மணிப்பூர் கலவரத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் – பிரதமருக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

புதுடெல்லி: பிரதமர் மோடி தலையிட்டு, மணிப்பூர் கலவரத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று மாநில முன்னாள் முதல்வர், சட்டப்பேரவை முன்னாள் தலைவர்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் 10 பேர் வலியுறுத்தியுள்ளனர். மணிப்பூர் கலவரம் தொடர்பாக, பிரதமர் மோடியை சந்தித்து பேச, மணிப்பூர் முன்னாள் முதல்வர் இபோபி சிங், ஜக்கிய ஜனதாதளம், திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள், பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு, பிரதமர் அலுவலகத்தில் கடந்த 10-ம் … Read more

அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி – இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு

நியூயார்க்: பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றடைந்தார். நியூயார்க்கில் அவருக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். நியூயார்க் விமான நிலையத்தில் தரையிறங்கியதும், ‘மோடி, மோடி’ என கோஷம் எழுப்பி அவரை இந்திய வம்சாவளியினர் வரவேற்றனர். கைகளில் தேசியக் கொடியுடன் ஏந்தியபடி, சென்ற அவர்கள் பிரதமருடன் கைகுலுக்குவதில் ஆர்வம் செலுத்தினர். இதேபோல், பிரதமர் மோடி தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வெளியேயும் இந்திய வம்சாவளியினர் பலர் அவரை வரவேற்க காத்திருந்தனர். இதை அறிந்த பிரதமர், ஹோட்டல் … Read more

ஆம்பூர் | சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாலம் பணிகள் – மத்திய இணையமைச்சர் வி.கே.சிங் நேரில் ஆய்வு

ஆம்பூர்: ஆம்பூரில் ரூ.130 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் மற்றும் உயர் மட்ட மேம்பாலம் கட்டுமான பணிகளை மத்திய இணையமைச்சர் வி.கே.சிங் நேற்று (20-ம் தேதி) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் சென்னை – பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலை ரூ.130 கோடி செலவில் 6 வழி சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னை – பெங்களூரு இடையில் நகர பகுதிக்குள் தேசிய நெடுஞ்சாலை செல்லும் … Read more

அனல் காற்று | உ.பி, பிஹார் மாநிலங்களுக்கு சுகாதார நிபுணர்கள் அனுப்பி வைக்கப்படுவர் – மத்திய அமைச்சர் அறிவிப்பு

புதுடெல்லி: அனல் காற்று வாட்டி வதைத்து வரும் உத்தரபிரதேசம், பிஹார் ஆகிய மாநிலங்களில் சுகாதார நிபுணர்கள் அனுப்பி வைக்கப்படுவர் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். உத்தரபிரதேசம், பிஹார் ஆகிய மாநிலங்களில் கடந்த 2 மாதங்களாக கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல் மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் அனல் காற்றும் வீசி வருகிறது. இந்த 2 மாநிலங்களில் சுமார் 100 பேர் அனல் காற்றின் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அதிக வெயில், அனல் … Read more

ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்கை சந்திக்கிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி: அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மோடி அங்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த 24-க்கும் மேற்பட்ட தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில், அவர் ட்விட்டர் உரிமையாளரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான எலான் மஸ்கையும் சந்தித்துப் பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மஸ்க் ட்விட்டரை வாங்கிய பிறகு நடைபெறும் முதல் சந்திப்பு இது ஆகும். முன்னதாக, கடந்த 2015-ல் கலிபோர்னியாவில் உள்ள டெஸ்லா மோட்டார்ஸ் ஆலைக்கு சென்றிருந்தபோது பிரதமர் மோடி மஸ்கை சந்தித்திருந்தார். … Read more

பக்ரீத் பண்டிகையொட்டி திருப்புவனத்தில் களை கட்டிய ஆட்டுச் சந்தை – ரூ.1 கோடிக்கு மேல் விற்பனை

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் பக்ரீத் பண்டிகையொட்டி ஆட்டுச் சந்தை களை கட்டியது. இதில் ரூ.1 கோடி மேல் ஆடுகள் விற்பனையானது. திருப்புவனத்தில் வாரந்தோறும் செவ்வாய்கிழமை ஆட்டுச் சந்தை நடக்கிறது. அதன்படி நேற்று அதிகாலையில் நடைபெற்ற சந்தையில் மதுரை, திருச்சி, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளாடு, செம்மறி ஆடு என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்தன. ஆடுகளை வாங்க, உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். மேலும் … Read more

சத்தீஸ்கர் கேடர் ஐபிஎஸ் அதிகாரி – உளவு அமைப்பு தலைவராக ரவி சின்ஹா நியமனம்

புதுடெல்லி: ரவி சின்ஹாஇந்தியாவின் வெளி உளவு அமைப்பான ரா-வின் (RAW) அடுத்த தலைவராக சத்தீஸ்கர் கேடர் ஐபிஎஸ் அதிகாரி ரவி சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். ரா அமைப்பின் தற்போதைய தலைவராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி சமந்த் குமார் கோயல் பதவி வகிக்கிறார். அவரது பதவிக் காலம் வரும் 30-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் ‘ரா’ அமைப்பின் அடுத்த தலைவராக 1988-ம் ஆண்டு பேட்ச், சத்தீஸ்கர் கேடர் ஐபிஎஸ் அதிகாரியான ரவி சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். ரவி சின்ஹா தற்போது அமைச்சரவை … Read more

காரைக்குடி | தந்தை செல்போனை பறித்துக் கொண்டதால் மாடியில் இருந்து குதிக்க முயன்ற மாணவி – காப்பாற்றிய பெண் எஸ்ஐ

காரைக்குடி: காரைக்குடியில் தந்தை செல்போனை பறித்துகொண்டதால் மாடியில் இருந்து குதித்த மாணவியை பெண் சிறப்பு எஸ்ஐ காப்பாற்றினார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கலைஞர் சாலையில் ஆட்டோ ஓட்டுநர் ரவிச்சந்திரன் தனது குடும்பத்தினருடன் வாடகைக்கு மாடி வீட்டில் குடியிருந்து வருகிறார். அவரது மகள் காவியா ஸ்ரீ இந்தாண்டு பிளஸ் 2 முடித்துவிட்டு கல்லூரிக்குச் செல்ல உள்ளார். இந்நிலையில் அதிக நேரம் மொபைல் பயன்படுத்தி வந்த காவியா ஸ்ரீயை, தந்தை ரவிச்சந்திரன் கண்டித்து, மொபைலையும் பறித்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் … Read more

ரூ.8.49 கோடியை கொள்ளையடித்துவிட்டு தப்பிய தம்பதி – குருத்வாராவில் இலவச பழச்சாறு வாங்கிய போது சிக்கினர்

டேராடூன்: பஞ்சாப் மாநிலம் லூதியாணா மாவட்டத்தில் உள்ள நிதி நிறுவனத்துக்குள் கடந்த 10-ம் தேதி பட்டப்பகலிலேயே துப்பாக்கிகளுடன் நுழைந்த ஒரு கும்பல் அங்கிருந்தவர்களை மிரட்டி ரூ.8.49 கோடி பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றது. இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் கண்டறிய போலீஸார் தனிப்படை அமைத்தனர்.தீவிர விசாரணைக்குப் பின்னர் கொள்ளையில் தொடர்புடைய 7 பேரை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மந்தீப்கவுர் என்ற பெண்ணும் அவரது கணவர் ஜஸ்வீந்தர் சிங்கும் முக்கிய குற்றவாளிகள் என … Read more

ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் அனுப்பும் அதிகாரம் ஊராட்சி தலைவருக்கு இல்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: ஆக்கிரமிப்பு அகற்ற நோட்டீஸ் அனுப்ப ஊராட்சித் தலைவர்களுக்கு அதிகாரம் இல்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை இலங்கியேந்தலைச் சேர்ந்த யோகராஜன் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: புது தாமரைபட்டி அருகே உள்ள இலங்கையேந்தலில் தான் வசித்து வீட்டை ஆக்கிரமிப்பு என்று கூறி, ஆக்கிரமப்பை அகற்றுமாறு ஊராட்சித் தலைவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அவரது நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும்” எனக் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணி, எல்.விக்டோரிய கவுரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. … Read more