உலகில் தனக்கான சரியான இடத்தை நோக்கி இந்தியா நகர்கிறது: பிரதமர் மோடி

புதுடெல்லி: மிக உயர்ந்த தகுதியுடன் இருக்கும் இந்தியா, உலகில் தனக்கான சரியான இடம் எதுவோ, அதை நோக்கி நகர்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்கா செல்வதற்கு முன்பு ‘தி வால் ஸ்ட்ரீட் ஜார்னல்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடி கூறியது: “அமெரிக்க மற்றும் இந்திய தலைவர்களுக்கு இடையே முன்னெப்போதும் இல்லாத நம்பிக்கை உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு முன்னெப்போதையும் விட வலுவாகவும் ஆழமாகவும் இருக்கிறது. உலகில் தனக்கான இடம் எதுவோ அதை … Read more

அரசாணை வெளியிடப்பட்டு 14 ஆண்டுகள் ஆகியும் பெரம்பலூரில் நிறைவேறாத அரசு மருத்துவக் கல்லூரி கனவு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கும் திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என சமூக ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என 3.2.2009 அன்று அப்போதைய திமுக ஆட்சிக்காலத்தில் அரசாணை வெளியிடப்பட்டது. இதற்காக ஒதியம் கிராமத்தில் 30.28 ஏக்கர் நிலம் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா குடும்பத்தினர் நிர்வகித்து வரும் ஆண்டிமுத்து- சின்னப்பிள்ளை அறக்கட்டளை சார்பில் தானமாக அரசுக்கு வழங்கப்பட்டது. பின்னர் 4.2.2010 அன்று பெரம்பலூரில் … Read more

“டெல்லியில் 24 மணி நேரத்தில் 4 கொலைகள்… முற்றிலும் பொறுப்பே இல்லை” – ஆளுநருக்கு முதல்வர் கேஜ்ரிவால் கடிதம்

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் குற்றச் செயல்கள் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்து முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், அம்மாநில துணைநிலை ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், டெல்லி மக்களின் பாதுகாப்பு, அதுகுறித்த நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கு உரிய பயனுள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவுக்கு முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் எழுதியுள்ள கடிதத்தில், “டெல்லியின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 4 கொலைகள் நடந்துள்ளன. இதுபோன்ற தீவிர குற்றச் … Read more

வானிலை முன்னறிவிப்பு | தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். … Read more

மணிப்பூர் வன்முறை | ராணுவத்தை அனுப்பக்கோரும் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநில குகி பழங்குடியினரை பாதுகாக்க ராணுவத்தை அனுப்பக்கோரும் மனுவினை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுப்பு தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள மணிப்பூர் பழங்குடினர் அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த் மற்றும் எம்எம் சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் காலின் கோன்சல்வ்ஸ், “உச்ச … Read more

செல்போன்களின் பேட்டரியை பயனர்களே எளிதில் மாற்ற வழிசெய்யும் ஐரோப்பிய யூனியனின் புதிய விதி

போன்களின் பேட்டரியை இனி பயனர்களே எளிதில் மாற்றும் வகையிலான புதிய விதிக்கு ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்பெல்லாம் கைபேசியை பயன்படுத்தும் பயனர்கள் மிக எளிதில் அதன் பேட்டரியை மாற்றிவிட முடியும். கைபேசியின் பின்பக்கத்தை திறந்தாலே பேட்டரியை கழற்றி மாற்றி விடலாம். அது ஒரு காலம். ஆனால், இப்போது அப்படி இல்லை. பயனர்கள் தங்கள் கைபேசியில் பேட்டரியை மாற்றுவது மிகவும் சவாலான காரியம். இந்நிலையில், அதற்கு தீர்வு காணும் வகையில் புதிய … Read more

தினமும் 50 பேருக்கு மட்டுமே ரத்த பரிசோதனை – நோயாளிகளை ‘சோதிக்கும்’ பெரம்பூர் ரயில்வே மருத்துவமனை

சென்னை: தெற்கு ரயில்வே தலைமை மருத்துவமனை சென்னை பெரம்பூரில் அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் ரயில்வே ஊழியர்கள், ஓய்வு பெற்றோர், அவர்களின் குடும்பத்தினர் உள்நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுமக்களும் சிகிச்சை பெறுகின்றனர். ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த மருத்துவமனையில் அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய இடவசதி இல்லாததால், அதே பகுதியில் புதிய மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. அங்குள்ள புறநோயாளிகள் பிரிவு கட்டிடத்தில் ரத்த பரிசோதனை மையம் உள்ளது. இங்கு வரும் நோயாளிகள் … Read more

உ.பி. கோரக்பூர் கீதா பதிப்பகத்துக்கு 2021-ம் ஆண்டுக்கான காந்தி அமைதி பரிசு

புதுடெல்லி: கடந்த 1995-ம் ஆண்டு மகாத்மா காந்தியின் 125-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, சர்வதேச காந்தி அமைதி விருது மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.1 கோடி ரொக்கம், பாராட்டு சான்றிதழ் ஆகியவை அடங்கிய இந்த விருது, அகிம்சை உள்ளிட்ட காந்திய வழியில் பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த 2021-ம் ஆண்டுக்கான காந்தி அமைதி பரிசு, உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள கீதா … Read more

டாஸ்மாக்கில் இலக்கு நிர்ணயிக்கப்படுவது எதற்காக? – அமைச்சர் முத்துசாமி புது விளக்கம்

ஈரோடு: மது குடிப்பவர்களால் கிடைக்கும் வருவாய், கள்ளச் சாராய வியாபாரிகளுக்கு போய்விடக் கூடாது என்பதற்காகத்தான், டாஸ்மாக்கில் மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது என வீட்டுவசதி மற்றும் மது விலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார். ஈரோட்டில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என ஏற்கெனவே ஆய்வு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. நான் இன்னும் அதுகுறித்து ஆய்வு செய்யவில்லை. அடுத்த 15 நாட்களில், டாஸ்மாக் கடைகளை மூட எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து தகவல் … Read more

ஒடிசா | ஒரு கிலோ ரூ. 2.5 லட்சத்துக்கு விற்பனையாகும் விலை உயர்ந்த மாம்பழங்கள் திருடுபோயின

நுவாபாடா: ஒரு கிலோ ரூ. 2.5 லட்சத்துக்கு விற்பனையாகும் விலை உயர்ந்த மாம்பழங்கள் ஒடிசா மாநிலத்தில் திருடுபோயுள்ளன. ஒடிசாவின் நுவாபாடா மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமி நாராயணன் என்பவர், தனது விவசாய தோட்டத்தில் சுமார் 38 வகையிலான மாம்பழ ரகங்களை சாகுபடி செய்துள்ளார். அவற்றின் மதிப்பு குறித்து நன்கு அறிந்த அவர், அது குறித்த தகவலையும், மாம்பழங்களின் புகைப்படங்களையும் சமூக வலைதளங்கள் மூலம் வெளியிட்டார். இதில் விலை உயர்ந்த மாம்பழ ரகமும் அடங்கும். Source link