உலகத் தரத்தில் செம்மொழிப் பூங்காவை மாற்ற திட்டம்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: செம்மொழி பூங்காவை லண்டனில் உள்ள ராயல் தாவரவியல் பூங்கா போலவும், துபாயில் உள்ள மிராகில் பூங்கா போலவும் உலகத் தரத்துக்கு மேம்படுத்த உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. சென்னை அண்ணா மேம்பாலத்தை ஒட்டியுள்ள கதீட்ரல் சாலையில் அரசுக்குச் சொந்தமான நிலத்தில் அதிமுக பிரமுகரான தோட்டக்கலை வி.கிருஷ்ணமூர்த்தி என்பவர், ‘தோட்டக்கலைச் சங்கம்’ என்ற ஒரு தனியார் அமைப்பை உருவாக்கி அந்த நிலத்தை பயன்படுத்தி வந்தார். இந்த நிலத்தை மீட்க கடந்த 1989-ம் ஆண்டு … Read more

'எதிர்க்கட்சித் தலைவர் பதவி வேண்டாம்; கட்சி பதவி கொடுங்கள்' – அஜித் பவார் திடீர் போர்க்கொடி

மும்பை: எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் ஆர்வம் இல்லை; அதனால் என்னை அதில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைமைக்கு அதன் மூத்த தலைவர் அஜித் பவார் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர், “மகாராஷ்ட்ரா சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும். மாறாக, கட்சியில் எதாவது பொறுப்பில் என்னை நியமிக்க வேண்டுகிறேன். எதிர்க்கட்சித் தலைவராக நான் சரியாக செயல்படவில்லை என்று சொல்லப்படுகிறது. சொல்லப்போனால் இந்த எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் எனக்கு … Read more

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வெற்றி பெறாது: கார்த்தி சிதம்பரம் கருத்து

சிவகங்கை: “மணிப்பூருக்குச் செல்ல விருப்பம் இல்லாததால் பிரதமர் மோடி அமெரிக்காவில் உள்ள மன்ஹாட்டானுக்கு சென்றுள்ளார்” என்று காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் சிவகங்கையில் புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “சிபிஐ விசாரணைக்கு ஒப்புதல் பெற தேவையில்லை என்பதை மாநில அரசுகள் வாபஸ் பெற்றாலும் பயனில்லை. வாபஸ் பெற்ற மேற்கு வங்கத்தில் சிபிஐ தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கு நீதிமன்றம் தான் தீர்வு கூற … Read more

“யோகா… காப்புரிமை, ராயல்டி ஏதுமற்ற இலவசமானது” – ஐ.நா. யோகா நிகழ்வில் பிரதமர் மோடி பேச்சு

ஐநா சபை: பதிப்புரிமை, காப்புரிமை, ராயல்டி ஆகியவை இன்றி யோகா இலவசமானது என ஐக்கிய நாடுகள் சபையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் சர்வதேச யோகா தினம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. ஐநா உயரதிகாரிகள், 180-க்கும் மேற்பட்ட நாடுகளின் தூதர்கள், கலைஞர்கள், கல்வியாளர்கள், தொழில்முனைவோர், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: “உங்கள் அனைவரையும் பார்த்ததில் மகிழ்ச்சியடைகிறேன். வருகை தந்த … Read more

தமிழகத்தில் ரூ.10 லட்சம் – ரூ.10 கோடி ஆண்டு வருவாய் வரும் கோயில்களின் எண்ணிக்கை 578 ஆக உயர்வு: சேகர்பாபு தகவல்

சென்னை: “தமிழகத்தில் ரூ.10 லட்சத்துக்கு மேல் ரூ.10 கோடி வரை ஆண்டு வருமானம் வரும் திருக்கோயில்களின் எண்ணிக்கை 316-லிருந்து 578 திருக்கோயில்களாக உயர்ந்துள்ளன” என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் புதன்கிழமை (ஜூன் 21) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு செல்வதற்கு மாற்றுப்பாதை அமைக்கும் பணிகள் மற்றும் பெருந்திட்ட பணிகள் (Master Plan) குறித்து … Read more

“குழந்தைகள் எதிர்காலத்துக்காக அமைதியை நோக்கி…” – மணிப்பூர் மக்களுக்கு சோனியா காந்தி வேண்டுகோள்

புதுடெல்லி: அமைதியை நோக்கிய நமது தெரிவு என்பது குழந்தைகளின் மரபுரிமையான எதிர்காலத்தை வடிவமைக்க உதவும் என்றும், மணிப்பூரில் அமைதியும் நல்லிணக்கமும் வேண்டும் என்றும் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், அக்கட்சின் நாடாளுமன்றத் தலைவருமான சோனியா காந்தி மணிப்பூர் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் அவர் கூறியிருப்பது: “மணிப்பூர் மாநில சகோதர சகோதரிகளே… சுமார் 50 நாட்களாக மணிப்பூரில் நடந்துவரும் … Read more

கரூரில் வருமான வரித் துறை அதிகாரிகளை தாக்கிய 19 பேரின் ஜாமீன், முன்ஜாமீனுக்கு எதிராக வழக்கு

மதுரை: கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி சகோதரர் வீட்டில் சோதனை நடத்த சென்ற வருமானத் துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில் 19 பேரில் ஜாமீன், முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கில் கரூர் காவல் ஆய்வாளர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வருமான வரித் துறை உதவி இயக்குனர் கிருஷ்ணகாந்த், துணை இயக்குனர் யோக பிரியங்கா, ஆய்வாளர்கள் ஸ்ரீனிவாசராவ் மற்றும் காயத்ரி ஆகியோர் தாக்கல் செய்த மனு: “கரூரில் தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜியின் … Read more

“கடவுளுக்குச் சமமானவர் விருந்தினர் என்பதே இந்திய சுற்றுலாவின் அடிப்படை” – பிரதமர் மோடி

புதுடெல்லி: விருந்தினர் என்பவர் கடவுளுக்குச் சமம் என்பதே இந்திய சுற்றுலாவின் அடிப்படை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். கோவாவில் இன்று நடைபெற்ற ஜி20 சுற்றுலாத் துறை அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பதிவு செய்யப்பட்ட காணொளி உரை ஒளிபரப்பப்பட்டது. அதில் அவர் கூறி இருப்பதாவது: “சுற்றுலாவுக்கான இந்தியாவின் அணுகுமுறை பழங்கால சமஸ்கிருத வசனமான ‘அதிதி தேவோ பவ’ அதாவது ‘விருந்தினர் கடவுளுக்குச் சமம்’ என்பதை அடிப்படையாகக் கொண்டது. சுற்றுலா என்பது சுற்றிப் பார்ப்பது மட்டுமல்ல, … Read more

“தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி” – ராஜ்நாத் சிங்குக்கு ஜெயக்குமார் பதில்

சென்னை: “தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலாக இருந்தாலும் சரி, மக்களவைத் தேர்தலாக இருந்தாலும் சரி, அதிமுக தலைமையில்தான் கூட்டணி. அதிமுகதான் கூட்டணிக் கட்சிகளுக்கான இடங்களை ஒதுக்கும்” என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசினார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்பட்டுத்த தவறியதாக தமிழக அரசைக் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட … Read more

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு யோகா செய்யும் படத்தை ட்வீட் செய்த காங்கிரஸ் கட்சி

புதுடெல்லி: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு யோகா செய்யும் படத்தை காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. அறிவித்ததை அடுத்து 9-வது ஆண்டாக இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு யோகா செய்யும் படத்தை காங்கிரஸ் கட்சி … Read more