷ் தத்தா என்பவர் ஓட்டலில் 603 … Read more