குட்கா தடை ரத்து | உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு: மா.சுப்பிரமணியன் விளக்கம்

சென்னை: குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்கு தடைவிதித்த உணவு பாதுகாப்பு ஆணையரின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து தமிழ்க அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்கு தடை விதித்த உணவு பாதுகாப்பு ஆணையரின் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. உணவு பாதுகாப்பு … Read more

மத்திய அரசின் வலைதளத்தில் ‘தமிழ்நாடு’ பெயரில் எழுத்துப் பிழை – திமுக கொந்தளிப்பு

சென்னை: ‘தமிழ்நாடு’ன்னு கூட எழுதத் தெரியாதவர்களிடம் மாட்டிக் கொண்டு தமிழ்நாடு தவிப்பதாக திமுக ஐ.டி.விங்கின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் விமர்சிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 74-வது குடியரசு தின விழா தலைநகர் டெல்லியில் நேற்று (ஜன.26) கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. டெல்லியில், ராணுவ அணிவகுப்பு நடைபெறும் கடமை பாதையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடியேற்றிவைத்தார். அப்போது 21 பீரங்கி குண்டுகள் முழங்க, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பின்னர், ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் 17 மாநிலங்கள் மற்றும் … Read more

அண்ணா சாலையில் கட்டிட இடிப்பின்போது பெண் உயிரிழப்பு: சென்னையில் இருவர் கைது; 3 பேருக்கு வலை

சென்னை: சென்னை அண்ணா சாலையில் கட்டிட இடிப்பின்போது பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 3 பேரை தேடி வருகின்றனர். சென்னை அண்ணா சாலையின் ஆயிரம் விளக்குப் பகுதியில் நெடுஞ்சாலைத் துறையின் சுரங்கப்பாதைக்கு அருகில் உள்ள பயன்படுத்தப்படாத கட்டிடத்தை இடிக்கும் பணி கடந்த இரண்டு நாட்களாக நடந்து வந்தது. இந்நிலையில், இன்று (ஜன.27) காலை அந்த கட்டிடத்தை ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு இடிக்கும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது, சாலையில் நடந்து சென்று … Read more

வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஏன்? – உதயநிதி ஸ்டாலின் விளக்கம்

சேலம்: “நம்மை ஒரு சுய பரிசோதனை செய்து கொள்வதற்காக வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது” என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். மாவட்ட அளவிலான வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “முதல்வர் சேலம் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக … Read more

ஜம்மு காஷ்மீரில் பாதியில் நிறுத்தப்பட்ட ஒற்றுமை யாத்திரை: பாதுகாப்பில் குறைபாடு என காங். குற்றச்சாட்டு

ஸ்ரீநகர்: காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை யாத்திரை காஷ்மீர் வரை சென்றுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதற்கு பாதுகாப்பு ஏற்பாட்டில் இருந்த குறைபாடுதான் காரணம் என காங்கிரஸ் கட்சி தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை யாத்திரை அதன் இறுதி கட்டமான ஜம்முவை கடந்து வருகிறது. சிறிய இடைவெளிக்கு பிறகு யாத்திரை வெள்ளிக்கிழமை காலையில் பானிஹால் என்ற … Read more

இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: 9 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு

காசா: பாலஸ்தீனத்தின் மேற்கு கரைப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 9 பேர் பலியாகினர். பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் ஜெனின் அகதிகள் முகாமில் தீவிரவாதிகள் இருப்பதாகக் கூறி, இஸ்ரேல் படைகள் சோதனை நடத்தினர். சோதனையின்போது அங்கு வன்முறை வெடித்தது. இதில் இஸ்ரேல் நடத்திய தாக்குதில் பாலஸ்தீனர்கள் 9 பேர் பலியானதாகவும், பலர் காயமடைந்ததாகவும் பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இதனை பயங்காரவாதத்திற்கு எதிரான தாக்குதல் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஜெனின் முகாமில் நடத்திய தாக்குதலைத் … Read more

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளிப் பேருந்து ஏரியில் கவிழ்ந்து விபத்து: 22 மாணவர்கள் காயம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் உள்ள மவுன்ட் கார்மெல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பேருந்து, மாணவர்களுடன் பொற்படாக்குறிச்சியில் ஏரிக்கரை மீது செல்லும்போது ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 மாணவர்கள் காயமடைந்தனர். கள்ளக்குறிச்சி கச்சிராயப்பாளையம் சாலையில் கார்மெல் நகரில் உள்ள மவுன்ட் கார்மெல் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் வந்து செல்ல பள்ளி நிர்வாகம் சார்பில் பேருந்து இயக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று பள்ளி முடிந்து மாலை 40 மாணவர்களுடன் பொற்படாக்குறிச்சி நோக்கி சென்றுள்ளது. அப்போது வறண்ட நிலையில் இருந்த … Read more

Indus Battle Royale | பிளே ஸ்டோரில் முன்பதிவுக்கு வந்த கேம்: பப்ஜிக்கு மாற்று?

புனே: Indus Battle Royale எனும் புதிய ஆக்‌ஷன் கேம் இந்தியாவில் முன்பதிவுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பப்ஜி கேமுக்கு மாற்று என சொல்லப்படுகிறது. இந்தியாவை சேர்ந்த சூப்பர் கேமிங் எனும் நிறுவனம் இதை வடிவமைத்துள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த புதிய கேமின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. கடந்த 2020 வாக்கில் இந்தியாவில் பப்ஜி உட்பட பல்வேறு சீன செயலிகள் முடக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து கடந்த 2021-ல் ‘இந்திய பப்ஜி’ என சொல்லப்படும் Battlegrounds Mobile … Read more

திருப்பூரில் தமிழக தொழிலாளரை வடமாநில தொழிலாளர்கள் தாக்கிய சம்பவம்: போலீஸ் சொல்வது என்ன?

திருப்பூர்: திருப்பூரில் தமிழக பின்னலாடை தொழிலாளரை வடமாநிலத் தொழிலாளர்கள் துரத்தி தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், தீவிர விசாரணை மேற்கொண்டுள்ள திருப்பூர் போலீஸார், சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு பலத்த பாதுகாப்பு வழங்கியுள்ளனர். திருப்பூர் அனுப்பர்பாளையம் அருகே திலகர் நகரில் வடமாநில தொழிலாளர்கள், தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளரை தாக்கும் வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரலானது. இந்தச் சம்பவம் நடைபெற்ற பகுதியில் தமிழகத் தொழிலாளர்கள், தந்தை பெரியர் திராவிடர் கழகத்தினர், கட்டிங் தொழிலாளர்கள் சங்கத்தினர் உள்ளிட்ட ஏராளமான … Read more

தஞ்சையில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்: நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டம்

தஞ்சாவூர்: நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வலியுறுத்தி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் நெல்லை தரையில் கொட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்தாண்டு சம்பா, தாளடியில் சுமார் 3.43 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, சுமார் 40 ஆயிரம் ஏக்கரில் அறுவடைப் பணிகள் துவங்கி நடந்து வருகிறது. மேலும், மாவட்டத்தில் இதுவரை 358 அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு, 20,193 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. … Read more