மத்திய அரசின் தோல்விகளை சுட்டிக் காட்டி – வீடு வீடாக கடிதம் அளிக்கிறது காங்கிரஸ்

புதுடெல்லி: மத்திய அரசின் தோல்விகளை சுட்டிக் காட்டி வீடு, வீடாக கடிதம் அளிக்கும் புதிய பிரச்சாரத்தை காங்கிரஸ் தொடங்கியுள்ளது. காங்கிரஸை வலுப்படுத்த அந்த கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் பாரத ஒற்றுமை பேரணியை தொடங்கினார். இதன் ஒரு பகுதியாக மத்திய அரசின் தோல்விகளை சுட்டிக் காட்டி வீடு வீடாக கடிதம் அளிக்கும் இயக்கத்தை காங்கிரஸ் நேற்று தொடங்கியது. இதுகுறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் கூறும்போது, “குடியரசு தின நாளில் … Read more

கோயில் அறங்காவலர் நியமன விண்ணப்பங்களில் அரசியல் சார்பு குறித்த கேள்வி சேர்ப்பு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: கோயில் அறங்காவலர் நியமனவிண்ணப்பங்களில் அரசியல் சார்பு குறித்த கேள்வி சேர்க்கப்பட்டு விட்டதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கோயில்களில் அறங்காவலர்களை முறையாக நியமனம் செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்குகள் மீதான விசாரணை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில்அறங்காவலர் நியமன விண்ணப்பங்களில் அரசியல் சார்பு குறித்தகேள்வி சேர்க்கப்பட்டு விட்டதாகவும், இதுதொடர்பாக நாளிதழ்களில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட் டது. மேலும் அறங்காவலர் பணிக்கான விண்ணப்பங்களை … Read more

‘மிஷன் 2024’ திட்டத்தில் முஸ்லிம் வாக்குகளை குறிவைக்கும் பாஜக

புதுடெல்லி: அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்காக ‘மிஷன் 2024’ என்ற திட்டத்தை பாஜக வகுத்துள்ளது. இதில், முஸ்லிம் வாக்குகளுக்கு குறி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2014-ல் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை முன்னிறுத்தி பாஜக ஆட்சியை பிடித்தது. 2019 தேர்தலிலும் தொடர்ந்த மோடி அலையால் கூடுதல் தொகுதிகள் கிடைத்தன. இதைவிட அதிக தொகுதிகள் பெற்று வரும் 2024-ல்பிரதமர் மோடி தலைமையில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கபாஜக வியூகம் வகுத்துள்ளது. ‘மிஷன் 2024’ என்ற பெயரிலான இந்த திட்டத்தில் இதுவரை … Read more

குடியரசு தின விழாவில் சாதனையாளர்களுக்கு பதக்கங்கள், விருதுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில் காந்தியடிகள், அண்ணா பதக்கங்கள், கோட்டை அமீர் விருதுஉள்ளிட்ட விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று வீரதீர செயல்கள் புரிந்த அரசு ஊழியர்கள், பொதுமக்களுக்கு வீரதீர செயல்களுக்கான அண்ணா பதக்கமும், ரூ.1 லட்சம் பரிசும் வழங்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டும் சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே நேற்று நடந்த குடியரசு தின விழாவில் அண்ணா பதக்கங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அரசு ஊழியர் பிரிவில் … Read more

கர்நாடகாவை சேர்ந்த 8 பேருக்கு பத்ம விருது – சட்டப்பேரவை தேர்தல் காரணமா?

பெங்களூரு: மத்திய அரசு நேற்று முன்தினம் பத்ம விருதுகளை அறிவித்தது. இதில் அதிகபட்சமாக, பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் 8 பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கர்நாடகாவில் பாஜகவை சேர்ந்த மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு (90) பொதுசேவைக்காக பத்ம விபூஷண் விருதுஅறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸில் இருந்து விலகி கடந்த 2017-ல் பாஜகவில் இணைந்த இவருக்கு போதிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. இதனால் பாஜகவின் மீது அதிருப்தி அடைந்த எஸ்.எம்.கிருஷ்ணா அண்மையில் தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக தேர்தல் பணிக்குழு அறிவிப்பு

சென்னை/ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி தேர்தலையொட்டி, முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் தேர்தல் பணிக்குழுவை அமைத்து அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப். 27-ம் தேதி நடைபெறுகிறது. திமுக கூட்டணியில், காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில், 100-க்கும் மேற்பட்டோர் கொண்ட தேர்தல் பணிக் குழுவை அமைத்து அதிமுக இடைக்காலப் … Read more

குடியரசு தின விழாவில் தெலங்கானா முதல்வர் பங்கேற்கவில்லை – ராஜ்பவனில் ஆளுநர் தமிழிசை தேசிய கொடியேற்றினார்

ஹைதராபாத்: குடியரசு தினத்தையொட்டி தெலங்கானாவில் ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், ராஜ்பவன் வளாகத்தில் நேற்று தேசிய கொடியேற்றினார். இதில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மாநில அமைச்சர்கள் பங்கேற்கவில்லை. மாநில அரசு சார்பில் தலைமைச் செயலாளரும், டிஜிபியும் கலந்து கொண்டனர். தெலங்கானாவில் ஆளுநருக்கும் – மாநில முதல்வருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்துவருகிறது. குடியரசு தின விழாவிலும் இந்த மோதல் எதிரொலித்தது. கரோனாவை காரணம் காட்டி, இந்த ஆண்டும் குடியரசு தின விழா ரத்து செய்யப்படுவதாக தெலங்கானா அரசு … Read more

தமிழகத்தை சேர்ந்த 6 பேருக்கு பத்ம விருதுகள் – முதல்வர், அரசியல் தலைவர்கள் வாழ்த்து

சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 6 பேருக்கு முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 2023-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன. மொத்தம் 106 பேர் அடங்கிய பட்டியலில் 6 பேருக்கு பத்ம விபூஷண், 9 பேருக்கு பத்ம பூஷண் மற்றும் 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், தமிழகத்தைச் சேர்ந்த 6 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாணி ஜெயராம்: அதன்படி, தமிழகத்தைச் … Read more

கோவிஷீல்டு செலுத்தியவர்களுக்கு 2-வது டோஸ் கோவாக்சின் செலுத்த அனுமதி இல்லை – நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: முதல் டோஸ் கோவிஷீல்டு செலுத்திக் கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் கோவாக்சின் செலுத்த அனுமதி இல்லை என டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மதுர் மிட்டல் கடந்த 2021-ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், “முதல் டோஸ் கோவிஷீல்டு கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டேன். இதனால் பல்வேறு பின்விளைவுகள் ஏற்பட்டன. எனவே, 2-வது டோஸ் கோவாக்சின் செலுத்திக் கொள்ள அனுமதிக்குமாறு உத்தரவிட … Read more

எழும்பூர் உள்ளிட்ட 9 ரயில் நிலையங்கள் விமான நிலையங்களுக்கு இணையாக தரம் உயர்த்தப்படும் – தெற்கு ரயில்வே பொதுமேலாளர் உறுதி

சென்னை: சென்னை எழும்பூர், காட்பாடி, புதுச்சேரி, மதுரை, ராமேசுவரம், கன்னியாகுமரி, எர்ணாகுளம் சந்திப்பு, கொல்லம், எர்ணாகுளம் டவுன் ஆகிய 9 ரயில் நிலையங்கள், விமான நிலையங்களின் தரத்துக்கு இணையாக மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார். சென்னை பெரம்பூர் ரயில்வே மைதானத்தில் நடைபெற்ற 74-வது குடியரசு தின விழாவில் தேசியக் கொடியேற்றிவைத்து, பொது மேலாளர் ஆர்.என்.சிங் பேசியதாவது: தெற்கு ரயில்வே நடப்பு நிதியாண்டில், அனைத்துத் துறைகளிலும் ஆரோக்கியமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. அதேபோல, … Read more