காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 527 வாகனங்கள்: ரூ.1.40 கோடிக்கு பொது ஏலத்தில் விற்பனை

சென்னை: சென்னை பெருநகர காவலில் பயன்படுத்தப்பட்டு, கழிவு செய்யப்பட்ட 554 வாகனங்கள் கடந்த 2022-ம் ஆண்டு 3 தவணைகளாக பொது ஏலத்திற்கு விடப்பட்டது. இதில் மொத்தம் 527 வாகனங்கள் ரூ.1,40,93,941 தொகைக்கு பொது ஏலத்தில் விற்கப்பட்டது என்று காவல் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து காவல் துறை வெளியிடப்பட்டுள்ள செய்தி. சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு, அரசு மோட்டார் வாகன அதிகாரிகள் பரிந்துரையின்பேரில், கழிவு செய்யப்பட்ட அரசு … Read more

பேராவூரணி அருகே கிராம சபை கூட்டத்திலிருந்து அடிப்படை வசதி கோரி மக்கள் வெளிநடப்பு

தஞ்சாவூர்: போரவூரணி அருகே குறிச்சி ஊராட்சியில் அடிப்படை வசதி இல்லை எனக் கோரி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் உள்ளிட்ட கிராமத்தினர் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஊராட்சிக்குட்பட்ட குறிச்சி ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு, கிராம சபை கூட்டம், பேராவூரணி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.வீரமணி முன்னிலையில் நடைபெற்றது. இதில், ஊராட்சி மன்றத் தலைவி கே.வைரக்கண்ணு, துணைத் தலைவர் சின்னையன், ஊராட்சி செயலர் எஸ்.பாலசுந்தரம் உள்ளிட்டோர் … Read more

மூக்கு வழியாக செலுத்தும் கரோனா மருந்து – மத்திய அமைச்சர்கள் அறிமுகம்

புதுடெல்லி: மூக்கு வழியாக செலுத்தப்படும், உலகின் முதல் கரோனா தடுப்பு மருந்தை, மத்திய அமைச்சர்கள் மன்சுக் மாண்டவியா, ஜிதேந்திர சிங் ஆகியோர் டெல்லியில் நேற்று அறிமுகம் செய்துவைத்தனர். தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பாரத் பயோடெக் நிறுவனம், கோவேக்சின் என்ற பெயரிலான கரோனா தடுப்பூசியை தயாரித்தது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசி, கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்களுக்கு போடப்பட்டது. தற்போது பூஸ்டர் தடுப்பூசியாகவும் இது போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாரத் … Read more

கரூர் | குடியரசு தின விழாவில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு கேடயம் – வருவாய் ஈட்டும் பணியை சிறப்பாக செய்ததாக பாராட்டு

கரூர்: குடியரசு தின விழாவில் டாஸ்மாக் டிஎம் உள்ளிட்ட 4 பேருக்கு பாராட்டு சான்றிதழ், கேடயம் வழங்கியது சர்ச்சையையும், சமூக வலைத்தளங்களில் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் 74வது குடியரசு தின விழா கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றிவைத்து காவல்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள், பணியாளர்களுக்கு கேடயமும், பாராட்டு சான்றிதழும் வழங்கினார். இதில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சண்முக … Read more

ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் பங்கேற்பு

சென்னை: குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். நாடு முழுவதும் குடியரசு தின விழா இன்று (ஜன.26) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசியக்கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். குடியரசு தின விழாவை முன்னிட்டு முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகளுக்கு ஆளுநர் மாளிகையில், ஆளுநர் தேநீர் விருந்து கொடுப்பது வழக்கம். … Read more

தமிழக தொழிலாளரை விரட்டி அடிக்கும் வடமாநிலத் தொழிலாளர்கள் – வைரல் வீடியோ குறித்து திருப்பூர் போலீஸார் விசாரணை

திருப்பூர்: திருப்பூர் மாநகர் வேலம்பாளையம் திலகர் நகரில் தமிழக பின்னலாடை தொழிலாளரை வடமாநிலத் தொழிலாளர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் துரத்தி தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. திருப்பூர் மாநகரத்துக்கு உட்பட்ட அனுப்பர்பாளையம், ஆத்துப்பளையம், திருமுருகன்பூண்டி, வேலம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 2000-த்துக்கும் மேற்பட்ட பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த பனியன் நிறுவனங்களில் ஒடிசா, ஜார்கண்ட், பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள், பணி செய்து வருகின்றனர். தமிழர்களை விட, வடமாநிலத் … Read more

மேம்பால பணி: சென்னை தி.நகர் தெற்கு உஸ்மான் சாலையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: மேம்பால கட்டுமான பணி காரணமாக தி.நகர் தெற்கு உஸ்மான் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் தெற்கு உஸ்மான் மேம்பாலத்தில் இருந்து அண்ணாசாலை சி.ஐ.டி 1வது மெயின் ரோடு வரை மேம்பாலம் கட்டுமான பணிகள் மேற்கொள்ள உள்ளதால், தெற்கு உஸ்மான் சாலை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வரும் 28ம் தேதி முதல் செப்டம்பர் 27 வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகின்றது. இதன் விவரம்.. தெற்கு உஸ்மான் … Read more

கும்பகோணத்தில் கட்டப்படும் திமுக மாவட்ட அலுவலகத்திற்குள் நுழைய நீதிமன்றம் தடை

கும்பகோணம்: கும்பகோணத்தில் கட்டப்படும் திமுக மாவட்ட அலுவலகத்திற்குள் பிப்ரவரி 2 வரை யாரும் நுழையக் கூடாது என நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. திருவாரூர் மாவட்டம், வலங்கைமான், கீழத்தெருவைச் சேர்ந்தவர் ராசு மகன் செல்வம் (54). இவருக்கு கும்பகோணம் புதிய ரயில் நிலையம் சாலையில் சொந்தமாக மனை உள்ளது. இந்த மனையின் வடபுறத்தில் திமுகவிற்கு சொந்தமான இடத்தில் மாவட்ட அலுவலகம் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், திமுக மாவட்டச் செயலாளர் எஸ்.கல்யாணசுந்தரம் மற்றும் சிலர், இவரது சுற்றுச்சுவரை இடித்து … Read more

ஹீமோபிலியா மருந்து குறைந்த விலையில் கிடைக்க உதவ வேண்டும் – பத்மஸ்ரீ விருது பெறும் டாக்டர் நளினி கோரிக்கை

புதுச்சேரி: அதிக விலையால் நோயாளிகள் தவிப்பதால் ஹீமோபிலியா (Haemophilia) நோய்க்கான மருந்தை குறைந்த விலையில் தாராளமாக கிடைக்க பிரதமர் மோடி உதவ வேண்டும் என பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட டாக்டர் நளினி கோரிக்கை வைத்துள்ளார். மருத்துவத்துறையில் சேவையாற்றியதற்கு புதுச்சேரியைச் சேர்ந்த நளினி பார்த்தசாரதிக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நளினி பார்த்தசாரதி, “புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் பயின்று அங்கேயே குழந்தைகள் நல மருத்துவராக பணியை தொடங்கினேன். குழந்தைகளுக்கு ஹீமோபிலியா நோய் … Read more

சூரத் | கார் ஷோரூமில் பயங்கர தீ விபத்து: தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர்

சூரத்: குஜராத் மாநிலம் சூரத் நகரில் அமைந்துள்ள கார் ஷோரூம் ஒன்றில் அதிபயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரத் நகரில் உள்ள உத்னா பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இரவு நேரத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டிருந்தாலும், அதனால் ஏற்பட்டுள்ள புகை மூட்டம் மிகத் தீவிரமாக இருப்பதை பார்க்க இது குறித்த வீடியோவில் தெளிவாக பார்க்க முடிகிறது. இந்த விபத்து குறித்து செய்தி முகமை ஒன்றில் … Read more