கர்நாடகாவில் பதான் படத்துக்கு எதிர்ப்பு – போராட்டம் நடத்திய 35 பேர் கைது

பெங்களூரு: பாலிவுட் நடிகர் ஷாருக் கான், தீபிகா படுகோனே நடித்த பதான் திரைப்படம் நேற்று வெளியானது. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள பேஷாராம் ரங் பாடலில் தீபிகா படுகோனே காவி நிற உடை அணிந்து நடனம் ஆடியதால் அண்மையில் சர்ச்சை ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று கர்நாடகாவில் மங்களூரு, பெலகாவி, கல்புர்கி ஆகிய இடங்களில் பதான் படத்தை திரையிட்ட திரையரங்குகளை இந்துத்துவ அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மங்களூருவில் பஜ்ரங்தள அமைப்பினர் பாரத் திரையரங்கில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர், பேனர் ஆகியவற்றை … Read more

“ஒன்று கூடுவோம்” – நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் பதில்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதற்கு “ஒன்று கூடுவோம்” என்று கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரும், கட்சியின் மூத்த நிர்வாகியுமான ஈவிகேஎஸ் இளங்கோவன், கடந்த திங்கட்கிழமை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரினார். இந்நிலையில், … Read more

ஆக.15-ம் தேதி முதல் தமிழ் உள்ளிட்ட 4 மொழிகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் தமிழ் உள்ளிட்ட 4 பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அறிவித்துள்ளார். டெல்லி உயர் நீதிமன்றத்தின் கணினிமயமாக்கப்பட்ட கோப்புகளை ஆய்வு செய்ய அனுமதிக்க வகை செய்யும், இணையவழி ஆய்வு மென்பொருள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசியதாவது: ஆங்கிலத்தில் வெளியாகும் தீர்ப்புகளை 99.9% மக்களால் எளிதாக … Read more

அறங்காவலர் பணிக்கான விண்ணப்பங்களை பிப்.8-க்குள் இணையதளங்களில் வெளியிட ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கோயில்களில் அறங்காவலர்கள் பணிக்கான விண்ணப்பங்களில் அரசியல் சார்பு குறித்த கேள்வி சேர்க்கப்பட்டு விட்டதாக, இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் மீதான விசாரணை, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வருகிறது. கடந்தமுறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அறங்காவலர் நியமனத்துக்கான விண்ணப்பங்களில், விண்ணப்பதாரரின் அரசியல் தொடர்பு … Read more

ஈரோடு கிழக்குத் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் தான் உண்மையான வேட்பாளர் – ஈவிகேஎஸ் இளங்கோவன் பேச்சு

ஈரோடு: ‘ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளராக நான் அறிவிக்கப்பட்டு இருந்தாலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் உண்மையான வேட்பாளர்’ என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார். ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மறைவையடுத்து, பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இத்தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். கடந்த 21-ம் தேதி அமாவாசை நாளன்று திமுக அமைச்சர்கள் கே.என்.நேரு, சு.முத்துசாமி ஆகியோர், ஈரோடு கிழக்குத் தொகுதியில் வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு … Read more

ரூ.100 கோடி வரி பாக்கி வைத்துள்ள நிறுவனங்களுக்கு ‘சீல்’ – மதுரை மாநகராட்சி கூட்டத்தில் மேயர் இந்திராணி எச்சரிக்கை

மதுரை: ரூ.100 கோடி வரி பாக்கியை வசூல் செய்ய இலக்கு நிர்ணயித்து மண்டலம் வாரியாக வரி பாக்கி வைத்துள்ள டாப்-10 நிறுவனங்களுக்கு ‘சீல்’ வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகராட்சி கூட்டத்தில் மேயர் இந்திராணி எச்சரிக்கை விடுத்துள்ளார். மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் இன்று நடந்தது. ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங், துணை மெயர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். மேயர் இந்திராணி பேசுகையில், ‘‘சிறப்பு நிதி, பொதுநிதியை கொண்டு தார்சாலைகள், பேவர் … Read more

புதுச்சேரி சிறந்த வளர்ச்சியை பெற்றுவருவதனால்தான் ஜி 20 மாநாடு இங்கு நடக்கவுள்ளது – முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் சிறந்த வளர்ச்சியை பெற்று வருவதன் வாயிலாகத்தான் ஜி20 மாநாடு இங்கு நடைபெற இருக்கின்றது என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். குடியரசுத் தினத்தை முன்னிட்டு தியாகிகளைக் கவுரவிக்கும் விதமாக தேநீர் விருந்து புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது. முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு தியாகிகளைக் கவுரவித்து பேசினார். அதில், “நாட்டின் விடுதலைக்காக போராடிய தியாகிகளில் மிக முக்கியமானவர்கள் புதுச்சேரியில் இருந்தார்கள். அவர்களின் போராட்டத்தின் வாயிலாக நம்முடைய நாடு விடுதலை அடைந்தது. நமது நாட்டின் கலை, … Read more

மதுரை | கவனம் ஈர்க்கும் அரசுப் பள்ளி மாணவி எழுதிய ‘ஓட்டுப்போட வா’ விழிப்புணர்வு பாடல்

மதுரை: மதுரை மேலூரில் இன்று தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு அப்பள்ளியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி சுபலட்சுமி எழுதிய ‘ஓட்டுப்போட வா’ என்னும் விழிப்புணர்வு பாடல் குறுந்தகடு வெளியிடப்பட்டது. மதுரை மாவட்டம் மேலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி உதவித் தலைமையாசிரியர் சண்முகவேல் தலைமையில் நடைபெற்றது. வார்டு கவுன்சிலர் ஆயிஷாபேகம் முன்னிலையில் மாணவர்கள், ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதனையொட்டி, பிளஸ் … Read more

பத்ம விருதுகள்: தமிழகத்தில் யார் யாருக்கு விருது?

புதுடெல்லி: பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராம் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த ஐவருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. குடியரசு தினத்தை முன்னிட்டு 2023-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 128 பேருக்கு புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் 3 பேருக்கு … Read more

2012-ல் பள்ளிப் பேருந்து ஓட்டை வழியே விழுந்து சிறுமி ஸ்ருதி உயிரிழந்த வழக்கு: 8 பேரும் விடுதலை

சென்னை: கடந்த 2012-ம் ஆண்டு தனியார் பள்ளிப் பேருந்தின் ஓட்டை வழியே விழுந்து சிறுமி ஸ்ருதி உயிரிழந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 8 பேரையும் விடுதலை செய்து செங்கல்பட்டு கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு தாம்பரத்தை அடுத்த சேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் சிறுமி ஸ்ருதி 2-ம் வகுப்பு படித்து வந்தார். அந்தப் பள்ளிக்குச் சொந்தமான பேருந்தில் சிறுமி ஸ்ருதி தினந்தோறும் பள்ளி சென்றுவந்தார். இந்நிலையில், 2012-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி, பள்ளி … Read more